வியாழன், 18 மே, 2023

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம்
சிவபெருமான் கட்டளைப்படி மன்னன் கூன் பாண்டியனால் கட்டப்பட்ட திருக்கோயில் ஆம்பலாப்பட்டு அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலைக்கு தெற்கில் அமைந்துள்ளதால் இது தென்திருவண்ணாமலை என வழங்கப்பெற்றது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிக்கொள்பவர்கள் அங்கு செல்லமுடியாத பட்சத்தில் இந்த கோவிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
நான் மாடக்கூடல் என அழைக்கப்படும் மதுரையில் 64 திருவிளையாடல்களை நிகழ்த்திகாட்டிய சிவபெருமான் பாண்டிய மன்னன் மூலம் ஆம்பலாப்பட்டில் சிவாலயம் கட்ட வேண்டும் என திருஉள்ளத்தில் நினைத்தார் போலும் அதற்கான தருணம் கூன்பாண்டியன் வாயிலாக அமைந்தது. “மதுரையை ஆட்சி செய்த மன்னன் கூண்பாண்டியன் சைவ சமயத்தைச் சேர்ந்த சிவனடியார்களுக்குதீங்குகள் செய்து வந்தான், இதைக்கண்டு மனம் வருந்திய அவரது மனைவி மங்கையர்க்கரசி சைவநெறி தழைத்தோங்கு விரும்பி திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைக்க திட்டமிட்டார். திருஞானசம்பந்தர் வேதாரண்யத்தில் இருப்பதை அறிந்து அங்கு ஆட்களை அனுப்பி அவரை மதுரைக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட திருஞானசம்பந்தரும் சிவனடியார்களும் புடைசூழ மதுரை வந்தார். பின்னர் அவர் சொக்கநாதர் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டார்”. இதைகண்ட சமணர்கள் ஆத்திரமடைந்து பாண்டிய மன்னரிடம் சென்று செய்தியை தெரிவித்தனர். உடனே கூன்பாண்டியன் இவர்களை மதுரையில் இருந்து வெளியேறும்படி உத்திரவிட்டான். சமணர்களும் அன்று இரவே திருஞானசம்பந்தர் தங்கி இருந்த மடத்துக்கு தீவைத்தனர். ஆனால் இந்த நெருப்பு சிவனடியார்களை ஒன்றும் செய்யவில்லை.
திருஞானசம்மந்தரோ “இந்த தீ பையவே சென்று பாண்டியருக்கு ஆகவே” என்று பாடினார். சம்பந்தர் வாக்கு உடனே பலித்தது. அந்த தீ மன்னனிடம் சென்று அவனுக்கு வெப்ப நோயை உண்டாக்கியது. அந்த நோயை பலரும் போக்கிட முயற்சி செய்தனர் அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை. நோயின் கொடுமை அதிகரித்துக்கொண்டே சென்றது. அதனால் நோயின் கொடுமை தாங்காது சபையோர் மன்னனிடம் சென்று திருஞானசம்பந்தருக்கு தீங்கு செய்ய நினைத்தால் தான் இந்த நோய் ஏற்பட்டு இருக்கிறது. எனவே திருஞானசம்பந்தரை இங்கு அழைத்தால் நோய் குணமாகும் என்றனர். அதற்கு மன்னன் இசைவு தர மங்கையர்கரசியின் வேண்டுகோளை ஏற்று திருஞானசம்பந்தர் அரண்மனைக்குச் சென்றார். “மந்திரமாவது நீறு” என்ற திருநீற்று பதிகத்தை பாடி மன்னனின் நெற்றியில் தன் திருகரத்தால் திருநீற்றை பூசினார். அவரது வெப்ப நோய் உடனடியாக தீர்ந்தது. மன்னன் திருஞானசம்பந்தரை வணங்கினான். திருஞானசம்பந்தர் மன்னரிடம் அரசே! இறைவன் அருளால் உன் உடலை அக்னியாய் தகித்த வெப்ப நோய் நீங்கியது எனவே பஞ்ச பூதங்களின் ஒன்றான (நெருப்பு) திருவண்ணாமலை சென்று இறைவனை தரிசனம் செய்து வரவேண்டும் என்றார். அதன் பேரில் கூன்பாண்டியன் மங்கையர்கரசி ஆகியோர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர்.
கனவில் தெரிந்த காட்சி:
தஞ்சை மாவட்டம் ஆம்பலாபட்டு கிராமத்தை அடைந்த போது அந்தி சாய்ந்து விட்டதால் அங்கேயே தங்கினார்கள். கூன்பாண்டியன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது கனவில் தோன்றிய ஈசன் எனக்கு இங்கேயே கோவில் கட்டு என்றார். அதன்படியே அங்கே மன்னன் கோவில் கட்டினான். அதற்கு அண்ணாமலையார் திருநாமத்தை சூட்டினார் என்கிறது தலபுராணம்.
வழுவா வண்ணம்அறுமே – திருஞானசம்பந்தர்
அடி, முதல் காண பூமிக்குள் பன்றி உருவில் தேடிய விஷ்ணுவுக்கும், தலைமுடியை விண்ணில் கண்டுவிட பருந்து வடிவில் பிரம்மனுக்கும் ஆதி அந்தம் இல்லாத அருட்பெருஞ்ஜோதிவடிவாக சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்தார். இதனால் அண்ணாமலையார் என அழைக்கப்பட்டார். சிவபெருமான் ஜோதி வடிவான காட்சி கொடுத்ததும் தேவிக்கு இடப்பாகம் கோடுத்து அருளியதும் திருகார்த்திகை திருநாளில்தான். இதனால் தான் சிவாலயங்களில் சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூறும் விதத்தில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
கூன்பாண்டியன் கட்டிய தென்திருவண்ணாமலையார் கோவில் காலப்போக்கில் பராமரிப்பின்றி கோவிலுக்கு முன்னோர்கள் தானம் வழங்கிய நிலத்திலிருந்து கிட்டிய குத்தகை வருவாயில் பூஜைகள் மட்டும் நடைபெற்றது. புல், புதர் நிறைந்த இடமாக மாறி போயிற்று. பக்தர்கள் யாரும் வராத நிலையில் பாம்புகள் போன்ற விஷஜந்துக்கள் நடமாட்டம் அங்கே நிறைந்துக்காணப்பட்டன. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கட்டிடங்கள் இடிந்து போகும் நிலையானது. இந்நிலை வெகு காலமாக இருந்தது. மீண்டும் திருப்பணிகள் செய்து முடிக்க யாரும் முன்வராத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஆம்பலாப்பட்டில் இன்னிசை வீணை முழங்கவும், தோத்திரபாடல்கள் இசைக்கவும், ஆலயமணி அசைந்தாடி ஒலிஎழுப்பும் ஓசையை கேட்கவும் ஈசன் திருஉளவும் கொண்டனர்.
சித்தன் போக்கு சிவன் போக்கு என்பர் செயற்கரிய செய்தவர்கள் சித்தர்கள். அகங்காரம் என்ற பேயை அகழ்ந்து எரிந்தும் மனமென்னும் குரங்கை அடக்கியும் புத்தி தெளிந்த சித்தர்கள் மட்டுமே சிந்தையை ஊன்றி சிவத்தோடு கலந்து இருப்பார்கள். வாழ்ந்தபோது பசியினையும் சிற்றின்பங்களையும் மரணத்தையும் வென்று பெறு பெற்றவர்கள் சித்தர்கள். உலகியலில் எல்லாவற்றிலும் தாமரை இலை தண்ணீர்போலும், புளியம்பழம் ஓடு போலவும் இருந்து வந்தகாரணத்தை அறிந்துக்கொண்டு காரியம் கொண்டு செயல்பட்டார்கள். அன்னதானத்தின் பெருமையை உணர்ந்து அதற்காகவே இல்லறம் நடத்தி வாழ்ந்து வழிகாட்டினர். ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டி பாடல்களைப் பாடியவர்கள் தர்மம் தழைக்க தவம்புரிந்துக்கொண்டு வாழ்ந்தனர். பலரின் உண்மையான வேண்டுதல்களை செவிசாய்த்து அதை இறைவனிடம் தெரிவித்து நிறைவேற்றிவைப்பதும் சித்தரே. தன்னல மற்றவர்களாக இருந்து அரசு நடத்த அறிவுறுத்தினார்கள். பல மருத்துவர்களாலும் பார்த்து தீராத நோய்களையும் இனி கடவுள்தான் காப்பாற்றுவான் என்பதையும் தங்களது அரிய சித்தியால் நீக்கி அற்புதம் படைப்பார்கள்.
1999 முன்பு வரை மனம் போன போக்கில் வாழ்ந்து வந்த இன்றைய சித்தர் மகேந்திரன் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்குழாய் கிணறு தோன்டி விவசாயம் செய்ய எத்தனித்து பணியை தொடங்கி நடந்து கொண்டிருந்த வேலையில் பாண்டிய மன்னனால்1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பராமரிப்பு போதாமல் சிதிலமடைந்திருந்த இந்த சிவாலயத்தின் வழியில் வருவதும் போவதுமாக இருப்பார்.
அப்போது பின்னால் இருந்து கூப்பிடுவது போல இருக்கும் திரும்பி பார்த்தால் யாரும் தென்படமாட்டார்கள் “அப்படி ஒரு தினத்தில் வெய்யில் நேரத்தில் இளைப்பாறுவதற்காக கோவில் முன்பாக இருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்த நிலையில் மரத்தை சுற்றி கிடந்த சருகுகளையும், முட்களையும் கூட்டி சுத்தம் செய்து எரித்து விட்டு அசதியில் கண்ணயர்ந்து தூங்கிய நிலையில் திடிரென்று விழிப்பு ஏற்பட்டு பார்த்த போது ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து ஆடி அந்த நெருப்பின் மீது மூன்று முறை சத்தியம் செய்வது போலை தரையில் அடித்தது. அதை பார்த்து திகில் அடைந்த மகேந்திரன் குழம்பிய மநிலையில் இருந்தபோது ஒரு நாள் இறைவன் கனவில் தோன்றி நீ அமர்ந்த இடத்தில் கீழ் ஒரு கல் புதைந்து உள்ளது அதை தோண்டி எடு என்று யாரோ சொல்வதைப் போல இருந்தது. இது அடிக்கடி நடக்கவும் ஒரு நாள் பூமிக்கு கீழ் தோண்டி பார்த்த போது அங்கு கல் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் என்னை தோண்டி எடு என்ற குரல் கேட்ட வண்ணம் இருந்தது. இப்போது மகேந்திரன் ஏற்கனவே தோண்டிய இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி தோண்டி பார்த்தார். அப்போது நீளவடிவில் ஒரு கல் கிடைத்தது. அதை எடுத்து வெளியில் போட்டு அதில் அமர்ந்தும், படுத்தும் இருப்பார், அப்போது அவருள் ஒரு அபார சக்தி உட்புகுந்ததைப்போல் தோன்றும்”. ஒரு நாள் அவர் கல்லின்மீது அமர்ந்து இருந்தபோது இந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி கோபுரம் அமைத்து வழிபடு என்று கூறியது போன்று கேட்டது. உடனே “நானே ஒரு ஏழை! மன்னாதி மன்னனால் கட்டிய கோவிலை சாதாரண மகேந்திரன் கட்ட முடியுமா? வேடிக்கையாக இருக்கிறது” என கூறி சிரித்தார். அப்போது கோவில் கட்டுவதற்கு நான் உதவுகிறேன். நீ இந்த கல் மீது அமர்ந்துகொள். உன்னை தேடி வருபவர்களுக்கு அருள்வாக்கு கூறு. அது பலிக்கும் அதன் மூலம் நீ நினைத்த செயலை செய்து முடிப்பாய் என அசரீரி உத்தரவிட்டது. அது முதல் விவசாயி மகேந்திரன் சித்தர் சிவராஜ மகேந்திர சுவாமிகள் ஆனார். தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு இறைவனின் அருளாசியுடன் குறை தீர்த்து வருகிறார். தீராத நோய், மகப்பேறின்மை, கடன் தொல்லை, கல்வியறிவு, வேலையின்மை, குடும்பத்தில் அமைதியின்மை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளால் அல்லாடி வரும் பக்தர்கள் தனது அமைதியினை வழங்கும் ஆசிரமத்தில் அமர்ந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்வாக்கு கூறி அன்பர்களின் பிரச்சனைகளை தீர்த்து வருகிறார். அருள்வாக்கு பற்றி மகேந்திர சுவாமிகள் கூறும் போது ஒருவர் பிரச்சனைகளுடன் என்னை தேடி வரும்போது அதற்கு முன்னதாகவே அவர் யார் என்ன பிரச்சனைகளுடன் வருகிறார் அவருக்கு என்ன பரிகாரம் கூறுவது என்று இறைவன் கருணையால் தெரிந்துவிடும் அதன் அடிப்படையில் அருள் வாக்கு கூறி வருகின்றேன். மேலும் அவர் கூறும் போது இறைவன் எனக்கு கோவில் கட்டும்படி கட்டளையிட்டார். மன்னர்கள் கட்டிய கோவிலை சாதாரணமாக நான் எப்படி கட்ட முடியும். அதற்கான வசதி வாய்ப்பு எனக்கு கிடையாது என்று தயங்கினேன்.
அதற்கு பாரத்தை என்னிடம் ஒப்படைந்துவிட்டு வேலையை தொடங்கு என்று கட்டளை இட்டான். இறைக்கட்டளையை சிரமேற்கொண்டு வேலையை தொடங்கினேன் 126 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்ட தீர்மானித்தேன் அரசு அனுமதியின் பேரில் கட்டுமானப் பொருட்கள் பக்தி மணமும், தொண்டுள்ளமும் கொண்ட பெருந்தகைகளிடமிருந்து வந்து சேர்ந்தன.
பொருட்கள் வர தாமதமானால் இறைவனிடம் சென்று முறையிடுவேன். மறுநாள் தானாக அவை வந்து சேர்ந்துவிடும். இறைவன் கருணையாலும் கிராம மக்கள் அனைவரின் ஒத்துழைப்பாலும் தற்போது 126 அடி உயரத்தில் 7 மாட நிலைகளுடன் 500 மேற்பட்ட சிற்பங்களுடன் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. பஞ்சவர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கட்டுமான பணி 2005 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது முடிக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு 54 அடி உயரத்தில் நுழைவு கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த மகாதேவியின் அதிசய கோபுரம் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும். “கோவிலில் 1.5கி. மீட்டர் தூரத்தில் வருணலிங்கம், இந்திரலிங்கம், குபேரலிங்களம் உள்ளிட்ட அஷ்டலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பவுர்ணமி அன்று கிரிவலம் நடத்தப்பட்டு வருகிறது”. மேலும் கோவிலின் குளத்தில் ரூ.6 கோடி செலவில் தண்ணீரும் கீழே சென்று தரிசிக்கும் வகையில் நவகிரக சன்னதிகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
தல இருப்பிடம்
79.25. கிழக்கு தீர்க்கம், 10.5. வடக்கு அட்சம் 
நெடிதுயர்ந்த தென்னை மரங்கள், வனப்புமிக்க வாழை, சிந்தைக்கு விருந்தளிக்கும் கானப் பறவைகளின் சங்கீத ஞானம், இவற்றுடன் நஞ்சையும், புஞ்சையும் இயற்கை எழில் நிறைந்த இடத்தில் ஆம்பலாபட்டு அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்காவில் பாப்பநாடு என்ற இடத்தில் இருந்து கிழக்கு திசையில் 4கி. மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டையில் இருந்து ஆம்பலாப்பட்டுக்கு நகர பேருந்துகள் செல்கின்றது. சென்னையில் இருந்து வருபவர்கள் திருச்சி, தஞ்சை வந்து தஞ்சையில் இருந்து 30 கி.மீட்டர் தூரம் ரோடு வழியாக பயணித்தால் சூரக்கோட்டை, ஒரத்தநாடு, பாப்பநாடு வழியாக கோவிலை அடையலாம். மன்னார்குடியில் இருந்து 19கி. மீட்டர் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது. ரெயில் மூலம் வருபவர்கள் தஞ்சை, பட்டுக்கோட்டை வழியாக அங்கிருந்து பஸ், கார்களில் வரலாம். கோவிலில் பக்தர்கள் தங்கி செல்ல வசதி உண்டு. பட்டுக்கோட்டை, தஞ்சையில் விடுதி வசதிகள் உள்ளன.
மூர்த்திகள்
இத்தலத்தின் மூலவர் அண்ணாமலையார் இறைவியின் பெயர் உண்ணாமுலையம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், சிவன், பார்வதி, துர்கை, அஷ்டதுர்கா, ஞான சண்டிகேஸ்வரர், சொர்ணபைரவர், நவக்கிரகங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. இடும்பன், வீரபத்திரனுக்கு தனி சன்னதிகள் உள்ளது. கோவிலுக்கு வெளியில் தீர்த்தக் குளம் உள்ளது. இங்கு நீராடினால் நீராடுபவர்களின் உடல்பிணியையும், பிறவி பிணியையும் போக்குகின்றன.
தல விருட்சம் இலுப்பை மரம்
கோவில் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. தொல்பொருள் இலாகா பாதுகாப்பிற்குட்பட்டது.
தினப்பூஜையும், திருவிழாக்களும்
இத்திருக்கோவிலில் தினந்தோறும் காலை 6.30 மணிக்கு மாலை 6.30 மணிக்கு வரை இருகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் தைப்பூசம் மாசி மகம் பங்குனி உத்திரம், சித்திராபவுர்ணமி, கைவகாசி விசாகம், ஆடி அமாவாசை, கார்த்தினை தீபம் தினங்களில் விஷேச பூஜைகள் நடைபெறும், சித்ரா பவுர்ணமியின் போது பக்தர்கள் காவடி எடுத்து வருவர். கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத்தை போன்று விஷேசமாக தீபம் ஏற்றி கொண்டாடப்படும். தைப் பூசத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும், பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறும்.
தங்கம் அருளும் சொர்ணபைரவர்
இக்கோவிலில் உள்ள சொர்ணபைரவர் ஆற்றல் மிக்கவர் இவரை வணங்கி வழிபட்டு பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் இவர் தங்கம் அருள்வதாக ஐதிகம். பணப்பிரச்சனை, அரசாங்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளும் நீங்கும்.
மழலைச்செல்வம் பெற மண்சோறு சாப்பிடும் பக்தர்கள்
இக்கோவிலில் நீண்ட காலம் குழந்தை இல்லாத தம்பதியர்கள் கோவிலுக்கு வந்து தீர்த்தத்தில் நீராடி சுவாமி அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவர்கள் கருப்பையில் கருத்தரித்து பத்துமாதங்களில் அவர்கள் இல்லங்களில் குழந்தை செல்வம் தவழும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து மண்சோறு சாப்பிட்டுச் செல்கின்றனர்.
கோவிலின் அமைப்பு
வான் பொய்பினும் தான் பொய்யா வற்றாத ஜீவநதியாம் காவிரி வடகாடு சங்கம கிளையின் தென்கரையோரம் கோவில் அமைந்துள்ளது. ஊருக்குள் நுழைந்தவுடனே வானை தொட்டுவிடும் விதத்தில் பிரம்மாண்டமாக 126 அடி உயரத்தில் 7 நிலை மாடங்களுடன் 500 க்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் கூடிய ராஜகோபுரம் நமது கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கிறது. உள்ளே அர்த்த மண்டபம், மகாமண்டபம் உள்ளன. கொடிமரம் முன்பு வீற்றிருக்கும் நந்தீஸ்வரரிடம் அனுமதி பெற்று சிவ தரிசனம் செய்ய செல்ல வேண்டும். கருவறையில் மூல லிங்கமாகிய அருள்மிகு அண்ணாமலையார் எழுந்தருளியுள்ளார். வாயிலில் துவார பாலகர்கள் உள்ளனர். அருள்மிகு அண்ணாமலையார் லிங்க வடிவில் சதுரபீடத்தில் சுயம்புலிங்கமாக விளங்குகிறார். இவரது சன்னதியின் வடபுறத்தில் அருள்மிகு உண்ணாமுலையம்மன் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் திகழ்வதைக் காணலாம். இந்த உல கநன்மைக்காக பக்தர்களை காத்து அருள்புரிய அவனியில் பூத்தவள். பூத்தவண்ணம் காத்து அருளாசி புரிந்து வருகிறாள். கோபுரவாசலில் சிம்ம பலிபீடம் உள்ளது. அம்பிகை கோயிலின் எதிரில் 54 அடி உயரத்தில் கோபுரம் அழகுற கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மகாதேவ்சன்னதி அம்மன் சன்னதி சந்திப்பில் மேற்கூரையில் பாண்டிய மன்னனின் சின்னமான மீன் வேப்பம்பூ சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். மேலும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் கோயிலுக்கும் பாண்டிய மன்னருக்கும் இருந்த தொடர்புகள் தெரியவருகிறது.
வழிபாட்டில் உள்ள சந்நதிகள்:
கோவிலில் பிரகாரத்தை வலம் வரும் போது விநாயகர், தட்சணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேத முருகன், துர்க்கை, சொர்ணபைரவர், நவகிரகங்கள், சன்னதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை அமர்ந்து இருக்கும் வரை மகா மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 9 பிப்ரவரி, 2023

தர்பை

*தர்பை*

தர்ப்பையினால்  செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்பு பவித்ரம்  என்று அழைக்கிறோம்.

பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்.

இந்த பவித்ரம்  செய்யப்படும் கர்மாவுக்கு ஏற்ப தர்ப்பை புல்லின் எண்ணிக்கை மாறுபடுகிறது.

அவை :-

1) ப்ரேத கார்யங்களில் ஒரு தர்ப்பை

2) சுப கர்மாவில் 2 தர்ப்பை

3) பித்ரு கர்மாவில் 3 தர்ப்பை

4) தேவ கர்மாவில் 5 தர்ப்பை

5) சஷ்டியப்த பூர்த்தி போன்ற சாந்தி கர்மாவில் 6 தர்ப்பை

தேவ கார்யங்களுக்கு கிழக்கு நுனியாகவும் பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் உபயோகப்படுகிறது.

ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன. ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன.

குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.

கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. ஏனென்றால் தர்ப்பை வழியாக ப்ராண சக்தி கும்பத்துக்குள் வருகிறது.

கல்யாணத்தில், கல்யாண பெண்ணிற்கும், சீமந்தத்திற்கும், அதே மாதிரி உபநயனத்தில் வடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.

உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் ஆஸனத்தைத்  தவிர மற்றதுக்கு  உபயோகப் படுவதில்லை.

தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் (பாய்) மிகவும் விசேஷம். தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு.

க்ரஹண காலங்களில் ( சூர்ய மற்றும் சந்திர ) இல்லத்தில் ஏற்கனவே பக்குவமாகி இருக்கும் பதார்த்தங்களிலும், குடிநீரிலும் தர்பங்களை போட்டுவைத்தால் எந்த வித தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.

பிராமணனுக்கு தர்பை புல் ஓர் ஆயுதம். முனிவர்களும், ரிஷிகளும் தர்ப்பைப்புல், தண்ணீர், மந்திரசத்தி மூன்றையும் இணைத்து செயற்கரியா செயல்களை செய்தனர்.

வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களை பிரயோகிதனர்.

பிரபஞ்சத்தில் பிராணசக்தியை கடத்தும் சக்தி தர்ப்பைக்கு உண்டு. அதனாலேயே சங்கல்பத்தில் "தர்பான் தாரயமான:" என்று விரலில் இடுக்கிக் கொண்டு பிராணயாமம் செய்கிறார்கள்.

குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:

ச நித்யம் ஹிந்தி பாபானி தூல ராசிமிவாநல:

கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராமணன் அகங்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாவங்களை அழிக்கவல்லான்.

தர்பை ஒரு சிறந்த மின் கடத்தி.!
அது ஆற்றலையும் கடந்த வல்லது.!

தர்ப்பையை உபயோகப்படுத்திய பின், அதை நான்காக பிரித்து வடக்கு பக்கமாக போடவேண்டும். பின்பு கண்டிப்பாக ஆசமனம் செய்தால்தான், நாம் தர்பையை உபயோகித்து செய்த கர்ம பலன் அளிக்கும்.!
*********************************************
       நன்றி
இப்படிக்கு
ஆன்மீக ஆராய்ச்சியாளர்
ஜோதிட ஆலோசகர்

திங்கள், 23 ஜனவரி, 2023

TNPSC*-இல் எத்தனை குரூப் உள்ளது?

 *இளைஞர்களே* இதனை தெரிந்துகொண்டு இனியாவது கல்வியில் முன்னுக்குவாருங்கள்.

*TNPSC*-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? 
*குரூப் 7, 8 பற்றி தெரியுமா?*

*TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு?*

How Many Groups in TNPSC?

குரூப் – 1, 
குரூப் – 2, 
குரூப் – 3, 
குரூப் – 4, 
குரூப் – 5, 
குரூப் – 6, 
குரூப் – 7, 
குரூப் – 8

*குரூப் – 1 சேவைகள்* 
(Group-I) 

1)துணை கலெக்டர் 
(Deputy Collector) 
2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police) 
3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை 
(District Registrar, Registration Department) 
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) 
4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector) 
5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) 
6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர் 
(Div. Officer in Fire and Rescue Services) 
7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner) 
8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)

*குரூப் – 1A சேவைகள்* 
(Group-I A) 

1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)

*குரூப் – 1B சேவைகள்*
 (Group-I B) 
1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)

*குரூப் – 1C சேவைகள்*
 (Group-I C)

1)மாவட்ட கல்வி அலுவலர் DEO 
(District Educational Officer)
2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2 

*குரூப் – 2 சேவைகள்* 
(நேர்முகத்தேர்வு பதவிகள்)
(Group-II) 
1)துணை வணிக வரி அதிகாரி 
2)நகராட்சி ஆணையர், தரம் -2 
3)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்) 
4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்) 
5)துணை பதிவாளர், 
தரம் -2 
6)தொழிலாளர் உதவி ஆய்வாளர் 
7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை) 
8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை) 
9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை) 
10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு 
உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர் 
11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை 
12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு 
நன்னடத்தை அலுவலர், 13)சிறைத் துறை 
தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் 
14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு 
15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் 
16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, 
17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை 
19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிடர் மற்றும் ....
 பழங்குடியினர் நலத்துறை தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர் 
இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை 
உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை
மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை 
உதவி ஜெயிலர், சிறைத்துறை.
வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில் 
நிர்வாக அதிகாரி, 
தரம் -2 டி.வி.ஐ.சியில் 
சிறப்பு உதவியாளர் 
கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில் 
சிறப்பு கிளை உதவியாளர். 
பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு 
தொழிலாளர் உதவி ஆய்வாளர் 
தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில்.

*குரூப் – 2A சேவைகள்* (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A) 

கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர் 
ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில் 
உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர) 
இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை 
தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர) 
தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை) 
தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை) 
தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு 
தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம் 
தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை 
உதவியாளர் பல்வேறு துறைகள் 
செயலகத் துறையில் உதவி (நிதித்துறை) 
தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர் 
தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம் 
திட்டமிடல் இளைய உதவியாளர் 
வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை) 
சட்டத்துறையில் உதவியாளர் 
தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3

*குரூப் – 3 சேவைகள்* 
(Group-III)
தீயணைப்பு நிலைய அதிகாரி

*குரூப் – 3A சேவைகள்* 
(Group-III A) 
கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர் 
தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் 
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2

*குரூப் – 4 சேவைகள்* 
(Group-IV) 
ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத) 
பில் கலெக்டர் 
தட்டச்சு செய்பவர் 
ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3 
கள ஆய்வாளர் 6. வரைவாளர்

*குரூப் – 5A சேவைகள்* 
(Group-V A)

செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)

*குரூப் – 6 சேவைகள்* 
(Group-VI)
வன பயிற்சியாளர்

*குரூப் – 7A சேவைகள்*
(Group-VII A) 
நிர்வாக அதிகாரி, 
தரம் -1

*குரூப் – 7B சேவைகள்* 
(Group-VII B) 
நிர்வாக அதிகாரி, 
தரம் – 3

*குரூப் – 8 சேவைகள்* 
(Group-VIII) 
நிர்வாக அதிகாரி, 
தரம் – 4

இத்தனை தேர்வுகள் பற்றிய நம்மில் பலருக்கு முறையான வழிகாட்டல் இல்லாததால் நம்மில் பலர் TNPSC தேர்வுகளைப் பற்றிய தவறான கருத்துக்களை ஒரு சில விஷமிகள் பரப்பி வருகின்றனர். 

இது போட்டித் தேர்வுகளில் போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க செய்து வருகின்றனர். ஆகையால் போட்டித்தேர்வர்கள் தவறான தகவல்களை நம்பாமல் அனைவcரும் பயின்று விரைவில் அரசு பணியில் அமர வாழ்த்துக்கள்.👍

திங்கள், 14 நவம்பர், 2022

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்:

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்:
சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே

மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்   அருளியது  எந்த காரியத்திற்காக  கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு  அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.

ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து  மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின்  பிரயோகம்:-

1.சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர  சர்வ வசீகரம் உண்டாகும்.

2.ரஹணபவச - என தொடர்ந்து ஜெபித்து வர  செல்வம், செல்வாக்குடன் கூடிய  வளவாழ்வு உண்டாகும்.

3.ஹணபவசர - என தொடர்ந்து ஜெபித்து வர  பகை,பிணி நோய்கள் தீரும்.

4.ணபவசரஹ - என தொடர்ந்து ஜெபித்து வர  எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள்  நீங்கும்.

5.பவசரஹண - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள்   வரை  நம்மை விரும்பும்.

6.வசரஹணப - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது  கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும்  வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து  வழிபடவும்.மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம்.டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.

ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து   (அதாவது மேலே முதலாவது கோணம் ) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில் ''றீங்'' என்று எழுதி ஜெபம்  செய்து அந்த விபூதியை அணிந்து வர  விரைவான சிறந்த பலன் உண்டாகும்.

மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் ஓம் றீங் எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும்.
உதாரணமாக :-

சர்வ வசீகரம் வேண்டி ''சரஹணபவ'' என ஜெபிக்கவேண்டும் அதை ''ஓம் றீங் சரஹணபவ'' என ஜெபிக்க வேண்டும்.

சனி, 22 அக்டோபர், 2022

பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள்.

**பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும்.**


1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி
2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி
3. ஓம் அனுகூலனே போற்றி
4. ஓம் அருந்துணையே போற்றி
5. ஓம் அண்ணலே போற்றி
6. ஓம் அருள்வடிவே போற்றி
7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி
8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி
9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி
10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி
12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
13. ஓம் ஆதரிப்பவனே போற்றி
14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி
15. ஓம் இனியவனே போற்றி
16. ஓம் இணையிலானே போற்றி
17. ஓம் இடப உருவனே போற்றி
18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி
19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி
20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி
21. ஓம் ஈர்ப்பவனே போற்றி
22. ஓம் ஈடில்லாதவனே போற்றி
23. ஓம் உத்தமனே போற்றி
24. ஓம் உபகாரனே போற்றி
25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி
26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி
27. ஓம் எளியவனே போற்றி
28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
29. ஓம் ஐயனே போற்றி
30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
31. ஓம் கனிவுருவே போற்றி
32. ஓம் களிப்புருவே போற்றி
33. ஓம் களங்கமிலானே போற்றி
34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி
35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி
36. ஓம் கயிலைக் காவலனே போற்றி
37. ஓம் கம்பீர உருவனே போற்றி
38. ஓம் குணநிதியே போற்றி
39. ஓம் குருபரனே போற்றி
40. ஓம் குறை களைவோனே போற்றி
41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி
42. ஓம் கோயில் நாயகனே போற்றி
43. ஓம் சிவபுரத்தனே போற்றி
44. ஓம் சிவதூதனே போற்றி
45. ஓம் சிவனடியானே போற்றி
46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி
47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி
48. ஓம் சிவஞான போதகனே போற்றி
49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி
50. ஓம் சிரஞ்சீவியே போற்றி
51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி
52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி
53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி
54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி
55. ஓம் ஞானியே போற்றி
56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி
57. ஓம் தருமவிடையே போற்றி
58. ஓம் தயாபரனே போற்றி
59. ஓம் தளையறுப்பவனே போற்றி
60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி
61. ஓம் தவசீலனே போற்றி
62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி
63. ஓம் தீதையழிப்பவனே போற்றி
64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி
66. ஓம் நந்தியே போற்றி
67. ஓம் நலமளிப்பவனே போற்றி
68. ஓம் நமனை வென்றவனே போற்றி
69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி
70. ஓம் நாடப்படுபவனே போற்றி
71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி
72. ஓம் நாதனே போற்றி
73. ஓம் நிமலனே போற்றி
74. ஓம் நீறணிந்தவனே போற்றி
75. ஓம் நீதி காப்பவனே போற்றி
76. ஓம் பராக்கிரமனே போற்றி
77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி
78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி
79. ஓம் பகை அழிப்பவனே போற்றி
80. ஓம் பதமளிப்பவனே போற்றி
81. ஓம் பர்வதமானவனே போற்றி
82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி
83. ஓம் புண்ணியனே போற்றி
84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி
85. ஓம் பெரியவனே போற்றி
86. ஓம் பெருமையனே போற்றி
87. ஓம் மஞ்சனே போற்றி
88. ஓம் மலநாசகனே போற்றி
89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி
90. ஓம் மறையே கால்களானவனே போற்றி
91. ஓம் மால்விடையே போற்றி
92. ஓம் மகாதேவனே போற்றி
93. ஓம் முனியவனே போற்றி
94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி
95. ஓம் யோகியே போற்றி
96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
97. ஓம் வள்ளலே போற்றி
98. ஓம் வல்லாளா போற்றி
99. ஓம் வித்தகனே போற்றி
100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி
101. ஓம் வீர உருவமே போற்றி
102. ஓம் வீரபத்திரனே போற்றி
103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி
106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி
107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி 

செவ்வாய், 11 அக்டோபர், 2022

சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள்

சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள்

 சில வார்த்தைகள் இணையும்போது , அதற்கு அபரிமிதமான சக்தி கிடைத்து விடுகிறது. மந்திரங்கள், நாம ஜெபங்கள் - அப்படி உருவானவையே. இந்த கட்டுரையில் , குறிப்பிட்ட சில பலன்கள் பெற எந்த எந்த மந்திரங்களை  உபயோகப்படுத்தலாம் என்று கீழே தந்துள்ளேன். 

நம் , வாசகர்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை பயன்படுத்திக் கொள்ளவும். 
 

வினைகள் தீர்க்கும் விநாயகர்

விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து
பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.

முதல் தெய்வம் விநாயகர்
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.
காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

ஓம் நமோ நாராயணாய

சிவவாக்கியர் கூறும் மந்திரம் ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம், மனதில் நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்து விடும்.
அஷ்டாக்ஷரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும்.

ஓம் நமோ நாராயணாய
ஓம் என்பது ஓரெழுத்தாகவும், நம என்பது இரண்டெழுத்தாகவும், நாராயணாய என்பது ஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம் எனப்படும். இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். தீமைகள், துன்பங்கள் தொடராது. முக வசீகரம் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் கிட்டும். காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள், உப பாதகங்களிலிருந்து விடுபடுகிறான். எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை.

குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஸ்ரீவல்லப மஹா கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

தன ஆகர்ஷண கணபதி மந்திரம்
ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்
ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம்
ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

விநாயகர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி: ப்ரசோதயாத்

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்
தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

சகல காரிய சித்திக்கான எளிய முறை:

செய்யும் காரியங்களில் தடைகள் விலக
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.

நாகதோஷம் நீங்கி, குழந்தைப்பேறு உண்டாக
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸ:
ஸர்ப்பஹார கடீஸூத்ர: ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந்
ஸர்ப்பகோடீர கடக: ஸர்ப்ப க்ரைவேயகாங்கத:
ஸர்ப்ப கக்ஷதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:
இதைக் கூறினால் குழந்தைப் பேறு உண்டாகும்.

இன்பமாய் வாழ

அநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள:
இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய:
காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:
இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

கல்வியில் மேன்மை பெற
ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந: ஸ்ரீநிகேதந:
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர:
இதைக் கூறினால் கல்வி வளரும்.

சிறந்த செல்வம் பெற
தநதாந்யபதிர் த்ந்யோ தநதோ தரணீதர:
த்யாநைக ப்ரகடோ த்யேய: த்யாநோ த்யாந பராயண:
இதைக் கூறினால் தன தான்யங்கள் பெருகி நன்மை உண்டாகும்.

நோய்கள் நீங்க
நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.
இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

மன பயம் நீங்கி தைரியம் உண்டாக
ப்ரூக்ஷபதத்த லக்ஷ?மீக: பர்கோ பத்ரோ பயாபஹ:
பகவாந் பக்தி ஸுலபோ பூதிதோ பீதி பூஷண:
இதை தினமும் 10 முறை கூற மனதில் பயம் விலகும்.

வியாபாரத்தில் லாபம் உண்டாக

லக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷ?யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய:
லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத:
இதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.

சுகப்பிரசவம் சாத்தியமாக
ஆபிருப்யகரோ வீர ஸ்ரீப்ரதோ விஜயப்ரத
ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப-தோஷஹா புத்ரபௌத்ரத:
இதைப் பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும்.

வழக்குகளில் வெற்றி பெற
மேதாத: கீர்த்தித: ஸோக ஹாரீ தௌர்பாக்யநாஸந:
ப்ரதிவாதி முகஸ்தம்ப: துஷ்டசித்த ப்ரஸாதந:
இதைக் கூறினால் வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகும்.

பில்லி, சூன்யம் அணுகாதிருக்க
பராபிசாரஸமந: து:கபஞ்ஜந காரக
லவஸ்த்ருடி: களா காஷ்டா நிமேஷ: கடிமுஹூர்த்தக:
இதை 108 முறை கூறி விபூதி அணிந்தால், பிறருடைய ஏவல் சூன்யம் முதலியவை நம்மை ஒன்றும் செய்யாது.

நவக்கிரக தோஷம் நீங்க
ராஹுர் மந்த: கவிர் ஜீவ: புதோ பௌம ஸஸீ ரவி:
கால: ஸ்ருஷ்டி: ஸ்த்திர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோஜகத்
இதைப் பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

பூத, பிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க
பூராபோக்நிர் மருத் வ்யோமா அஹம் க்ருத் ப்ரக்ருதி: புமாந்
ப்ரஹ்மா விஷ்ணு: ஸிவோ ருத்ர ஈஸ: ஸக்தி: ஸதாஸிவ:
த்ரிதஸா: பிதர: ஸித்தா: யக்ஷõ: ரக்ஷõஸ்ச கிந்நரா:
ஸாத்யா வித்யாதரா பூதா: மநுஷ்யா: பஸவ: ககா:

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க
அஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக:
அஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத:
அஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுவந்த்யோஷ்ட மூர்த்திப்ருத்
அஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரிய:

ஸ்ரீமஹா கணேச த்யானம்
கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம்
சுக்லாம்பர தரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே
கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாத பங்கஜம்
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே
வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா
மூக்ஷ?க வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
களத் தாள கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்
சலத் சாரு கண்டம் ஜகத்ராண சௌண்டம்
லஸத் தான கண்டம் விபத்பங்க சண்டம்
சிவ ப்ரேம பிண்டம் பஜே வக்ர துண்டம்

தினமும் பெண்கள் கூற வேண்டியது

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே
இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.

செல்வம் கிடைக்க
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:

ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ
என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

மகா லக்ஷ்மி அஷ்டகம்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
ஆத்யந்த் ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
ஸ்த்தூல ஸூக்ஷ?ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ?மி நமோஸ்துதே.
மஹாலக்ஷ?ம்யஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏககாலே படேன் நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:
திரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷ?மீர் பவேன் நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

மஹாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும்

லக்ஷ?மி ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும்.
ஸ்ரீ தேவிஹி அம்ருதோத்
பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
வராரோஹீ ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி
மஹாலக்ஷ?மீ ச ஸுந்தரீ

குபேரர் தியான ஸ்லோகம்
மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்
கருடரத்ந நிபம் நிதிதாயகம்!
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம் !!

குபேர சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம்
ஓம் யக்ஷõய குபேராய வைஸ்வரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா

குபேர காயத்ரீ
ஓம் யக்ஷசாய ச வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி
தன்னோ  ஸ்ரீத  ப்ரசோதயாத்

ஸ்வர்ணாகர்ஷண பைரவ காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி
தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்
இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார்.
ஸ்வர்ணப்ரத
ஸ்வர்ணவர்ஷீ
ஸ்வர்ணாகர்ஷண பைரவ
பக்தப்ரிய
பக்த வச்ய
பக்தாபீஷ்ட பலப்ரத
ஸித்தித
கருணாமூர்த்தி
பக்தாபீஷ்ட ப்ரபூரக
நிதிஸித்திப்ரத
ஸ்வர்ணா ஸித்தித
ரசஸித்தித

செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
ஹூம்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா.

கடன்கள் தீர நரசிம்ம ஸ்தோத்திரம்

1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
2. லக்ஷ?மி யாலிங்கித வாமாங்கம்
பக்தானாம் வர தாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க
சக்ராப்ஜாயுத தரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
5. ஸிம்ஹநாதேன மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
6. ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
7. க்ரூரக்ரஹை : பீடிதானாம்
பக்தானாம் அ பயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
8. வேத வேதாந்த யக்ஞேசம்
ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
9. ய இதம் படதே நித்யம்
ருணமோசன ஸம்ச்ஞிதம்
அந்ருணீஜாயதே சத்ய :
தனம் சீக்ர - மவாப்னுயாத்
அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே
மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்
ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்
மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.
இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11முறை பாராயணம் செய்யவும்.

நீண்ட ஆயுள் பெற, மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருஹ  மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்!

மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
(மார்க்கண்டேயர் அருளியது)
இந்த மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி!
காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
நீலகண்டம் விருபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
அனந்தம் அவ்யயம் சாந்தம் அக்ஷமாலா தரம் ஹரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத்தாயினம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
தேவதேவம் ஜகன்னாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ஸ்வர்க்கா பவர்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்திதியந்த காரணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
கங்காதரம் சஸிதரம் சங்கரம் சூல பாணிநம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
பஸ்மோத் தூளித சர்வாங்கம் நாகாபரண பூஷிதம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதீ பிராணநாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
த்ரயக்ஷம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடாமகுடதாரிணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் ஆதகர்த்தாரம் ஈஸ்வரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
வ்யோமகேசம் வ்ருபாக்ஷம் சந்திரார்க்கிருத சேகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
கல்பாயுர் தேகிமேபுண்யம் யாவதாயுர் அரோகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
சிவேசாரம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம
ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ பிஷஜாம் அபியோ பிஷக்
ம்ருத்யுஞ்ஜய: ப்ர ஸன்னாத்மா தீர்க்கம் ஆயு ப்ரயச்சது

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்
தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

தன்வந்திரி ஸ்லோகம்
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)
பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும். பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.

ஆபத்துக்கள் விலக
சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.
தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.
விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது
தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.

மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் ÷க்ஷõபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

பிருஹஸ்பதி மந்திரம்
இம்மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வதால் செல்வம், அறிவு, சந்தானம் ஆகியவை கிட்டுவதுடன் ஆயுள் அதிகரிக்கும். மேலும் 1, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் குருவாசம் செய்தால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி குருவின் அருள் கிட்டும்.
1. ஸ்ரீ கணேஸாய நம: ஓம்
குருர் ப்ருஹஸ்பதிர் ஜீவ:
ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ தி யோ தீர்க்க-
ஸமஸ்ரு: பீதாம்பரோ யுவா
2. ஸுதா-த்ருஷ்டிர் க்ர ஹாதீஸோ
க்ரஹ-பீடா-அபஹாரக:
தயா-கரஸ் ஸெளம்ய மூர்தி:
ஸுரார்ச்ய: குட்மல த்யுதி:
3. லோக்-பூஜ்யோ லோக-குரு
நீதி-க்ஞோநீதி-காரக
தாரா-பதிஸ்ச ச ஆங்கிரஸோ
வேத-வேத்யோ பிதாமஹ
4. பக்த்யா ப்ரஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா
நாமானி ஏதாநி ய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான்
புத்ரவான் ஸ பவேந் நர:
5. ஜீவேத் வர்-ஸதம் மர்த்யோ
பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜயோத் குரு-தினே
பீத-கந்த-அக்ஷத-அம்பரை:
6. புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச
பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா
பீடா-ஸர்ந்திர் பவேத் குரோ:

கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க
கலைமகளுக்கு குரு ஹயக்ரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். திருமாலின் உருவங்களில் ஒன்றாக விளங்குபவர். கல்வியில் சிறப்படைய இந்த சுலோகத்தைத் தினமும் காலை, மாலை கூறி வந்தால் நல்ல கல்வி கிடைக்கும்.

ஹயக்ரீவர் மூலமந்திரம்
உத்கீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய

ஹயக்ரீவர் காயத்ரீ
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத்

ஹயக்ரீவர் தியான ஸ்லோகம்
1. ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே
2. சங்க சக்ர மஹாமுத்ரா
புஸ்தகாட்யம் சதுர்புஜம் சம்பூர்ணம்
சந்த்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

சரஸ்வதி காயத்ரீ
ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்
ஓம் வாக் தேவீ ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்

சரஸ்வதி தியான ஸ்லோகம்
1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை
3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்
4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன
5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்
6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம
7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா
8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே
9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே
10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்

சரபேஸ்வரர்
இந்த தியான சுலோகத்தை காலையும், மாலையும் கூறி வந்தால் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயிலிருந்தும் விடுபடலாம். இவரை வழிபடுவதால் பேராபத்து, பூகம்பம், தீ விபத்து, மண்மாரி, இடி, புயல், மின்னல், பரிகாரம் காணமுடியாத துன்பம், தீராத வியாதிகள், மனநலம் இல்லாமை, விஷபயம், பூதப் பிரேத பைசாசம் ஆகியவைகளின் பயம் நீங்கும் என வியாசர் லிங்கபுராணம் 96வது அத்தியாயத்தில் கூறியுள்ளார்.

தியான ஸ்லோகம்
ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:
பக்ஷ?சதுர் பாஹூக:
பாதர் கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:
காலாக்னி கோடித்யுதி:
விச்வ ÷க்ஷõப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
பிரும்மேந்திர முக்யைஸ்துத:
கங்கா சந்தரதர: புரஸ்த சாப:
ஸத் யோரிபுக் னோஸ்து ந:

மூல மந்திரம்
ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர
ஹாஸி, ப்ராணக்ரஹாஸி
ஹூம் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
சரப ஸாலுவாய பக்ஷ?ராஜாய ஹூம்பட் ஸ்வாஸா.

சரபேஸ்வரர் காயத்ரீ
ஓம் ஸாலுவேசாய வித்மஹே பக்ஷ? ராஜாய தீமஹி
தந்நோ சரப : ப்ரசோதயாத்

திருமணம் நடைபெற பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை கல்யாண சுந்தரேசுவரர் உமாதேவியை தினமும் வணங்கி மனதில் தியானித்து குறைந்தது 45 நாட்களாவது பக்தியோடு சொல்லி வந்தால் திருமணம் நிச்சயமாக நடைபெறும் என்பது நம்பிக்கை.
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம் ச தேஹி மே
பதிம் தேஹி சுகம் தேஹி
சௌபாக்யம் தேஹி மே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகாமாயே
மகா யோக நிதீஸ்வரி
நந்தகோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நம:

திருமணம் கைகூட
இந்த ஸ்லோகத்தை காலை, மாலை இருவேளையும் பதினெட்டு தரம் ஜபித்து வர திருமணம் ஆகாத ஆண், பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்.
கல்யாணரூப: கல்யாண: கல்யாண குண ஸம்ரய:
ஸுந்தரப்ரூ: ஸுநயந:ஸுலலாட: ஸுகந்தர:

எமபயம் தீர, மன வலிமை பெற ப்ரத்யங்கிரா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய
க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம
ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது
தினமும் காலையில் குளித்து விட்டு மனதில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்லவும்.

மஹா ப்ரத்யங்கிரா தேவியின் மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே
கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே
க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்

கெட்ட கனவுகள் வராமலிருக்க
அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்:
ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்:
நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
துர் ஸ்வப்பன சாந்தயே.
இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கவும்.

அர்க்கள ஸ்தோத்ரம்
(எல்லாவித இடையூறுகளும் நீங்கி, எல்லா காரியங்களிலும் வெற்றி பெற)
ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்க்கா க்ஷமா சிவதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே
ஜயத்வம் தேவிசாமுண்டே ஜயபூதார்த்தி ஹாரிணி
ஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே
மதுகைடப வித்ராவி விதாத்ரு வரதே நம:
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி
மஹிஷாஸூர நிர்ணாச விதாத்ரி வரதே நம:
ரக்தபீஜவதே தேவி சண்டமுண்டவிநாசினி
சும்பஸ்யைவ நிசும்பஸ்ய தூம்ராக்ஷஸ்யச மர்தினி
வந்தி தாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸெளபாக்ய தாயினி
அசிந்த்ய ரூபசரிதே ஸர்வ சத்ரு வினாசினி
நதேப்யஸ் ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே
ஸ்துவத்ப்யோ பக்திபூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
சண்டிகே ஸததம் யேத்வாம் அர்ச்சயந்தீஹ பக்தித:
தேஹி ஸெளபாக்யமாரோக்யம் தேஹிமே பரமம்ஸீகம்
விதேஹி த்விஷாதாம் நாசம் விதேஹி பலமுச்சகை
விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
ஸூராஸூர சிரோத்ன நிக்ருஷ்ட சரணேம்பிகே
வித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ?மீவந்தம் ஜனம் குரு
ப்ரசண்டதைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணமதாயமே
சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேச்வரீ
க்ருஷ்ணேண ஸம்ஸ்துதே தேவி சச்வத்பக்த்யா ஸதாம்பிகே
ஹிமாசல ஸூதாநாத பூஜிதே பரமேச்வரீ
இந்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேச்வரி
தேவி ப்ரசண்ட தோர்த்தண்ட தைத்ய தர்ப்ப விநாசினி
தேவி பக்த ஜனோத்தாம தத்தானந்தோதயேம்பிகே
பத்னீம் மனோரமாம் தேஹி மனேவ்ருத்தானு ஸாரிணீம்
தாரீணீம் துர்க்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்
இதம் ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேன் நர:
ஸது ஸப்த சதீ ஸங்கயா வரமாப்னோதி ஸம்பதாம்.

சர்ப்ப தோஷம் நீங்க
நர்ம தாயை நம: ப்ராத
நர்ம தாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம்
த்ராஹிமாம் விஷ ஸர்பத !

மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்
விபூதி, குங்குமம் தரித்து, தீபத்தை ஏற்றி வைத்து ஒரு தட்டில் விபூதி, குங்குமத்தை சாமிபடத்தின் முன் வைத்து மூன்று முறை பாராயணம் செய்து பிறகு விபூதி, குங்குமத்தை உபயோகப்படுத்தினால் சகல மங்களமும் உண்டாகும்.

1. பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதி ச
ஜபேந் நாமத்ரயம்நித்யம் மஹாரோக நிவாரணம்
2. நித்யான்னதான நிரதம் ஸச்சிதானந்த விக்ரஹம்
ஸர்வரோக ஹரம் தேவம் ஸுப்ரம்மண்ய முபாஸ்மஹே
3. பஞ்சாபகேச ஜப்யேச ப்ரணதார்த்தி ஹரேதி ச
ஜபேந் நாமத்ரயம் நித்யம் புனர் ஜன்ம ந வித்யதே
4. ரட்ச பஞ்ச நதீநாத தயாஸிந்தோ மஹேச்வர
அநாதநாத பக்தானாம் அபயம் குரு சங்கர
5. ஸுமீனாக்ஷ? ஸுந்தரேசௌ பக்த கல்பமஹீருதௌ
தயோரநுக்ர ஹோ யத்ர தத்ர சோகோ ந வித்யதே
6. ஸ்ரீ கண்ட பார்வதீ நாத தேஜிநீபுர நாயக
ஆயுர்பலம் ச்ரியம் தேஹி ஹர மே பாதகம் ஹர
7. கௌரீவல்லப காமாரே காலகூட விஷாசன
மாமுத்ரா பதம் போதே: த்ரிபுரக்நாந்தகாந்தக
8. கௌரீபதே நமஸ்துப்யம் கங்காசந்த்ர கலாதர
அசேஷ க்லேச துரிதம் ஹராசு மம சங்கர
9. மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹா ஸேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்
10. ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:
11. ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
12. மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம்
13. க்ருஷ்ண: கரோது கல்யாணம் கம்ஸ குஞ்சரீ கேஸரீ
காளிந்தீ ஜல கல்லோல கோலாஹலகுதூஹலீ
14. ஸ்ரீ ராம சந்திர: ச்ரிதபாரிஜாத: ஸமஸ்த கல்யாண குணாபிராம:
ஸீதாமுகாம் போருஹ சஞ்சரீக: நிரந்தரம் மங்கள மாத நோது
15. காஞ்சநாத்ரி நிபாங்காய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநே
அஞ்சநா பாக்ய ரூபாய ஆஞ்சநேயாய மங்களம்
16. பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்
ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி
17. குண ரோகாதி தாரித்ரிய பாபக்ஷúபதப ம்ருத்யவம்
பயக்ரோத மந: க்லேசா: நச்யந்து மம ஸர்வதா !

ஜய ப்ரத ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்ரம்
ஜயத்தை அளிக்கும், ஐஸ்வர்யம், கல்வி, ஞாபசக்தி அதிகரிக்கும். கடன் தொல்லை, வியாதி நீங்கும்.

ஜய தேவேந்த்ரஜா காந்த ஜய ம்ருத்யுஞ் ஜயாத்மஜ
ஜய சைலேந்த்ரஜா ஸூநோ ஜய சம்புகணாவ்ருத
ஜய தாரக தர்பக்ன ஜய விக்னேச்வராநுஜ
ஜய தேவேந்த்ர ஜாமாத: ஜய பங்கஜ லோசன
ஜய சங்கரஸம்பூத ஜய பத்மாஸநார்ச்சித
ஜய தாக்ஷயணீஸூநோ ஜயகாசவநோத்பவ
ஜய பாகீரதி ஸூநோ ஜய பாவக ஸம்பவ
ஜய பத்மஜகர்வக்ந ஜய வைகுண்ட பூஜித
ஜய பக்தேஷ்ட வரத ஜய பக்தார்த்தி பஞ்சன
ஜய பக்த பராதீன ஜய பக்த ப்ரபூஜித
ஜய தர்மவதாம் ச்ரேஷ்ட ஜய தாரித்ரிய நாசன
ஜய புத்திமதாம் ச்ரேஷ்ட ஜய நாரத ஸந்நுத
ஜய போகீச்வராதீச ஜயதும்புருஸேவித
ஜய ஷடதாரகாராத்ய ஜய வல்லீ மனோஹர
ஜய யோக ஸமாராத்ய ஜய ஸூந்தர விக்ரஹ
ஜய ஸெளந்தர்ய கூபார ஜய வாஸவ வந்தித
ஜய ஷட்பாவ ரஹித ஜய வேதவிதாம் பர
ஜய ஷண்முக தேவேச ஜய போ விஜயீபவ

ஸ்ரீ துர்கா த்வாத்ரிம்சந் நாமமாலா

ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை அஞ்சேல் என ரட்சிப்பது ஸ்ரீ துர்கா தேவியின் திருநாமம். இத்தகைய அன்னையின் 32 திருநாமங்கள் அடங்கிய இந்த ஸ்தோத்ரத்தை ஜபித்தால் மலை போன்ற இடர்களெல்லாம் நொடியில் நீங்கும்.

துர்கா, துர்காதிஸமநீ, துர்காபத் விநிவாரணீ
துர்கமச்சேதிநீ, துர்கஸாதிநீ, துர்கநாஸிநீ
துர்கதோத்தாரிணீ, துர்கநிஹந்த்ரீ, துர்கமாபஹா
துர்கமஜ்ஞாநதா, துர்க தைத்யலோக தவாநலா
துர்கமா, துர்கமாலோகா, துர்கமாத்ம ஸ்வரூபிணீ
துர்கமார்க ப்ரதா, துர்கம வித்யா, துர்கமாஸ்ரிதா
துர்கமஜ்ஞாத ஸம்ஸ்தாநா, துர்கம த்யான பாஸிநீ
துர்க மோஹா, துர்கமஹா, துர்க மார்த்த ஸ்வரூபிணி
துர்க மாஸீர ஸம்ஹந்த்ரீ, துர்கமாயுத தாரிணீ
துர்க மாங்கீ, துர்கமாதா, துர்கம்யா, துர்கமேஸ்வரி
துர்கபீமா, துர்கபாமா, துர்கபா, துர்கதாரிணீ

செல்வம் மேலும் வளர

இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்தவுடன் பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால், வறுமை ஒழியும், தனதான்யங்கள் விருத்தியாகும்.
அநர்க்க ரத்ந ஸம்பூர்ணோ மல்லிகா குஸும ப்ரிய
தப்த சாமீகராகாரோ ஜித தாவாநலாக்ருதி:

ஆபத்துகள் அகல

இந்த ஸ்லோகத்தை காலை வேளையில் பத்து தடவை ஜெபித்து வர, நம்மைச் சுற்றியுள்ள சகல துன்பங்களும், ஆபத்துகளும் அறவே அகன்று விடும்.
சிந்தாயோக ப்ரயமநோ ஜகதாநந்த காராக:
ரய்மிமாந்த புவநேயய்ச தேவாஸுர ஸுபூஜித:

சிறை பயம் நீங்க

இந்த ஸ்லோகத்தை காலையில் நூற்று எட்டு தரம் உருக்கமாகப் பாராயணம் செய்து வர சிறைவாச பயம் நீங்கும்.
கணாகரோ குணய்ரேஷ்ட்ட: ஸச்சிதாநந்த விக்ரஹ:
ஸுகத: காரணம் கர்த்தா பவபந்த விமோசக்:

ஞானம் விருத்தியடைய
இந்த ஸ்லோகத்தை காலையிலும், மாலையிலும் படிப்பதற்கு முன், பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால் ஞானம் விருத்தியடைவதோடு படிப்படில் சி
றந்து விளங்குவார்கள். சிறந்த அறிவாளியாகவும் திகழ்வர்.
வர்த்திஷ்ணுர் வரதோ வைத்யோ ஹரிர் நாராயணோச்யுத:
அஜ்ஞாநவந தாவாக்நி: பரஜ்ஞாப்ராஸாத பூதி:

நினைத்த காரியம் நிறைவேற
இந்த ஸ்லோகத்தை தினமும் இரவில் உறங்குவதற்கு முன் பதினோரு தடவை பாராயணம் செய்து வர நினைத்த காரியம் எதுவாகினும் நிறைவேறும்.
சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:
கோவிந்தோ ராஜராஜேரா பஹு புஷ்பார்ச்ச நப்ரிய:

எல்லா விருப்பங்களும் நிறைவேற யோக நரசிம்மர் ஸ்லோகம்
ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோகரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா

ஐயனே! லட்சுமி நரசிம்ம பிரபோ! மிக பயங்கரமான உருவமும் சிங்கமுகமும் உடையவரே! கருணை நிரம்பியவரே! அபயம் காக்கும் கரத்தினை உடையவரே! உலகைக் காக்கும் பொருட்டு எங்கும் நிறைந்த பெருமானே! எங்களது பாவங்களை உடனடிகயாகக் களைந்து நலம் தருபவரே! எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும்.

என்றும் ஐஸ்வர்யம் நிலைக்கவும், நிம்மதி அடையவும் ஸ்லோகம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் !
கமலே கமலாலயே ப்ரஸீதப்ரஸீத !
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ?ம்யை நமஹ,
ஓம் ஸ்ரீம் ஹரீம், ஐம்
ஞானாயை, மஹாலக்ஷ?ம்யை, ஐஸ்வர்யாயை
கமலதாரிண்யை, சக்த்யை, சிம்ஹவாஹின்யை நமஹ !

சுதர்சன சக்கரத்தாழ்வார் மந்திரம்
வெற்றியைக் கொடுக்கும். நோய் நீக்கும். பயம் விலக்கும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய-கோவிந்தாய கோபீ ஜநவல்லபாய-பராய பரம புருஷாய பரமாத்மநே-பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத-விஷ ஆபிசார
அஸ்த்ர ஸஸ்த்ரான் ஸம்ஹர ஸம்ஹர-ம்ருத்யோர் மோசய மோசய.
ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலா பரீதாய-ஸர்வதிக் க்ஷபண கராய ஹும் பட் பரப்ரஹ்மணே-பரம் ஜ்யோதிஷே
ஸ்வாஹா.
ஓம் நமோ பகவதே ஸுதர்ஸநாய-ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-மஹாசக்ராய-மஹா ஜ்வாலாய-ஸர்வரோக ப்ரஸமநாய-கர்ம-பந்த-விமோசனாய
-பாதாதி-மஸ்த பர்யந்தம் வாதஜநித ரோகாந், பித்த-ஜநிதி-ரோகாந், ஸ்லேஷ்ம ஜநித ரோகாந், தாது-ஸங்கலிகோத்பவ-நாநாவிகார-ரோகாந் நாஸய நாஸய, ப்
ரஸமய ப்ரஸமய, ஆரோக்யம் தேஹி தேஹி, ஓம் ஸஹஸ்ரார ஹும் பட் ஸ்வாஹா.

சுதர்சன காயத்ரி
ஸுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ர: ப்ரசோதயாத்

சுதர்சன மூல மந்திரம்
ஓம், ஸ, ஹ, ஸ்ரா, ர, ஹும், பட்.

மாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபஜ்யோதி பரம் பிரம்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம்
சந்த்யாதீப நமோஸ்துதே
சுபம் கரோது கல்யாணம்
ஆரோக்யம் சுகசம்பதம்
மம புத்தி ப்ரகாசாய
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே

திருவிளக்கு ஸ்தோத்திரம்
ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியாசக்தியே நம
ஓம் சொர்ண சொரூபியே நம
ஓம் ஜோதி லக்ஷ?மியே நம
ஓம் தீப லக்ஷ?மியே நம
ஓம் மஹா லக்ஷ?மியே நம
ஓம் தனலக்ஷ?மியே நம
ஓம் தான்யலக்ஷ?மியே நம
ஓம் தைர்யலக்ஷ?மியே நம
ஓம் வீரலக்ஷ?மியே நம
ஓம் விஜயலக்ஷ?மியே நம
ஓம் வித்யா லக்ஷ?மியே நம
ஓம் ஜெய லக்ஷ?மியே நம
ஓம் வரலக்ஷ?மியே நம
ஓம் கஜலக்ஷ?மியே நம
ஓம் காம வல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுபலக்ஷ?மியே நம
ஓம் ராஜலக்ஷ?மியே நம
ஓம் கிருஹலக்ஷ?மியே நம
ஓம் சித்த லக்ஷ?மியே நம
ஓம் சீதா லக்ஷ?மியே நம
ஓம் திரிபுரலக்ஷ?மியே நம
ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் சௌபாக்ய லக்ஷ?மியே நம
ஓம் நவக்கிரஹ தாயினே நம
ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரம்மாண்ட நாயகியே நம
ஆஞ்சநேயர் மந்திரங்கள் (பஞ்சமுக ஆஞ்சநேயர்)
கிழக்கு முகம்-ஹனுமார்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.
தெற்கு முகம்-நரஸிம்மர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ?ண முகே
கரால வதனாய நிருஸிம்ஹாய
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.
மேற்கு முகம்-கருடர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா
வடக்கு முகம்- வராஹர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே
ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.
மேல்முகம்-ஹயக்ரீவர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே
ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

ஸ்ரீ சக்கரம்
(நான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

காயத்ரி சஹஸ்ர நாம மந்திரங்கள்

நினைத்ததெல்லாம் நிறைவேற
ஸமாநா ஸாமதேவீ ச ஸமஸ்த ஸுரஸேவிதா
ஸர்வ ஸம்பத்தி ஜநநீ ஸத்குணா ஸகலேஷ்டதா
இந்தச் சுலோகத்தை காலையில் 18 முறை கூறி வருபவர்களுக்கு சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

தேர்வில் வெற்றி பெற
வித்யா வித்யாகரீ வித்யா வித்யாவித்யா ப்ரபோதிநீ
விமலா விபவா வேத்யா விஸ்வஸ்தா விவிதோஜ்வலா
இந்தச் சுலோகத்தை 11 தரம் காலையில் ஜபித்து வந்தால், ஞாபக சக்தியும் தேர்வில் வெற்றியும் கிடைக்கும்.

செல்வம் விருத்தியடைய
வஸுப்ரதா வாஸுதேவீ வாஸுதேவ மநோஹரீ
வாஸவார்சித பாதஸ்ரீ: வாஸவாரி விநாஸி நீ
இந்த சுலோகத்தை காலை மாலைகளில் 18 முறை ஜபித்து வந்தால் நாளுக்கு நாள் செல்வம் அதிகமாக விருத்தியாகும்.

ஆபரண சேர்க்கை கிடைக்க
ரத்னப்ராகார மத்யஸ்த்தா ரத்நமண்டப மத்யகா
ரத்நாபிஷேக ஸந்துஷ்டா ரத்நாங்கீ ரத்நதாயிநீ
இந்த சுலோகத்தை காலையில் 10 முறை ஜபித்து வந்தால் பெண்களுக்கு நகைகள், ரத்தினங்கள் இவையெல்லாம் கிடைக்கும்.

அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட
ஸர்வரோக ப்ரஸ்மநீ ஸர்வபாப விமோசநீ
ஸமத்ருஷ்டி: ஸமகுணா ஸர்வகோப்த்ரீ ஸஹாயிநீ
இந்தச் சுலோகத்தை 108 முறை நீரைத் தொட்டு ஜபித்து வந்தால் ஜுரம் முதலிய நோய்கள் நீங்கும்.

தனதான்யங்கள் பெருக
தநதாந்யா தேநுரூபா தநாட்யா தநதாயிநீ
ததேஸீதர்மநிரதா தர்மராஜ ப்ரஸாதிநீ
இந்த சுலோகத்தை தினந்தோறும் காலையில் 10 முறை படித்து வந்தால் தனதான்யங்கள் மேன்மேலும் பெருகும்.

மனோ வியாதி, சத்ரு பயம் நீங்க
சக்தே பஜே த்வாம் சுகதோ ஜனித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹஹஸபுதபூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ

ஆஞ்சநேயர் மந்திரங்கள்
நினைத்த காரியம் இனிதே நிறைவேற
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.
இதை பூஜையில் 108 முறை கூறவும்.

கலைகளில் தேர்ச்சி பெறவும், நினைவாற்றலுக்கும்
ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்
அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரனாத் பவேத்.
இதை தினமும் 12 முறை கூறவும்.

நவக்கிரகங்கள் தோஷம் நீங்க
ஓம் வருணோ வாயுகதிமான்வாயு கௌபேர ஈஸ்வர
ரவிச்சந்திர குஜஸ் ஸெளம்யோ குருக் காவ்யோ
சனைச்வர: ராகு கேதுர், மருத்தோதா தாதா
ஹர்தா ஸமீரஜா:
இதை தினமும் காலையில் 9 முறை கூறவும்

எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்க
ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர
ஜகத்பிதா ஹரிச்ரீசோ, கருடஸ்மய பஞ்ஜன:
க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்மயி
தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய
இதை தினமும் 12 முறை கூறவும்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட
ஓம் ருணதர்ய ஹரஸ் ஸூக்ஷ?ம
ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந்
அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர்
காதா ஸ்ம்ருதிர் மனு:
இதை காலை, மாலை 12 முறை கூறவும்.

தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற
ஓம் காத்யாயனி மஹாமாயே
மஹா யோஹீன் யதீச்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம் மே குரு தே நம:
இதை காலை 12 முறை கூறவும்.

வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது
(இதை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் வெற்றியடையும்)
ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித
பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.
இதை வெளியில் புறப்படும் போது 3 முறை கூறவும்.

எல்லா விஷங்களும் நீங்க
ஓம் ஹ்ரீம் பச்சிம முகே வீர கருடாய பஞ்சமுகி
வீர ஹனுமதே மம் மம் மம் மம் மம் ஸகல
விஷ ஹரணாய ஸ்வாஹா.
கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்பா; நலஸ்யச
ருது பர்ணஸ்ய ராஜர்ஷே; கீர்த்தனம் கலிநாசனம்.

சகல செல்வங்களும் பெற
ஓம் ஹ்ரீம் உத்தர முகே ஆதிவராஹாய பஞ்சமுகீ
ஹனுமதே லம் லம் லம் லம் லம்
ஸகல சம்பத்கராய ஸ்வாஹா.

துளசி பறிக்க
துளசி அம்ருத ஸம்பூதே ஸகாத்வம் கேசவப் பிரியா
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபனே

லட்சுமி ஸ்துதி மாலா
ராஜராஜேஸ்வரீம் லக்ஷ?மீம் வரதாம் மணிமாலினீம்
தேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்யார்த்த ஸித்தயே
வரமளிப்பவளும் மணி மயமான மாலை தரித்த ராஜராஜேஸ்வரி ரூபமான லட்சுமியும் தேவர்களுக்குப் பிரியமான கீர்த்தி ஸ்வரூபிணியுமான தேவியை நமஸ்கரிக்கின்றேன்.

ஒரே சுலோகத்தில் நவக்ரஹ தியானம்
ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர
சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமி ஸுதாம் சு தனய:
ப்ரக்ஜாம் குருர் கௌரவம்
கான்ய: கோமள வாக் விலாஸ மதுலம்
மந்தோமுத முததம் ஸர்வத:
ராஹுர் பாஹுபலம் விரோத சமனம்
கேது: குலஸ்யோன்னதிம் ஓம்

சூர்ய நமஸ்கார மந்திரங்கள்
ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:

சூரிய நமஸ்காரம் முடிந்ததம் சூரியனையும் மற்ற நவகிரகங்களையும் நமஸ்கரிக்கும் மந்திரம்

நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச
குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ.

சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.

பாஸ்கராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்

என்பது சூரிய காயத்ரி. இதனை மூன்று முறை ஜெபித்து விட்டு அடியிற்கண்ட எளிய மந்திரத்தைச் சொல்லி சூரியனை நமஸ்காரம் செய்யலாம்.

ஓம் தினகராய பாஸ்கராய
ஜ்யோதிஸ்வ ரூபாய
சூர்ய நாராயணாய தேவாய
நமோ நமஹ
இது சூரிய நமஸ்காரத்திற்கு எளிய மந்திரம். ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்கு அகஸ்தியர் உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயத்தையும் பாராயணம் செய்யலாம்.

அஷ்டலெட்சுமி துதி (தேவி சூக்தம்)
1. தனலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
2. வித்யாலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
3. தான்யலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
4. சௌபாக்யலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
5. வீரலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
6. சந்தானலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
7. காருண்யலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
8. மஹாலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

கருடனைப் பார்த்ததும் சொல்ல வேண்டியது
குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ÷க்ஷமம் குரு ஸதா மம
கருட பகவானை கோயில்களில் வணங்கும் பொழுது சொல்ல வேண்டிய துதி
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்க்ஷ?யாய அமித தேஜயே

கருடன் (விஷ்ணு வாஹனன்)
கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

கருடன் காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

பாலா த்ரயக்ஷரீ மூலமந்திரம்
ஐம் க்லீம் ஸெள:

ஸ்ரீ வித்யா பாலா த்ரிபுரஸுந்தரி ஷடாக்ஷரீ மூலமந்திரம்
ஓம் ஐம் க்லீம் ஸெள: ஸெள : க்லீம் ஐம்

மஹாலக்ஷ?மி மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ?மி
மஹாலக்ஷ?மி ஏஹ்யேஹி ஏஹ்யேஹி ஸர்வ
ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம், கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் ஓம் மஹா லக்ஷ?ம்யை நம

ஸ்ரீ கிருஷ்ண மந்திரங்கள்
1. க்லீம் க்ருஷ்ணவே கோவிந்தாய கோபிஜன வல்லபாய ஸ்வாஹா
2. க்ல்யௌம் க்லீம் நமோ பகவதே நந்த புத்ராய பாலவபுஷே கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
3. ஓம் நமோ க்ருஷ்ணாய தேவகீ புத்ராய ஹும் பட் ஸ்வாஹா
4. கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
5. க்லீம் க்ருஷ்ணாய ஸ்வாஹா
6. ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த
வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம்
க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தத: தேவதேவ
ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
7.க்லீம் ஹ்ருஷீகேசாய நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
8. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
9. ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா
10. க்லீம் கோவல்லபாய ஸ்வாஹா
11. க்லீம் க்ருஷ்ண க்லீம்

சகாதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்
ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸஅவாய
கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ

கிருஷ்ணா - ராமா
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம
ஹரே ஹரே

ஸ்ரீராமர் மந்திரம்
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம்
பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம்
ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

ராம மந்திரம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
இந்த மந்திரம் பதின்மூன்று எழுத்துக்களைக் கொண்டது. ராம த்ரயோதஸூக்ஷரி மந்திரம் எனப்படும். இந்த மந்திரத்தை ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் தொடர்ந்து கூறி ஸ்ரீராம பிரானின் தரிசனம் பெற்றார். இவர் க்ஷத்திரபதி சிவாஜி மன்னரின் குரு.

ஏகஸ்லோக ராமாயணம்
எல்லாவித காரிய சித்திகளும் பெறவும், மங்களம் உண்டாகவும் இந்த இராமாயண ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்.
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம்
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே
இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.
க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ரபுஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே
இழந்த செல்வம் மீண்டும் பெறவும், திருடு போன பொருள் தானாக வந்தடையவும், வரவேண்டிய பண பாக்கி வரும், கடன் தொல்லை தீரும்.

கல்வியில் சிறந்து விளங்க
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்
ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
ஸ்ரீ÷க்ஷõட சாக்ஷரீ - வித்யா த்ரிகூடா காமகோடிகா
தசமுத்ரா - ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி
என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வர சரஸ்வதியின் அருள்கிட்டும்.

வாஸ்து துதி
வாஸ்து பூஜையன்று சொல்ல வேண்டியது. வீட்டில் வாஸ்து கோளாறுகள் ஏதேனும் இருந்தாலும் தினசரி இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய அவை நீங்கும்.
ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரக்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்ணாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

வாஸ்து காயத்ரி
ஓம் தனுர் தராயை வித்மஹே
ஸர்வ ஸித்திச்ச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்

ஐயப்பன் மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா,
சர்வலாபாயா
சத்ரு நாஸாயா
மதகஜ வாகனாயா
மஹா சாஸ்த்ரே நமஹ

சுப்ரமண்யர் மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ

சுப்ரமண்ய பஞ்சதசாக்ஷரீ மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஈம் நம் லம்
ஸெள: சரவணபவ

சுதர்சன வழிபாடு
நீங்காத செல்வம் கிடைக்க
ஸ்ரீ நிதி : ஸ்ரீவர : ஸ்ரக்வீ ஸ்ரீலக்ஷ?மீ கர பூஜித
ஸ்ரீ ரத : ஸ்ரீவிபு : ஸிந்து கன்யா பதி ரதாஷஜ

சுகப்ரசவம் ஏற்பட
உத்தரா மாநதோ மாநீ மாநவா பீஷ்ட ஸித்தித:
பக்த பால பாப ஹாரீ பலதோ தஹநவத்ஜ

பாவங்கள் தீர
ஆஸ்ரிதாகௌக வித்வம்ஸீ நித்யா நந்த ப்ரதாயக
அஸுரக்நோ மஹா பாஹுர பீம கர்மா ஸப்பரத
ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந:
தேவகீநந்தனஸ் ஸ்ரஷ்டா க்ஷ?தீஸ: பாபநாஸந:

எடுத்த காரியம் பூர்த்தியாக
பூர்ண போத: பூர்ணரூப: பூர்ண காமோ மஹரத்யுதி
பூர்ண மந்த்ர பூர்ண கர்த்ர: பூர்ணஷ் ஷரட்குண்ய விக்ரஹ:

மனத்தூய்மை பெற
சந்த்ர தாமாப்ரதித்வந்த்வ: பரமாத்மாஸுதீர்கம
விஹத்தாத்மா மஹா தேஜோ: புண்ய ஸ்லோக: புராணவித்

வாக்கு வன்மைக்கு
ஸத்கதிஸ் ஸத்வு ஸம்பந்த: நித்ய ஸங்கல்ப கல்பக
வர்ணீ வாசஸ் பதிர் வாக்மீ மக்ஷõ ஸக்தி: கலாநிதி

புகழ் அடைய
புண்ய கீர்த்தி : பராமார்ஷீ ந்ருஸிம் ஹோ நாபி மத்யக
யஜ்ஞாத்மா யஜ்ஞ ஸங்கல்போ பஜ்ஞ கேதுர் மஹேஸ்வர

வழக்குகளில் வெற்றி பெற

ஜய ஸீலோ ஜய காங்க்ஷ? ஜாதவேதா ஜய: ப்ரத
கவி: கல்யாணத காம்யோ மோக்ஷதோ மோஹநாக்ருதி

எல்லா சுகங்களும் கிடைக்க
பாக்ய ப்ரதோ மஹா ஸத்த்வோ விஸ்வாத்மா விகஜ்வர
ஸுராசார் யார்ச்சிதோ வஸ்யோ வாஸுதேவோ வஸுப்ரத

எல்லா காரியங்களிலும் வெற்றிபெற
ஸர்வார்த்த ஸித்திதோ த தா விதாதா விஸ்வ பாலக
விருபா÷ஷா மஹா வக்ஷõ: வரிஷ்டோ மாதவ ப்ரிய:

உயர்ந்த பதவி கிடைக்க
வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ்: ஸ்தாநதோ த்ருவ:
பராத்தி: பரம ஸ்பஷ்டஸ்-துஷ்ட: புஷ்டஸ: ஸுபேக்ஷண:

உற்சாகம் ஏற்பட
வேத்யோ வைத்யஸ்: ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல:

கண்பார்வை திருந்த
அக்ரணீர் - க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்

சத்ருவை ஜயிக்க
ஸுலபஸ்: ஸுவ்ரதஸ்: ஸித்தஸ்: ஸத்ருஜிச்-சத்ருதாபந:
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் -சாணூராந்த்ர நிஷூதந:

துன்பங்கள் விலக
உதீர்ணஸ் ஸர்வதஸ் - சக்ஷú-ரனீஸஸ் ஸாஸ்வதஸ்திர:
பூஸயோ பூஷணோ பூதிர-ஸோகஸ் ஸோகநாஸந:

அறிவு வளர
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரது: த்ஸ்ஸ்ரம் ஸதாம்கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்:

பெருமதிப்பு ஏற்பட
ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா விஸ்வஸ்ருக்: விஸ்வபுக் விபு:
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் - ஜஹ்நுர் -நாராயணோ நர:

மோக்ஷமடைய
ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண:
ஸுரஸேனோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸஸ் ஸுயாமுந:

வயிற்றுவலி நீங்க
ப்ராஜிஷ்ணுர் - போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
அனேகா விஜயோ ஜேதா விஸ்வயோனி: புனர்வஸு:
மருந்து சாப்பிடும் போது
தன்வந்த்ரிம் கருத் மந்தம் பணிராஜம் ச கௌஸ்துபம்
அச்யுதம் ச அம்ருதம் சந்த்ரம் ஸ்மரேத் ஒளஷதகர்மணி
அச்யுத அனந்த கோவிந்த நமோச் சாரணபேஷஜாத்
நச்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
அபா மார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா
ஸதாஸ்து ஸர்வ துக்கா நாம் ப்ரசமோ வசநாத்ரே.

சங்கீத அப்பியாசத்திற்கு முன்
ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத
வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.

மேகம் இடிக்கும் போது
அர்ஜுன: பால்குன: பார்த்த: கரீடசே வேத வாஹன
பீபத்ஸு; விஜய கிருஷ்ண: ஸவ்யாஸாசீ தனஞ்சய:

லட்சுமி கடாட்சம் ஏற்பட
துரிதௌக நிவாரண ப்ரவீணே
விமலே பாஸுர பாக தேயலப்யே
ப்ரணவ ப்ரதி பாத்ய வஸ்துரூப
ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே.

எல்லா வகை தோஷங்களும் விலக
து: ஸ்வம்ன, து: சகுன, துர்கதி, தௌர்னஸ்ய
துர்பிக்ஷ, துர்வயஸந, து: ஸஹ, துர்யசாம்ஸி
உத்பாத, தாப, விஷ, பீதிம், அஸத்க்ரஹார்த்திம்
வியாதீம்ச்ச, நாசயது, மே, ஜகதாம், அதீச.

முயற்சிகளில் வெற்றி கிடைக்க
நமோஸ்து ராமாய ஸலக்ஷ?மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்ம ஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ரய மாநிலேப்ய;
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய.

உடல், மன வலிமைகள் கிடைக்க
சிவ: சக்த்யா யுக்தா: யதிபவதிசக்த; ப்ரபவிதும்
நசேத் ஏவம் தேவ; நகலு குலச; ஸ்பந்திதுமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாத பிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வாகதம் அக்ருத புண்ய ப்ரபவதி

கவலை தொலைய
சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் பிரணதார்தி விந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்திஸ்ந்நிதத்ஸ்வ.

துர்மரணம் ஏற்படாமல் இருக்க
அனாயாஸேச மரணம் வினாதைந்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்தி மசஞ்சலாம்
புத்ரான் தேஹி யசோதேஹி ஸப்பதம் தேஹி சாச்வதீம்
த்வயி பக்திஞ்ச மேதேஹி - பரத்ரச பராங்சதிம்.

விபத்து, மரணத்தை விலக்க
ஓம் ஜூம்ஸ: த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முட்சீய
மாமிருதாத்: ஸ: ஜூம் ஓம்.

மரண பயம் நீங்க
வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:
ஹிரண்யகர்ப்பஸ ஸத்ருக்னோ வ்யாப்தோ வாயு- ரதோக்ஷஜ:

பிழை பொறுக்க வேண்டுதல்
அபராத ஸஹஸர ஸங்குலம்
பதிதம் பீம மஹார்ண வோதரை
அகதிம் சரணாகதமாம் க்ருபயா
கேவல மாத்மஸாத் குரு.
மந்த்ர ஹீம் க்ரியா ஹீனக
பக்தி ஹீநம் ஸுரேச்வா
யத் பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துமே.
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம்
தாஸோ யமிதிமாம் மத்வர க்ஷமஸ்வ புருஷாத்தம்.

கற்பூர ஆரத்தியின் போது

ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்ய-மாதத்தே!
யோ ராஜஸன் ராஜயோ வா ஸோமேன
யஜதே! தேத ஸுவா மேதானி ஹவீம்ஷி
பவந்தி! ஏதா வந்தோ வை தேவானாம் ஸவா:!
த ஏவாஸ்மை ஸவான் ப்ரயச் சந்தி! தஏனம்
புனஸ் ஸுவந்தே ராஜ்யாய! தே ஸூ ராஜாபவதி
ராஜாதி ராஜஸ்ய ப்ரஸஹ்ய ஸாயினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸமே காமான் காம காமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணாய மஹாராஜாய நம:
நதத்ர ஸூர்யோ பாதி ந சந்திர
தாரகம்! நேமோ வித்யுதே பாந்தி குதோய
மக்னி! தமேவ பாந்த மனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி!

மந்திர புஷ்பம் போடும் போது
யோபாம் புஷ்பம் வேத! புஷ்பவான்
ப்ரஜாவான் பசுமான் பவதி! சந்த்ரமா வா
அபாம் புஷ்பம்! புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி!

பிரதட்ஷனம்  செய்யும் போது
யானி காளி ச பாபானி ஜன்மாந்தர-க்ருதானிச!
தானி தானி விநச்யந்தி பிரதட்ஷனபதே பதே!

ஏகச்லோக சுந்தர காண்டம்
யஸ்யஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர்லீலயா
லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்யவீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புன;
தீரணாப்தி; கபிபிர்யுதோ யமநமத்தம் ராமசந்த்ரம்பஜே.
(இந்த ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்தால் சுந்தர காண்ட பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.)

நீராடும் போது

துர்போஜன துராலாப துஷ்ப்ரதி க்ரஹ ஸம்பவம் பாவம்
ஹர மம் க்ஷ?ப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே:
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு
கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸகசக்தி.

விபூதி அணியும் போது
பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்
பூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷõ ரக்ஷõகரீ சுபா.

உணவு உண்ணுவதற்கு முன்
ஹரிர்தாதா ஹரிர்போக்தா
ஹரிரன்னம் பிரஜாபதி:
ஹரிர்விப்ர: சரீரஸ்து
புங்தே போஜயதே ஹரி:
ப்ரஹ்மார்பணம் ப்ரஹம ஹவி:
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினா
அஹம் வைச்வானரோ பூத்வா
ப்ராணினாணம் தேஹமாச்ரித:
ப்ராணபான ஸமாயுக்த:
பசாம்பயன்னம் சதுர்விதம்.

வீட்டிலிருந்து வெளியே போகும் போது
வனமாலீ கதீ சார்ங்கீ சக்ரீ சநந்தகீ
ஸ்ரீ மான் நாராயணா விஷ்ணு: வாஸுதேவோ பிரக்ஷது
ஸ்கந்தச்ச பகவான்தேவ:
ஸோமஸ்ச்சேந்திரோ யருஹஸ்பதி:
ஸப்தர்ஷயோ நாரத்ச்ச அஸ்மான்
ரக்ஷந்து ஸர்வத:

வெளியூர் பிரயாணம் நன்கு முடிய
அக்ரத: ப்ருஷ்டத்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தந்வாநௌர÷க்ஷதாம்ராமலக்ஷ?மணௌ.
ஸ்ந்நத்த: கவசீ கட்கீ சாப பாணதரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸலக்ஷ?மண:

இரவு சாப்பிடுவதற்கு முன்
ச்ரத்தாம் ப்ராதர் ஹவாமஹே ச்ரத்தாம் மத்யந்திரிம்பரி
ச்ர்த்தாம்ஸூர்யஸ்யநிம்ருசிச்ரததேக்ராத்தாபயேஹ நம

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்
ஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது. முதலில் ருத்திரனும் பின் அங்காரக பகவானும் மங்களன் என்ற பேரரசனும் பூஜித்து, நினைத்த காரியத்தை அடைந்தனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது. கன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது விவாஹாதி சோபனம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். ஒன்பது செவ்வாய் கிழமைகளில் ராகுகால நேரத்தில் விடாது வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நவக்ரக தோஷங்கள் குறிப்பாக செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.

மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்
ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே
மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே

இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே; ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே: ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளே: மங்கள தினமான செவ்வாய்க்கிழமை தோறும் வணங்கத் தக்க மங்கள உருவானவளே: இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே; எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தரு
பவளே; புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே; ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும் அளித்துக் காத்து அருள்வாயாக.

திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டியது

ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே
பொருள் : பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.)

ராகவேந்திரர் மந்திரம்
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷ?ய நமதாம் காமதேனவே

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மூல மந்திரம்
ஓம் சக்தியே ! பரா சக்தியே !
ஓம் சக்தியே ! ஆதி பராசக்தியே ஓம் சக்தியே !
ஓம் சக்தியே ! மருவூர் அரசியே !
ஓம் சக்தியே ! ஓம் வினாயகா !
ஓம் சக்தியே ! ஓம் காமாட்சியே !
ஓம் சக்தியே ! ஓம் பங்காரு காமாட்சியே !

கடன் நீங்க அங்காரக ஸ்தோத்திரம்
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸல
நமஸ்தேஸ்து மமாசேக்ஷம் ருணமாசு விமோசய
(ஓ அங்காரக! சீக்கிரத்தி)

திங்கள், 10 அக்டோபர், 2022

நவகோள் பரிகாரங்கள்

நவகோள் பரிகாரங்கள் 

1.சூரியனுக்குரிய பரிகாரம் 

ஞாயிற்றுக்கிழமை  கோதுமையினால் செய்யப்பட்ட  சப்பாத்தி ரொட்டி  கோதுமை  தோசை  போன்றவற்றை  செய்து தானும் சாப்பிடலாம். வீட்டுக்கு  வரும்  உறவினர்க்கும் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு கோதுமை  அல்வா வாங்கிக் கொடுத்து  சந்தோஷப் படுத்தலாம். இதனால் மேலதிகாரிகள் கோபம் தணியும் .அரசு சம்பந்தமான காரியங்கள்  கை கூடும். 

2. சந்திரனுக்குரிய பரிகாரம் 

பலா மரத்தின் வடக்கு போகும் வேரை பூச நட்சத்திரத்தில்  அல்லது  அமாவாசை  ஞாயிற்றுக்கிழமை  கூடிய சுபதினத்தில் காப்புக் கட்டி எடுத்து வந்து தாயத்தாக்கி கட்டிக் கொள்ள சந்திர திசை முழுவதும்  நலம் தரும். 

3.செவ்வாய் பகவானின் மூலிகையான சிவனார் வேம்பை முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி எடுத்து அணிந்து  கொள்ள  அதிகார பதவி கிட்டும். உடல் நலம் தேறும்.எதிரிகள் சரணடைவார் .உறவுகள் மேம்படும்.எதிலும் முக்கியத்துவம் கிட்டும்.செவ்வாயின் திசை முழுவதும் பலன் தரும்.சகோதரர்கள்  நலம் பெறுவார். 

4.புதனுக்குரிய பரிகாரம் 
புதனுக்குரிய இருவேலி மூலிகை அல்லது  செந்நாயுருவி வேருக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி உயிர் கொடுத்து  பூஜையில் வைத்து புதன்கிழமை புதன் ஓரையில்(  காலை 6:00 மணிக்குமேல் 7:00 மணிக்குள்)  தாயத்தாககி கழுத்தில்  அணிந்து  கொள்ளுங்கள். இதனால்  படிப்பவர்கள் பலன் பெறுவர்.தோல் நோய் வராது.சிந்தனைக்கு ஏற்ப சுப சந்தோஷ மேன்மையுண்டாகும். குடும்பத்தினர் மகிழ்வார்கள். பெண்களால் முன்னேற்றம் வரும். 

5.குருக்குரிய பரிகாரம் 

வியாழனின் சமித்தாகிய அரச மரத்தின் புல்லுருவியை முறைப்படி பூஜை செய்து தாயத்தாக்கி அணியவும். வியாழனின் திசையில் தனதான்ய அபிவிருத்தி புத்திர சுகம்.குருவருள்.இறையருள் கிடைக்கும். 

6. சுக்கிரன் பரிகாரம் 

சுக்கிரன் மூலிகையான கருஊமத்தன் செடிக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக்கட்டி  சாப நிவர்த்தி செய்து உயிர் கொடுத்து எடுத்து வந்து. தாயத்தாக்கி அணியவும் நன்கு சிரத்தையுடன்  தூபம் கொடுத்து  வந்தால் சுக்கிரன் திசை முழுவதும் வெற்றி  கிடைக்கும். வண்டி, வாகனம்,வீடு,நல்லதுணை அமையும்.சுக்கிரன் எந்த நிலையில் இருந்தாலும்  திசை முழுவதும்  நல்ல பலனைத் தரும்.அறுபத்தி நான்கு கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும்  இயல் இசை நாடகத்தில்  கலைத்துறையில் முழு வெற்றி கிடைக்கும். 
7.சனி பகவானுக்குரிய பரிகாரம் 

சனிபகவான் மூலிகையான செவ்வலரி வேரை முறைப்படி காப்புக்கட்டி  பூஜை  செய்து  வடக்கு  போகும் வேரை எடுத்து  அணிந்து  கொள்ள  வெற்றிமேல் வெற்றி  உண்டாகும். இது பெரும் சக்தியையும் சர்வ மேன்மையையும் தரும்.ஆயுள் முழுவதிலும்  பலன் தரும். நினைத்ததை சாதிக்க வைக்கும்.ஏழரை சனி,அஷ்டமத்து சனி,கண்டச் சனி,விலக சர்வ சாபங்களும் விலகும்.சனி பகவான் திசை வருடம் பத்தொன்பதும் நல்ல  பலன் கிட்டும். 

8. ராகுவுக்குரிய பரிகாரம் 

இராகு மூலிகை எட்டி மரத்தின் வடக்கு போகும் வேருக்கு காப்புக்கட்டி  பூஜை செய்து  எடுத்து  வந்து பூஜை  அறையில்  வைத்து அந்த வேறுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி இராகுவின் காயத்ரி மந்திரம்  1008 முறை ஜெபித்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள  இராகு திசை முழுவதும் நல்ல பலன் கொடுக்கும். 

9.கேதுக்குரிய பரிகாரம் 

வேப்ப மரத்தின் வடக்கு போகும் வேருக்கு அசுவணி ,மகம்,மூலம் நட்சத்திரத்தில்  காப்புக்கட்டி  பூஜை  செய்து  எடுத்து  வந்து  தாயத்தாக்கி அணிந்து கொள்ள  கேது பகவான் திசை முழுவதும் நல்ல பலன் தரும் .வாழ்வில் பிடிப்பு இல்லாதவர்கள் வீட்டில் துன்பம் ,துயரம் உள்ளவர்கள், நல்ல பெயரை எடுக்க இயலாதவர்கள் ,மேலதிகாரி தொல்லையுடையவர்களும், இம்மூலிகையால் இதன் மகிமையால் வாழ்நாள்  முழுவதும்  நல்ல பலனைத் தரும். 

காப்பு கட்டுதல் .அதாவது செடிக்கு சாபவிமோசனம் கொடுத்த பின் செடியின் அடிப்பகுதியில் வேரினை ஒட்டிஒரு மஞ்சள் நூலில்  முனை முறியாத மஞ்சளை கட்டி அதனை கட்டி  3  முடிச்சுகள்  போட வேண்டும். பின் கற்பூர தீபம் காண்பித்து தொட்டு வணங்கி அதன் பின் பிடுங்க வேண்டும்.இதுவே காப்பு. 

சப விமோசனம் .
செடியின் முன் அமர்ந்து 

ஓம் மூலி உனக்கு இடப்பட்ட சக்தி சாபம் நசி நசி,சித்தர்கள் சாபம் நசி நசி ,தேவர்கள் சாபம் நசி நசி ,எவரிட்ட சாபமாயினும் அணைத்து சாபங்களும் நசி நசி ,ஓம் மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா. 

3 முறை சொல்ல மூலிகையின் சாபங்கள் விலகும். 

இதுவே சாபவிமோசனம் கொடுத்து காப்பு கட்டி வேர் பிடுங்கும் முறையாகும். இந்த முறை அனைவரும்  கையாலும்  எளிமையான முறையாகும். 

இந்த மாதிரியான வேளைகலை தொழில்  அறிந்தவர்கள்  செய்தால்தான் பலன் கிடைக்கும் என்று என்ன வேண்டாம். அனைவரும் கையாலும் எளிமையாக முறைகளைதான் நான் பதிவிடுவேன். 

அனைவரும் செய்யலாம் தயக்கம் வேண்டாம். பயன்படுத்தி பயன் அடைவீர். 

நன்றி குரு முனி

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...