திங்கள், 25 ஜனவரி, 2021
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டு
கொடி மர தத்துவம்
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
சித்தர் வரலாறு
*தை பூசம் ஸ்பெஷல் *
*தை பூசம் ஸ்பெஷல் *
*வரும் 28.01.2021 வியாழக்கிழமை தைப்பூசம்*
தைப்பூசத்து அன்று முருகனை எப்படி வழிபட வேண்டும்?... என்ன செய்ய வேண்டும்?
இந்த தைப்பூசத் திருநாளன்று முருக பெருமா னை உலகெங்கிலும் வழிபடு வது நமக்குத் தெரிந்தது தான். தமிழர்களின் வாழ்வோடு கலந்தவன் இந்த சிவகுமாரன்.
அதாவது சிவபெருமான் மற்றும் பார்வதியின் இளைய குமாரன் என்பதால் சிவகுமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரை சாதார ணமாக சிவனின் மகன் என்று மட்டும் சொல்லி விட முடியாது. முருகனுக்கென்று ஏராளமான பெருமைகளும் பராக்கிரமங்களு ம் இருக்கின்றன.
*தேவர்களின் சேனாதிபதி*
****************************
தேவர்களுக்கே சேனாதிபதியாக திகழ்ந்தவர் தான் இந்த முருகப் பெருமான். ஆம். தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான் சூரபத்மன் என்னும் அரக்கன். அவனை அழிப்பதற்காகவே சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரிக்கச் செய்ய பட்டவர் தான் நம்முடைய முருகன்.
*ஆறுபடை வீடுகள்*
********************
மற்ற எல்லா நாட்களிலும் எல்லா முருகன் கோவில்களிலும் ஒரே மாதிரியான பூஜைகள் நடைபெறும். ஆனால் தைப்பூசம் என்பது அப்படியல்ல. எல்லா முருகன் கோவில்களி லும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால் மற்ற ஆலயங்களை விட முருகளின் ஆறுபடை வீடுகளில் தைப்பூசத்துக்கென்றே சிறப்பு அபி ஷேகங்கள், பூஜைகள், வழிபாட்டு முறைகள் உண்டு.
*தொட்டது துலங்கும்*
**********************
தைப்பூசத்தன்று தொட்ட காரியமெல்லாம் துல ங்கும் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிரு ப்போம். அது வெறும் வாய்மொழி வார்த்தை கிடையாது. தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமியும் சேர்ந்து வருகிற நாளை தான் நாம் முருகனுக்காக தைப்பூசத் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.
*நேர்த்திக்கடன்கள்*
********************
நம்முடைய ஊர்களில் திருவிழாக்களில் அலக குத்தி நேர்த்திக்கடன் செய்வதைப் பார்த்திருப் போம். அதேபோல் மற்ற எந்த கடவுளுக்கும் இல்லாமல் முருகளுக்கு இந்த தைப்பூச நாளில் குறிப்பாக, பக்தர்களால் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்படும். அதில் மிக முக்கியமானதாகச் சொல்ல வேண்டுமென்றா ல், வேலெடுத்தல், நாக்கில் வேல் குத்துதல் (அலகு குத்துதல்), பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என விதவிதமான காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
*வேல்முருகன்*
****************
முருகனுக்கு நிறைய பெயர்கள் இருப்பது நம க்கு தெரிந்ததுதான். ஆனால் வேல் முருகன் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஈசன் முருகனுக்கு உயிரைக் கொடுத்தான். ஆனால் பார்வதி தேவியோ தந்தையிடம் கோவித்துக் கொண்டு பழநியில் ஆண்டியாக நின்ற முருக னின் கையில் ஒரு வேலைக் கொடுத்தார். அதோடு இந்த வேலை இன்றுமுதல் காப்பாயா க. இந்த வேல் என்றும் உனக்குத் துணையாக இருக்கும் என்று கூறினாராம். அதன்மூலம் தான் வேல்முருகன் என்று அழைக்கப்பட்டார். அதனால் பார்வதி வேல் கொடுத்த திருநாள் தான் தைப்பூசத் திருநாள்.
*தைப்பூச விரத முறைகள்*
****************************
நம்முடைய இன்னல்களைத் தீர்க்கும் தைப்பூச விரத தினத்தன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று விரிவாகப் பார்க்கலாம். தைப்பூச விரத தினத்தன்று மனதில் என்ன நினைத்து வேண்டுகிறோமோ அது அப்படியே நிறைவேறும். அதேபோல் இந்த நாளில் முருக னின் பார்வை பட்டுவிட்டால் உங்களுடைய வாழ்க்கையில் ராஜயோகம் உண்டாகும்.
*துளசி மாலை*
***************
பொதுவாக தீவிர முருக பக்தர்கள் எல்லோரு மே மார்கழி மாதத் தொடக்கத்திலேயே தங்க ளுடைய தைப்பூச விரதத்தைத் தொடங்கிவிடு வார்கள். கழுத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். நாள் முழுக்க திருப்புகழோ, கந்த சஷ்டியோ, சரவண சஷ்டியோ பாடிக் கொண்டிருப்பது நல்லது.
*உணவு*
**********
மாதக் கணக்கில் விரதம் இருக்க முடியாமல் தைப்பூச நன்னாளில் மட்டும் விரதம் இருப்பவ ர்கள் தான் மிக அதிகம். அப்படி அந்த குறிப் பிட்ட நாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் அந்த நாள் முழுக்க வெறும் தண்ணீர் தவிர வேறு எந்தவித உணவையும் சாப்பிட கூடாது. அந்த நாளின் இறுதியில் சூரிய அஸ்தமனத்து க்குப் பின் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும்.
*காவடி*
********
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் தைப்பூச விரதத்துக்கு உண்டு என்று சொல்வார்கள். அப்படி நீண்ட நாட்களாக குண மாகாமல் ஏதேனும் நோயால் அவதிப்படுபவ ராக இருக்கிறவர்கள் முருகளை வேண்டிக் கொண்டு ஏதேனும் ஒரு காவடி எடுத்தால் தீராத நோயும் தீர்ந்து போகும் என்கிறார்கள்.
*ஓம் சரவணபவ...*
*கந்தா சரணம்... ஷண்முகா சரணம்...*
வாகன விபத்து
வாகன விபத்து ஏற்படாமல் இருக்க அகத்தியர் கூறிய ரகசியம்
இன்று பெருகி வரும் வாஹன விபத்துக்கள். அதில் உயிர் நஷ்ட்டமும்,, அங்கஹீனம் ஏற்படுதலும் அதிகம்.
மது போதையிலும், திமிரான ட்ரைவிங்காலும், விபத்தில் சிக்குபவர்களைப் பற்றி நமக்கு தேவையில்லை.
ஆனால் துரதிர்ஷ்டமாக விபத்தில் நல்ல ஒட்டுனர்கள் யாரும் சிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த தாந்த்ரீக பூஜா விதாநம்...
வாகன ஓட்டுபவர்கள் [Driver] வணங்க வேண்டிய தெய்வம்#
எமதர்ம ராஜாவாகிய ஸ்ரீ காலமஹாப்ரபு.
இவருடயை வாகனமாகிய எருமை காளை ( எருது ) அதி அற்ப்புத தபோபலந்களை உடையது.
போகர் >>>> குரு தேவா கலியுகத்தில் எருமை மாடு என்று பண்பற்ற முறயைில் பேசும் வழக்கு அமைந்துள்ளதே?
அகத்தியர் >>>> அது தவறு போகா, இறவைன் படைத்த ப்ரபஞ்சத்தில் தேள்,பாம்பு , மயில், மனிதன், தேவர் முதலான அனைத்து ஜீவன்களிலும் இறைவன் வாழ்கிறான் .
எருமை மாடு என்று கேலி பேசினால்,திட்டினால் மரண தோஷங்கள் உண்டாகும்,.
நெடுநாள் படுக்கையில் கிடந்து மரணம் ஏற்ப்படும்.
எருமை மாட்டிற்க்கு மக நட்சத்திரத்தில் அகத்தி கீரை அளித்து வந்தால் , நோய் நொடி இல்லாத சுகமான மரணம் கிட்டும்.
எம பயம் இல்லாது
மரண தேவதையை எதிர் நோக்கலாம்,உலகில் மனிதன் இதற்க்கு தானே அஞ்சுகிறான்,.
அந்த எம பயம் நீங்க மாரடைப்பு,வாகனவிபத்து, தற்க்கொலை,
போன்று அசுப மரணங்களில்லாது
சிரித்த முகத்துடன் தெய்வச்சிந்தனையுடன்
மரண தேவதை யை தொழ மக நட்சத்திரத்தில் எருமை வழிபாடு உதவுகிறது.
புலிப்பாணி >>> சுவாலினனை {எருமை} வழிபடும் முறை உண்டா குரு தேவா.?
அகத்தியர் >>>> மக நட்சத்திரத்தில்
எருமை மாட்டிற்க்கு அகத்திக்கீரை கொடுப்பதே அதன் வழிபாடாகும் .
புலஸ்த்தியர் >>>>
வாகனம் ஓட்டுபவர்கள் {Driver} மேற்கூறிய முறையில்
எருமையை வணங்குதல் உத்தமமானது,விபத்துகள் ஏற்ப்படாது
(அனைவரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)
மந்திரம் என்றால் என்ன ?
மந்திரம் என்றால் என்ன ?
மந்திரம் என்ற சொல் ஆதி சமஸ்க்ருத
மொழியில் இருந்து வந்தது. "மந்" என்றால்
மனம்; "திர" என்றால் விடுதலை. ஆகவே
மந்திரம் என்பது நம் மனதை பல உலகார்ந்த
எண்ணங்களில் இருந்து விடுதலையாக்க
உருவாக்கப்பட்ட உன்னத ஒலிகளின் ஒரு
கூட்டமாகும். மந்திரத்தை மனனம்+திரயதே
என்றும் பிரிக்கலாம். மனனம் என்றால்
நினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப்
பொருள் கொள்ளலாம். திரயதே என்றால்
காப்பாற்றுதல் என்று பொருள். ஆக
ஜெபிப்பவரை அல்லது உச்சரிப்பவரை
காப்பாற்றுவது என்று பொருள்.
மற்றொரு வகையில் "மந்" என்றால் மனம்,
"திர" என்றால் பிராணன் மனமும் பிராணனும்
கலக்க செய்வது மந்திரம் எனப்படும்.
பிரபஞ்சத்தின் தோற்றம் ஒலியில் இருந்தே
உற்பத்தியாகியது எனக் கூறப்படுகிறது.
மந்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ
சக்தியின் அதிர்வலை குறியீடுகள், ஒவ்வொரு
வகை தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு
அதிர்வலைகள் உண்டு,
எஃப் எம் ரேடியோவில் ஒவ்வொரு
ஸ்டேஷனுக்கும் ஒவ்வொரும் "ஃப்ரீக்வன்ஸி"
இருப்பது போல் பிரபஞ்சத்தில் உள்ள
ஒவ்வொரு தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு
அதிர்வு உண்டு. ஒவ்வொரு சமஸ்க்ருத
எழுத்தும் ஒரு தேவதையை (சக்தி நிலையை)
குறிக்கிறது. மந்திரங்களை உச்சரிக்கும் போது
அதற்குரிய பிரபஞ்ச அதிர்வலைகள்
நவகிரகங்கள் மூலமாக பூமியில் வந்து நமது
சுவாசத்தின் வழியாக சூட்சும உடலில்
சேர்ந்து பின் ஸ்தூல உடலில்
செயல்படுகிறது.
இந்த பிரபஞ்ச அதிர்வலைகள் ஒருவர் செய்யும்
கர்மங்களுக்கு (செயல்) ஏற்ப உடலில்
கூடிக்குறையும், இவை அதிகமாக இருக்கும்
போது வாழ்வின் நல்ல பகுதிகளான
ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் செல்வம்
என்பன இருக்கும். இந்த அதிர்வலைகளை
மனித மனம் ஈர்த்து சேமித்து அதன் மூலம்
நன்மை அடைவதற்காக ரிஷிகள் வகுத்து
வைத்த வழியே மந்திரங்கள்.
மந்திரம் என்றால் அது சமஸ்க்ருதம் மட்டும்
தானா ? என்று சிலர் கேட்கக் கூடும்.
ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம்
சுருக்கமான ஆனால் ஆழமான பொருள் தரும்
சூத்திரத்தினை முன்மொழிகிறது.
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த,
மறைமொழிதானே மந்திரம்
என்ப” (சொல்லதிகாரம், 480). "நிறைமொழி
மாந்தர்" என்பதை சைவ சித்தாந்த
வார்த்தையில் விளக்குவதானால் சிவத்துடன்
இரண்டறக்கலந்தவர்கள், வேதாந்த மொழியில்
சொல்வதானால் பிரம்மத்துடன் கலந்தவர்கள்.
இவர்களே நிறைமொழி மாந்தர் எனப்படுவர்.
இவர்கள் சொல்லும் மொழி எல்லாம்
மந்திரங்கள் எனப்படும். இதன் படி ரிஷிகள்,
சித்தர்களின் வாக்குகள், நாயன்மார்கள்
ஆழ்வார்கள் ஆகியோரின் பாடல்கள்,
ஸ்தோத்திரங்கள் ஆகியவை எல்லாமே மந்திரம்
என்று கூறலாம்.
இயற்பியலில் (Physics) ஒலி அலை அதிர்வு
(resonance) பற்றி நீங்கள் ஒருவேளை
அறிந்திருக்கலாம். ஒரு பகுதியின் இயற்கை
அதிர்வுடன் அதே அளவான? அதிர்வுகள்
பரிவுறும் போது சக்தி கடத்தப்படும், இதே
கோட்பாடுதான் மந்திர சாதனையிலும்
நிகழ்கிறது, ஒரு மந்திரம் பிரபஞ்ச சக்தியின்
இயற்கை அதிர்வினை ஒத்து நம் மனதிற்குள்
ஒரு அதிர்வினை உருவாக்கி சக்தியினை
பெற்றுக்கொள்ளும். மந்திரங்களை உச்சரிக்கும்
போதும் அதுதான் நடக்கிறது.
மந்திரங்களை
நாம் மூன்று வழி முறைகளில் உச்சரிக்கலாம்.
1) #வாசிகம் – இது தெளிவான உச்சரிப்புடன்
மற்றவர்களுக்கு கேட்கும் படி மந்திரத்தினை
கூறுவது, இது வெளிமண்டலத்தில் குறித்த
தெய்வசக்தியினை கவரும் முறை, ஆனால்
எதிர்தடங்கல்கள் அதிகம், இதனால் ஜெபிப்பவர்
பெறும் சக்தி குறைவு, ஆனால் சரியான
சூழலில் தெய்வ சக்தியினை விழிப்படையச்
செய்யலாம், பொதுவாக கோவில்களில்
பிராமணர்கள் பூஜை செய்யும் போது இந்த
முறையினையே பின்பற்றுகின்றனர்.
2) #மானசீகம் – இதில் உதடு அசையாமல்
மனதிற்குள் ஜெபிக்கும் முறை, மனதின் எண்ண
அலைகள் மட்டுமே மந்திர சப்தமாக
உருவாகிக்கொண்டிருக்கும். இதில் புற உலகில்
தெய்வ சக்தியினை விழிப்பிக்க முடியாது,
ஆனால் மானசீகமாக இதனை நாம்
செயற்படுத்தலாம்.
3) #உபாம்சு – இந்த முறையில் உதடுகள்
அசையும் ஆனால் அருகில் உள்ளவர்கள் கேட்க
முடியாதபடி ஜெபித்தல், சாதகரின் காதில்
மட்டும் அவர் ஜெபிப்பது கேட்கும்.
இது மேற்கூறிய இரண்டுக்கும் இடைப்பட்ட
நிலையில் செயல்படுவதாகும், இப்படி
மந்திரம் ஜெபிப்பதே சிறந்தது, ஏனென்றால்
உபாம்சு முறையில் வாசிக ஜெபத்தில்
உடலிற்கு வெளியில் உள்ள தெய்வ
சக்தியினையே பரிவின் (resonance) மூலம்
விழிப்பிக்க முடியும், மானசீக ஜெபமுறை
மூலம் உடலிற்கு உள்ளே உள்ள
தெய்வசக்தியினை மட்டுமே விழிப்பிக்க
முடியும். ஆனால் உபாம்சு முறை
இரண்டுக்கும் இடைப்பட்டது, இது
அகப்பிரபஞ்சத்திலுள்ள தெய்வ
சக்தியினையும் புறபிரபஞ்சத்திலுள்ள தெய்வ
சக்தியினையும் ஒரே நேரத்தில் விழிப்பிக்கும்
தன்மை உடையது. உபாம்சு முறையில்
ஜெபத்தால் அவர்களது அகப்பிரபஞ்சத்திலும்
தெய்வசக்தி விழிப்படைந்து முன்னேற்றம்
ஏற்படும் அதேவேளை புறப்பிரபஞ்சத்திலும்
தெய்வ சக்தி செயற்படும்.இதனால்
ஜெபிப்பவரும் பயன்பெறுவார், அவரை
சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவர்.
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா முறைகளுமே
சிறந்தவைதான் என்றாலும் ஜெபிப்பவர்களின்
நோக்கம் என்ன என்ற அடிப்படையில் நாம்
அவற்றை தேர்வு செய்ய வேண்டும், உலக
பற்று அனைத்தினையும் துறந்து (ரமணர்,
இராமகிருஷ்ண பரமஹம்சர் போல்)
முக்திமட்டுமே நோக்கம் எனில் மானசீக ஜெபம்
சிறந்தது. நாடி வருபவர்களூக்கு காரியம்
கைகூடவேண்டும், பயன் பெறவேண்டும்,
பொதுப்பூஜை செய்கிறோம் என்றால் வாசிக
ஜெப முறை சிறந்தது. உலக கடமைகளையும்
செய்துகொண்டு அகத்தில் ஆன்மீக
முன்னேற்றத்தினை பெற்று புறத்திலும்
நன்மையினை பெற்று போகத்தினையும்
யோகத்தினையும் தடையற பெறவேண்டும்
என்றால் உபாம்சு முறை சிறந்தது.
மந்திரத்தை உடலாக பாவித்து பார்த்தால் அதன்
தலை போன்றது “ஓம்’ என்ற பிரணவம், தலை
அல்லது மூளை இல்லாமல் எந்தவொரு
செயலும் உடலில் நடைபெறாது என்பது
போல் எல்லா மந்திரத்திற்கு முன்னும் ஓம்
சேர்க்க வேண்டும். பிரணவத்தை குறித்தும்
அதன் மகத்துவத்தை குறித்தும் விரிவாக
பிறகு எழுதுகிறேன்.
ஓங்காரத்தை தொடர்ந்து அந்த மந்திரத்திற்குர
ிய தேவதை ஸ்ரீ என்பதுடன் தொடங்கும்,
உதாரணமாக ஓம் கணபதி…. என்றவாறு,
இருக்கும். அத்துடன் சில சக்தியலைகளை
ஈர்க்க பீஜட்சரங்களும் சேர்ந்து வரும்.
மந்திரத்தின் கடைசிப்பகுதி பல்லவம்
எனப்படும், அதாவது முடிவுப்பகுதி, இந்த
பகுதி ஏழு வகைப்படும்.
1) #நமஹ : ந என்றால் இல்லை என்று பொருள்.
ம என்றால் நான் என்பதாகும். நமஹ என்பது
"நான் இல்லை" என்று பொருள்படும். அதாவது
அனைத்துமே வணங்கப்படும் அந்த தெய்வ
சக்திக்கே அர்ப்பணம் என்றும் நான் என்று
எதுவும் இல்லை என்பதாகும். இந்த வகையில்
நாம் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்கிற
நான்கையும் வணங்கும் தெய்வ சக்தியுடன்
ஒன்றாக்குகிறோம்., நாம் நமஹ எனும் போது
நம் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தம்
ஆகியவை விழிப்படைந்து அந்த குறிப்பிட்ட
தெய்வ சக்தியினை ஈர்த்து அதுவாகவே
ஆகிறது. உதாரணத்திற்கு "ஓம் கணேசாய
நமஹ" என்றால் கணேசரின் சக்தி மேற்சொன்ன
நான்கிலும் மெல்ல மெல்ல பதியத்தொடங்கும்.
2) #ஸ்வாஹ : இது அக்னியிற்கு அர்ப்பணிக்கும்
மந்திர முடிவு, இதன் மூலம் மந்திர சக்தி
அக்னியில் சேர்க்கப்படுகிறது,
அதாவது பஞ்ச பூத அக்னி தத்துவத்தில்
மந்திரம் கலந்து பிரபஞ்ச சக்தியினை
செயற்படுத்த தொடங்குகிறது. பொதுவாக
இப்படியான முடிவுள்ள மந்திரங்கள்
ஜெபிக்கும் போது அருகில் விளக்கு, அல்லது
ஊதுபத்தி போன்ற அக்னி ஒன்று கட்டாயம்
இருக்க வேண்டும்.
3) #ஸ்வதா : ஸ்வாஹா என்பது பிரபஞ்சத்தில்
சக்தியினை செயற்படுத்தும் அமைப்பு
என்றால், ஸ்வதா என்பது அகப்பிரபஞ்சத்தில்
உள்ள சக்தியினை செயற்படுத்தும் மந்திர
முடிவாகும். பொதுவாக ஸ்வதா என்ற
முடிவுடன் மந்திரத்தினை ஜெபித்து அக்னியில்
சேர்க்கும் போது அவரவர் முன்னோர்களுக்கு
அந்த தெய்வ சக்தி சேரும்.
4) #வஷட் : தீய சக்தியினை அழிக்கும்
தெய்வசக்தியாக மந்திரம் மாறி பயன்தரும்.
5) #வௌஷட் :இது எதிர் சக்திகளை குழப்பி
சாதகனிற்கு அமைவாக மாற்றும்.
6) #ஹும் :இது எதிரிகள் மேல் கோபசக்தியினை
உருவாக்கும்.
7) #பட் :சாதகனுக்கு எதிரான சக்தியினை
விரட்டும்.
இது போலவே ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஏழு
பண்புகள் இருக்கும். அவை 1) அம்மந்திரத்தை
வெளிக்கொணர்ந்த ரிஷி, 2) மந்திரத்தை எப்படி
உச்சரிக்க வேண்டும் எனும் சந்தஸ், 3) அந்த
மந்திரத்தின் தேவதை, 4) அதன் மூல
சக்தியான பீஜம், 5) அதன் சக்தி, 6) இனைக்கும்
பகுதியான கீலகம், 7) நம் உடலின் பகுதிகளை
ஒழுங்குபடுத்தும் நியாசம் ஆகியன.
மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும்
ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான
மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன
ஆகும். சில மந்திரங்கள் நோயைக்
கட்டுப்படுத்தவும், சில துஸ்ட மிருகங்களை
அடக்கவும், சில பகையை வெல்லவும்
பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை
மானிடர்களின் நலனைக் கருதியே
வெளிப்படையாக வெளியிட்டனர். ஆனால்
பிற்காலத்தில் மனிதன் தனது சுய
லாபத்திற்காக மனிதர்களைக் கொல்லுவும்.
அவர்களை சீரழிக்கவும் அதனை பிரயோகிக்க
கற்றுக் கொண்டான். இதனாலேயே மாந்திரிகம்
என்றாலே மக்கள் மத்தியில் ஒருவித பயமும்,
அதன் மீது ஒரு வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.
மந்திரம் என்பது ஒருவகை சக்தியாகும். ஒலி
வடிவிலானது. ஒலியலைகளைக் கொண்டு
செயலாற்றும் தன்மையுடையது. மனதில்
நினைத்ததை நினைத்தபடியே செயலாற்ற
வைக்கும் சக்தி கொண்டது. அந்த சக்தியை
எத்தகைய செயலையும் செய்து சாதிப்பதற்கு
பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதனைக்
கொண்டு சாதிக்க முடியாது மிக மிக அரிது
என்றே சொல்லலாம்.
மனித எண்ணத்தினது சக்தி மற்ற எல்லா
சக்திகளையும் விட வலிமையானது வேகமும்
அதிகமானது என்று தற்கால விஞ்ஞானம்
ஒப்புக் கொண்டுள்ளது. ஒலியைவிட
விரைவானதும் சக்தி வாய்ந்ததும் சிந்தனா
சக்தி எனப்படும் மனோசக்தி ஆகும். இந்த
சக்தியை எளிதில் தோற்றுவிக்க உதவுதே
மந்திரங்களாகும். மற்றவர்களின் எண்ணங்களை
அறிவது, எண்ணங்களை ஈடேறச் செய்வது,
ஹிப்னோடிசம், மெஸ்மரிசம் செய்வது போன்ற
அனைத்திற்கும் மூலமே மந்திரங்களும்
அவற்றின் சக்தியுமேயாகும். இந்த
மந்திரங்களை பயன் படுத்தும் கருவியாக
யந்திரங்கள் செயல்படுகின்றன. இந்த
வழிமுறைகள் தொன்று தொட்டு நமது
தேசத்தில் பயன்பட்டு வந்துள்து. மந்திர
சாஸ்திரத்தை முறைப்படி அறிந்தவர்
மிகச்சிலரே. இந்த சாத்திரம் அறிவியலானது.
இதனை தவறான வழியில் பயன்
படுத்தாமலும், தீய செயல்களிற்கு
பிரயோகப்படுத்தமலும் இருப்பதற்காகவே
இதனை முழுமையாக யாரும் அடுத்தவரிற்கு
கற்றுத் தருவதில்லை.
மந்திர சாத்திரத்தினை ஒரு மந்திர சாத்திரம்
முழுமையாக கற்றறிந்த குருவிடத்தே கற்றுக்
கொள்ள முடியும். குருவில்லாமல் கற்றுக்
கொள்ளும் எதுவும் சிறப்பினைத் தராது.
மந்திர சாத்திரத்திற்கு முக்கியமானது
எழுத்துக்களும் அவற்றிற்கான ஒலி
அலைகளுமே ஆகும். இப்படி எழுத்துக்களை
கொண்டு செயலாற்றும் மந்திரங்களை
“வர்ணாத்ம சப்தம்” என வழங்குவர். வெறும்
ஒலியலைகளை மட்டும் கொண்டும்
மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியும்.
இந்த வகை மந்திரங்களை “துவனியாத்ம
சப்தம்” என வழங்குவர்.
பஞ்ச பூதங்களில் முதன்மையானதாக
கருதப்படும் ஆகாயத்திலிருந்தே மற்றய நான்கு
பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று
தோன்றியதாக கருதப்படுகிறது. மந்திர
ஒலியானது பஞ்ச பூதங்களிலும் பாயக்
கூடியது. நாம் எழுப்பும் மந்திர ஒலியானது
காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றய
பூதங்களையும் தாக்கி செயல்படுகிறது.
மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள்
உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும்.
மந்திரங்களில் பயன் படும் ஒவ்வோர்
எழுத்திற்கும். ஒலிக்கும் வலிமையும், அந்த
ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும்
கொண்டவை.
பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள் தனது
அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்;
அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால்
தானாகவே இந்த பொருள் அதிரும் என்று
நிருபிக்கப்பட்டுள்து. அந்த தத்துவமே
மந்திரங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதாவது நமது அண்டம் (ஆகாயம்)
பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பது
விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த
அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம்
மந்திரங்களை உரிய அதிர்வுடன் ஜெபிக்கும்
போது பாதிக்கப்படுகின்றன. நாம் ஜெபிக்கும்
மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு
கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன
நோக்கத்திற்கு நாம் மந்திரம் ஜெபிக்கிறோமோ
அந்த செயலைச் செய்கிறது.
மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை
யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த
முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால்,
நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற
முடியும்.
சக்தி எற்றப்பட்ட யந்திரங்களின்
வலிமையினால் சகல செயல்களையும் செய்ய
முடியும். அப்படிப்பட்ட செயல்களில்
நல்லவை, கெட்டவை இரண்டுமேயுண்டு.
சொல்லப்போனால் மந்திரம் என்பது ஒரு வகை
சக்தியாகும். நெருப்பு என்ற சக்தி எப்படி
தீபமாக இருந்து ஒளியைக் கொடுத்து நமக்கு
நல்ல செயல்களைச் செய்கிறதோ அதோ போல்
மந்திரங்களும் நல்லவற்றை செய்ய வல்லன.
அதே நெருப்பு ஒரு வீட்டினை கொளுத்தும்
போது எப்படி தீய செயலை செய்கிறதோ
மந்திரங்களும் அதே போல் தீய
செயல்களையும் செய்ய வல்லன.
நெருப்பினைக் கொண்டு தீபத்தினை ஏற்றுவதா
அல்லது வீட்டினைக் கொளுத்துவதா
என்பதினை தீர்மானிப்பது நெருப்பு அல்ல
மனிதர்களாகிய நாம் தான். அதே போலத் தான்
மந்திரங்களையும் நல்ல காரியத்திற்கு நாம்
பயன்படுத்தினால் அது நன்மையையும் தீய
காரியத்திற்கு பயன்படுத்தினால் அது
தீமையையும் தர வல்லது.
மாந்திரீக சக்தி மூலம் நாம் 1. வசியம் 2.
மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம்
6. வித்வேசணம் 7. உச்சாடனம் 8. மாரணம்
என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.)
செயல்களையும் செய்யலாம்.
அஸ்டகர்மத்தில்
உள்ள ஒவ்வொரு செயலிற்கும் மந்திரங்கள்,
பூசை முறைகள், அமரும் இருக்கை,
பூசைக்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய
மலர்கள், ஜெபத்திற்குரிய மணிகள்(மாலைகள்),
யந்திரம் அமைப்பதற்குரிய தகட்டின் உலோகம்
போன்றன தனித்தனியே அமையும்.
யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது
குறிப்பிட்ட காலம்வரைதான் நிலைத்திருக்கும்.
இந்த கால அளவானது அதில் பதிவாகியுள்ள
உச்சாடனத்தின் அளவு, உருக் கொடுத்த
முறை, உருக் கொடுத்த மாந்திரீகனின் மன
ஒருமைப்பாடு, யந்திரம் எழுதிய உலோகத்
தகட்டின் அளவு, சித்தியான பின்பு அதனை
வணங்கும் முறையைப் பொறுத்து அமையும்.
கோயில்களில் இருக்கும் சக்தியானது
மூலவரிற்கு கீழே வைக்கப்படும்
யந்திரத்தகட்டினாலேயே உண்டாகிறது. இந்த
தகடு யாகங்கள் மூலம் உரு
கொடுக்கப்படுகிறது. அத்துடன் நித்திய ப
+சைகள் முறைப்படி செய்யப்படுகின்றன.
இதன் கால அளவு 13 வருடகாலங்கள்.
அதனாற்தான் 13 வருடத்திற்கு ஒரு முறை
கும்பாவிசேகம் செய்யப்பட்டு யந்திரத்தகடுகள்
புதிப்பிக்கப்படுகின்றன.
மந்திரங்கள் அந்தந்த மந்திரங்களை
ஜெபிப்பவனை காக்கும். ஒரு செயலை
நினைத்து அந்த செயலிற்குரிய மந்திரத்தை
முறைப்படி குரு முகமாக தீட்சை பெற்று
முறைப்படி ஜெபித்து வந்தால் அந்த காரியம்
நினைத்தபடி சித்தியாகும். மந்திரம் என்பது
….. அதன் செய்முறைதான் மாந்திரீகமாகும்.
தேவதைகளிற்குரிய மந்திரங்களை குரு
முகமாக தீட்சை பெற்று அதற்குரிய
நியமத்துடன் ஜெபித்து வந்தால் அந்த
தேவதைகள் நேரில் பிரத்தியட்சமாகி மந்திர
ஜெபம் செய்பவற்கு சகல சித்திகளையும்
அருளும். மந்திரங்கள் ஏழு கோடி எனக்
கூறுவர். அவை பீஜம், பிரணவம், கீலகம்,
ரஷ~p என பல வகைப்படும். மகா
மந்திரங்களை மந்திரமுணர்ந்த
குருவிடமிருந்து தீட்சை மூலமாகவே தெரிந்து
கற்றுக் கொள்ள வேண்டும்.அவற்றுள் முக்கியமான சாந்த மந்திரங்கள் பஞ்சாட்சரி,
தூல பஞ்சாட்சரி, சடாட்சரி, ஏகாட்சரி, பஞ்ச
பிரம்மம், மாலா, சூடாமணி, சிந்தாமணி,
திரிபுரசுந்தரி, அன்னபூரணி, மிருத்யுஞ்சு
ஜெயம், தட்சிணாமூர்த்தி, கணேசர், விஷ்ணு,
ருத்திரன் போன்றன. மந்திரங்களை மந்திர
நிகண்டு, கொங்கணவர் நடு படைக் காண்டம்,
திருமந்திரம், அகத்தியர் மாந்திரீக காவியம்
மற்றும் பல சித்தர்களின் நூல்களில் தெளிவாக
காணலாம்.
ரிஷி அனுஸ்டானம் இல்லாத மந்திரம்
ஆயுளைக் கெடுக்கும். தவறான உச்சரிப்பு,
தவறான ஒலி வியாதியைக் கொடுக்கும்.
தேவாதீனமான மந்திரங்கள் செல்வத்தை
அழிக்கும். ஆயுதம், வஸ்திரமின்றி
செய்யப்படும் மந்திரங்கள் புத்திர, பந்துக்ளை
நாசம் செய்யும். முறைப்படி தெரிந்து
முறைப்படி ஜெபிக்கப்படும் மந்திரங்களே சகல
நன்மைகளையும் இம்மைக்கும், மறுமைக்கும்
தரும்.
உலகம் தோன்றுவதற்கு ஆதாரமாய் இருந்தவை
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும்
பஞ்ச ப+தங்களாகும். ஆகாயத்திலிருந்து
ஒலியும், ஒளியும் தேன்றின.
அண்டமெல்லாம்
வியாபித்திருக்கும் உயிர்க் காற்றினால்
உயிரினங்கள் எல்லாம் உயிர் வாழ்கின்றன.
இந்தக் காற்றே மனித உடலில் தச (பத்து)
வாயுக்களாகி சகல வித தொழிலையும்
செயகின்றன. இந்த தச வாயுக்களின்
அசைவுதான் மனமாகும். மனம் சலனமுள்ளது.
நிலையற்று இயங்குவது. அப்படிப்பட்ட
மனதை அசைவற்று, சலனமற்று இருக்க என்ன
செய்வது என்ற சிந்தனையின் வெளிப்பாடே
மநதிரம் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி ஒரு
நிலைப்படுத்த மந்திரம் மிக மிக சிறப்பான
வழியாகும்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க
வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த
வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த
வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம்
செம்மையாமே (அகத்தியர்)
மனதை செம்மைப்படுத்த மந்திரம் அவசியம்
என்பதனை அகத்தியர் இவ்வாறு
வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாட்சர மந்திரம் என்பது பஞ்ச
பூதங்களையும் கட்டுப்படுத்தும்
மந்திரமாகும். ஒவ்வொரு பூதத்திற்கும்
எழுத்து, வரிவடிவம் உள்ளது. அதாவது ந –ம
– சி – வ – ய என்ற எழுத்துகளாகவும்,
வட்டம்,
ஐங்கோணம், அறுகோணம், சதுரம்,
முக்கோணம் போன்ற வரிவடிவங்களாயும்
உள்ளன. இவை அவற்றிற்குரிய உலோகங்களில்
அவற்றிற்குரிய இடத்தினைப் பெறும் போது
பஞ்சாட்சர யந்திரம் ஆகிறது உலோகங்கள்
பண்டைய கால கருத்துப்படி இரும்பு, செம்பு,
வெள்ளி, தங்கம், வங்கம், துறா, வெண்கலம்,
ஈயம், நாகம் என்ற 9 உம் ஆகும். இந்த
உலோகங்களில் தகடுகள் செய்து அவற்றில்
மந்திர உயிர் எழுத்துக்களை, வடிவங்களை
அவற்றிறகுரிய இடங்களில் எழுத வேண்டும.
குறிக்கப்பட்ட மந்திரங்களிற்கு குறிப்பிட்ட
உலோக தகட்டினயே உபயோகப்படுத்த
வேண்டும் என்ற விதியுள்ளது. இப்படி
செய்தால்தான் மந்திரம் சரியான முறையில்
வேலை செய்யும்.
மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை
யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து
முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால்,
நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற
முடியும்.
மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும்
ஒரு சாதனமாகும். மந்திரங்கள் நம்
எண்ணங்களை வலுப்படுத்தி, ஆற்றலை
வளர்த்து, மனச் சஞ்சலத்தைக் குறைத்து,
மனதை அமைதிப் படுத்தி நம்மிடத்து நல்ல
எண்ணங்களை வளர்க்கும் ஆற்றல்பெற்றவை.
மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில்,
உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த
மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய
தெய்வத்தில், அல்லது தேவதையில்
நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம்,
சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய
பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும்.
மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய
விரிப்பில் (மான் தோல், புலித்தோல், உரிய
மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை,
வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க
வேண்டும். கண்டிப்பாக வெறும் தரையில்
அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது.
அதிகாலை 4.00 மணிமுதல் 6.00
மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர
உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத்
தரும். அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட
நேரத்தினை தெரிவு செய்து கொள்ள
வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து
அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய
வேண்டும்.
மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக,
2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே
வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில்
மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக
பலன் உள்ளது. அதாவது உதடு, நாக்கு
அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே
உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின்
தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து
கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு
நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு
நோக்கியும், மாரண மந்திரங்கள் தெற்கு
நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு.
குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை
அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும்.
மனதிற்குள்ளேயே நாவசையாமல்
உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம்.
16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க
வேண்டும்.மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக
இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக
இருக்கும். பூசை அறையில் நல்ல
நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை
மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக்
கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு வகையான நறுமணம்
பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு
பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக்
கொள்வது நல்லது. யட்சிணி, மோகினி போன்ற
தேவதைகளிற்கு மல்லிகை மணம்
பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை
மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு.
அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு,
தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை
தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி
புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால்
சாம்பிராணி தூபம் உபயோகிப்பது
சிறப்பானது.
பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி
திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத
தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு
சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண
நாட்களில் கிரகண வேளையில்
உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக
பலனைத்தரும்.
மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது
சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது.
அகோர மந்திரங்கள் முறைப்படி வழிபாடு
செய்யாவிட்டால் நமக்கு எதிர்விளைவுகளைக்
கொடுத்து விட வாய்ப்புள்ளது....
‘கர்மா கடவுள்’
படித்ததில் பிடித்தது
நமது ‘கர்மா கடவுள்’ இது.
‘ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நமது விதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது. அதை மாற்ற முடியாது’ என்கிற கருத்து பலரை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் ‘அதை மாற்ற முடியும். இந்த மண்ணில் யாவரும் நல்ல வண்ணம் வாழலாம், எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை’ என்று உணர்த்துவதே இந்த பதிவின் நோக்கம். ஆனால் இது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் முயற்சியல்ல.
உங்கள் எண்ணங்களையும், சிந்தனை ஓட்டத்தையும் முற்றிலும் மாற்ற நடக்கும் வேள்வி. அதை நினைவில் வைத்திருங்கள்!
இந்த கதையை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். படித்திருக்கலாம். கேட்டிருக்கலாம். அதனால் கவனத்துடன் படிக்கவும்.
அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர்.
எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.
தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.
“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.
ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.
பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது.
உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.
“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”
“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”
தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.
அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.
இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.
வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.
அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.
மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.
அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.
அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.
இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.
வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.
மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.
ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்? இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.
ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.
மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.
ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.
“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.
*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.
நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.
சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு. கர்மவினைக் கொள்கை சிவனை வழிபடுகிறவர்களிடம் எடுபடாது. இதை நாம் சொல்லவில்லை திருஞானசம்பந்தரே சொல்லி இருக்கிறார்.
தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.
சீர்காழி பிரம்மபுரீஸ்வரரை நோக்கி சம்பந்தப் பெருமான் பாடிய இந்தப் பாடலின் பொருள் என்ன தெரியுமா?
“தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் (சீர்காழி) என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்!”
ஆம்… நமக்கு அருள் செய்வதற்கென்றே காத்திருக்கிறான் அந்த காருண்யமூர்த்தி! அவன் கழல் பற்றுவோர் பாக்கியசால
‘சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்
ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....
ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...
-
தயவு செய்து அதிகமாக பகிரவும் !! இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல் புற்றுநோய் வாய்புற்றுநோய் குடல்புற்றுநோய் போன்ற...
-
வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி **வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி*** நாம் இயற்கையின் பக்கமும் இயற்கை தயாரிப்பின்...
-
சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள் சில வார்த்தைகள் இணையும்போது , அதற்கு அபரிமிதமான சக்தி கிடைத்து விடுகிறது...