வியாழன், 13 மே, 2021

*"அதென்ன! அசுவமேத யாகம் ?…"*

*"அதென்ன! அசுவமேத யாகம் ?…"*

ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு… அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்றுவிட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்துவிட்டு அந்த வெற்றியை  கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப்போட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.

இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப்பெண்கள் முக்கியமாக ராணி குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்கு தான். இதைக் கூற சங்கோஜமாகத் (கூச்சமாக) தான் இருக்கிறது. அசுவ மேதயாக ஸ்லோகமே அப்படித் தான் இருக்கிறது.

“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”

எனப்போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி  ராணி வழிபட வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்தக் கடமை முடிந்ததும்… மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்து விடுவார்கள். இது தான் அஸ்வமேத யாகம்.

மக்களைப் போலவே, ராஜ குடும்பத்தினரும் பிராமணர்களின் மந்திரயாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும் “ஏ…ராஜா… இந்த யாகத்தை நல்லவிதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும் பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்குகொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்களாம்.

இதையல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித தர்மம், மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே…? ஏன் இப்படி…? என யாகம் நடத்தும் இடத்துக்கே போய் யாகம் நடத்தியவரிடம் (பிராமணர்களிடம்) கேள்விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள், “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு ஷேமம் கிடைக்கும்” என்று கூற... புத்தர் திரும்பக் கேட்டார்.“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே.. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெற வேண்டாமா? அந்த அக்கினி குண் டத்தில் யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டுமல்லவா?. ப்ராகிருத மொழியில் மக்களிடமும் இதே கேள்வியை புத்தர் பரப்ப… திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர் கள்

நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம்  எங்கே போகிறது என்ற புத்தகத்திலிருந்து...

புதன், 12 மே, 2021

முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்ல..

முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்ல..☝️🙏☝️

காலங்காத்தால...ஒருபொம்பளப்புள்ள
இப்படியா தூங்குறது...
எந்திரிச்சு வாசப்பெருக்கி தெளித்து
கோலம்போடுடி ...மூதேவி வந்து
அண்டிரப்போகுது என விரட்டிய
அப்பத்தாளிடம் இருந்தது...
ஆன்மீகமோ மூடநம்பிக்கையே இல்லை

காலைக்காற்றும் குனிந்து நிமிர்தலும்
வளரும் பெண்பிள்ளையின் 
கருப்பைக்கு நல்லது என்ற அறிவியல்..

அடியேய் தலவாசல்ல..
வாளில தண்ணிவை என்றதும்

ஏம்ப்பு இது என்ன பழக்கம்
காடுமேடலாம் சுத்திட்டு
கைகாலு கழுவாம அப்டியே
வீட்டுக்குள்ள வர்றது...
சனியன வீட்டுக்குள்ள கூப்புடவா 
என்ற பாட்டியின் திட்டில்
இருந்தது மூடநம்பிக்கை இல்லை

கிருமிகளை அழித்துவிடும் அறிவியல்
இன்று கொரனா வந்து ஞாபகப்படுத்தி இருக்கிறது...

 ஆத்தி என்னதிது..
தீட்டானவ ஊட்டுக்குள்ள பொழங்குறது
சாமிகுத்தமாயிடாது...
என பய முறுத்திய அம்மாச்சியிடம்
இருந்தது ஆன்மீகமல்ல..

கிருமித்தொற்றும் கெட்டவாடையும்
பரவிவிடக்கூடாது என்ற அக்கறையும்
உடலுக்கு ஓய்வுதேவை என்ற அறிவியலும்...

இந்தா வாயத்திற...விசத்தையா 
தாறாய்ங்க குமட்டிட்டு கிடக்குறவ
என இடித்துக்கொண்டே...
புகட்டப்பட்ட நல்லஎண்ணெய்யிலும்
நாட்டுக்கோழி முட்டையிலும்
உழுந்தகளியிலும்...
இடுப்புப்பகுதிக்கு தேவையான
அனைத்து அறிவியலும் இருந்தது..

என்னத்தா வயித்துப்புள்ளக்காரி..
எப்பப்பாரு முடங்கியேவா கிடக்கிறது என கனிவாகவும்...

இந்தா உன் புள்ளைக்கு ஒன்னும் வலிச்சிராது ..குனிஞ்சு நிமிந்து
கனமில்லாத...
வேலையப்பாரு என்ற அதட்டலில்..
சிசேரியன் தேவையின்றி இருந்தது..

ஏன்டி சின்னச்சிறுக்கி..
இந்த சீரகத்தண்ணிய கடக் கடக்னு
முழுங்கிடு...
என்னடி ஆத்தா இப்டி ஆயாவ
கண்டு வெட்கப்படுறவ பாவடைய தளத்து என அடிவயிற்றில்
தேய்க்கப்படும் விளக்கெண்ணெயில்..
சூட்டு வலியும் பிரசவலியும்
பிரித்து ஆராயப்பட்டது...

இந்தாத்தா...வயிறுவலிக்கத்தான் 
செய்யும் பச்சஉடம்பும்புல..
ஆனாலும் என் ராசாத்தி
பாவடைய இறுக்கிகட்டுடி
என வந்த அக்கறையில்..
கர்ப்பப்பையில் காற்று ஏறுவது
தடுக்கப்பட்ட அறிவியல் இருந்தது..

அட என்னடி இது கூத்து
புள்ளக்கு மல்லாந்துபடுத்து
பால்கொடுக்குறவ
மாடு கூட இப்டி பண்ணாதுஎன்ற
குத்தலில்...
நாசியில் புரையேறிடும் குழந்தைக்கு
என்ற அறிவியல் இருந்தது..

இந்தா எப்பபாரு
வேட்டிய வரிஞ்சு கட்டிட்டு.. வேர்க்காது
அவுத்துவிட்டு ராசா கணக்கா நடப்பு
என்ற பாசத்தில்..
விந்தணுவின் வீரியம் காக்கப்பட்டது

ஏய்யா புதுப்பொண்டாட்டியகூட்டிட்டு
கோயிலு குளம்னு நாலு இடம்போயிட்டுவர்றது
என்ற கனிவில்...
கலவியின் ஆயக்கலைகள்அறுபத்திநான்கும்
கோவில் கோபுரத்திலும் சிற்பத்திலும்
இருக்கு கத்துக்கோ என்ற மறைமுக உண்மை இருந்தது...

என்னப்பு மேலுக்கு முடியலயா..
என்னத்தா மசமசனு இருக்கா..
ஏன்டா பேராண்டி ராவலாம் கத்துற
ஏன்டி பேத்தியா எப்ப நீ பேசி
இந்த கிழவிட்ட சண்டைக்கு வர்றது
என விசாரித்தலில்...
அத்தனைக்கும் கைவசம் கைவைத்தியம் பார்க்கப்பட்டது...

என்னப்பு...என்னதான் வேலைனாலும்..
காலைச்சோத்தயா ii வேணாங்கிறது..
இந்தா ரெண்டுவாய் கஞ்சியும் வெங்காயமும் குடி..என்ற மிரட்டலில்
அன்றைய பொழுதுக்கான..
நோய்எதிர்ப்பு சக்தி ஊட்டப்பட்டது

ஏப்பு..வெயில்ல கிடந்துட்டு
காபி தண்ணியவேவா குடிக்கிறது
இந்த ரெண்டு இளநிய குடி 
என்ற பாசத்தில் அறிவியலும்
அம்சமாய் இருந்தது..

தனிக்குடித்தனம் என்று..
வீட்டு பெரிசுகளை தனியாய் விட்டது
முதல் புடித்த சனி...

நாகரீகம் என்ற பெயரில்..
அய்யே  கம்பங்கஞ்சியா என
அலட்டிக்கொண்ட அகராதி..

நாங்கலாம் நவீனமாக்கும்என
குழாய் மாட்டி திருந்த பவுசு

ஹாய் என்ற கைலுக்கலில்
பரவத்தில் பாழாய்ப்போன பாங்கு

அத்தனையும் சேர்த்து..
வருசத்துக்கொரு நோய்க்கு..
கம்பளம் விரித்து காத்துக்கொண்டிருக்கிறோம்..

படித்ததில் பிடித்தது ☝️🙏

சனி, 8 மே, 2021

*நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது

அன்பிற்குரியவர்களே...

கரோனா தீவிரமாக  இருக்கும் நிலையில் கோவிட்-19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு இருக்கிறது. மருத்துவன் என்ற முறையில் , நிறைய நோயாளர்களை கவனித்த வகையிலும் சில விளக்கங்கள் தர விரும்புகிறேன்.

1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?* 

 உண்மை.எதிர் சக்தி நன்றாக உள்ளவர்களுக்கு கொரானா வைரஸ் பாதிப்பதில்லை பாதித்தாலும் இலேசான அறிகுறிகளோடு சென்றுவிடுகிறது.

2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?* 

இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 4-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந்த வைரஸ்க்கு இருக்கிறது. 

3. *கரோனா வைரஸ் வந்து போனதே தெரியாமல் பலர் இருக்கலாம் என்று கூறுகிறார்களே உண்மையா ?* 

ஓரளவு உண்மை.

 ஆனால் ஏதாவது ஒரு அறிகுறியையாவது சிலர் அனுபவித்து இருப்பார்கள். அது காய்ச்சலாகவோ, லேசான சளியாகவோ, உடல்வலியாகவோ இருந்து இருக்கலாம்.

4. *எனக்கு இருமல் காய்ச்சல் இருக்கிறது. ஆனால் சோதனை செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் ?* 

உங்களுக்கு இருமல் காய்ச்சல் இருப்பின் நன்கு ஓய்வு எடுங்க. அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனைபெறவும். சுய சிகிச்சை வேண்டாம்.

5. *கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினாலே அல்லது அவர் சென்ற அறைக்கு சென்றாலே அவர் தொட்ட பொருளை தொட்டாலே நாம் தொற்றுக்கு உள்ளாகி விடுவோமா ?* 

அமெரிக்காவின் CDC வெளியிட்ட தரவுகளின் படியும் உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஒரு வருட ஆய்வறிக்கையின் படி *99 சதவீதம் மூக்கு வழியாக தான்* இந்த கரோனா வைரஸ் பரவுகிறது. அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருள் மூலமாக இன்னொருவருக்கு பரவுவது என்பது 0.001 வாய்ப்பு தான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி இருக்கிறது. அப்படி பரவி இருந்தால் இதற்குள் உலக மக்கள் தொகை பாதி அழிந்து இருக்கும். கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்முவதன் மூலமும் இருமுவதின் மூலமாக தான் அதிகம் பரவுகிறது. 

6. *பிறகு ஏன் கோலப்பொடி போல குளோரின் பொடியையும் மருந்தையும் கரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தெளித்து சுத்தம் செய்கிறார்கள்? அவ்வாறு செய்வதால் கரோனா அழிந்து விடுமா ?* 

கண்டிப்பாக இல்லை. கரோனா பரவிய நேரத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றிய தெளிவு உலக சுகாதார நிறுவனத்திடம் இல்லை.கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் கிருமிநாசினி வீட்டிலும் அலுவலகத்திலும் தெளிப்பதால் கரோனா வைரஸ் ஒழியாது என்று தெளிவாக  கூறிவிட்டது. இவ்வாறு தெளிப்பதால் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் சாகுமே தவிர கரோனா வைரஸ் அழியாது. 

7. *ஏன் சிலர் லேசான அறிகுறிகளாலும் சிலர் தீவிர அறிகுறிகளாலும் பாதிக்கப்படுகின்றனர் ?*

இதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது, ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டது என பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் முக்கிய காரணம் நீங்கள் எவ்வளவு அளவு வைரசால் (Viral Dose) பாதிக்கப் படுகிறீர்கள் என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதிக அளவு வைரஸ் க்கு நீங்கள் Expose ஆனால் தீவிர தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. குறைந்த அளவு Viral Dose க்கு நீங்கள் Expose ஆனால் குறைவான பாதிப்புக்கு உள்ளாகலாம். 
அதே நேரத்தில் உடலின் உச்ச பட்ச நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் கொரானா வைரஸ் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.

8. *கரோனா Positive என்று அறிய வந்தால் என்ன செய்ய வேண்டும்* ? 

முதலில் பதறக் கூடாது. யாரிடமும் மறைக்க கூடாது. வீட்டில் உள்ளவரிடம் தெரியபடுத்தி 14 நாட்களுக்கு தனி அறையில் இருக்க வேண்டும். வெளியே வரவே கூடாது.  தொடர்ந்து 5 நாட்கள் மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பெரும்பாலனோருக்கு காய்ச்சல் முதல் மூன்று நாட்களிலேயே குணமாகி மற்ற அறிகுறிகளான இருமல் உடல் வலி தொடர்கிறது.ஆனால் தொடர் காய்ச்சல் என்பது நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயமாக கருத வேண்டும். 

9. *என்னென்ன மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்* ? 
சுய வைத்தியம் செய்து கொள்ளாமல் அருகிலுள்ள மருத்துவர்களை அணுகி முறையான சிகிச்சை பெற்றுக் கொள்வதே நன்மை தரும்...

10. *எப்போது நாம் அச்சம் கொள்ள வேண்டும்* ? 

கரோனா பாதித்து 5,6,7 ஆம் நாட்கள் மிக முக்கியமானது. அப்போது உங்களுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று விட வேண்டும் 

11. *என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும்* ? 

வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலே போதுமானது. அதே நேரத்தில் அதிகமான நீர் குடிக்க வேண்டும். பழச்சாறு தவறாமல் பருக வேண்டும். புரதமே உடலின் கட்டுமான வீரர்கள். எனவே சைவம் என்றால் பருப்பு வகைகளையும் அசைவம் என்றால் சிக்கன் மீன் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கு சுவை மணம் போன்ற உணர்வுகளை இழந்து இருப்பீர்கள். சாப்பிட முடியாது, ஆனால் சாப்பிட்டே ஆக வேண்டும் தவறாமல். ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல் ஆற்றலை இழக்க கூடாது. இழக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிக தொற்றுக்கு அது வழி வகுக்கும். 

12. *Walking,Yoga போன்றவற்றை செய்யலாமா* ? 

தாராளமாக செய்யலாம். நீங்கள் அடைந்து இருக்கும் அறைக்குள் மட்டுமே. ஆனால் இதையெல்லாம் செய்ய உங்கள் மனம் ஒத்துழைக்காது என்பதே உண்மை. ஏனெனில் அதிக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் போது உங்களால் சகஜமாக இருக்க முடியாது. 

13. *ஏன் கரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர்* ? 

நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின் அதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்க கூடிய தொற்று. எனவே பாதிப்பு வந்த உடன் நாம் சொல்லும் போது மட்டுமே மற்றவர்கள் நம்மிடம் வராமல் இருக்கவும் நம்மால் பிறருக்கு பரவாமல் இருக்கவும் நாம் செய்யும் சமூக கடமை. அதே நேரத்தில் உங்கள் அனுபவங்களை பகிர்வதன் மூலம் பலர் எச்சரிக்கையுடன் இருப்பர். வைரசின் சங்கிலியை அறுத்தாலே கரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வந்துவிடும் 

14. *கரோனாவால் பாதிக்கபட்டால் நம் உடல் மீண்டும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புண்டா* ? 

இயற்கையாகவே நம் உடல் எல்லா விதமான வைரஸ் பாக்டீரியாவை எதிர்கொள்ளும் திறன் உடையது தான். ஒரு புதுவிதமான வைரஸ் உள்ளே வரும்போது தான் நம் உடல் திணறும். அந்த திணறலே காய்ச்சல் இருமல் உடல்வலியாக நமக்கு நம் உடல் நம்மிடம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் வைரஸை முழுமையாக நம் உடல் போரிட்டு வென்ற உடன் நம் உடலில் Antibodiesஐ உற்பத்தி செய்துவிடும். இது அடுத்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். 
ஆனால் கரோனவை பொறுத்தவரை இயற்கையாகவே நம் உடலில் Antibodies உற்பத்தி ஆனாலும் சுமார் 6-9 மாதங்களே அந்த பாதுகாப்பு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 

15. *தொற்றில் இருந்து தப்பிக்க மிகச்சிறந்த வழி என்ன* ? 

Mask அணிவது,
நல்ல ஒரு சக்தி தரக்கூடிய உணவுகள்,
பொது இடங்களில் கூட்டங்களுக்கு செல்லாமல் இருப்பது, போன்ற பாதுகாப்பு வழிமுறைகளே போதுமானது ...

16. *கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா* ? 

அரசு ஆலோசனைப்படி வயது முதிர்ந்தோர் எடுத்து கொள்வது நல்லது. இது தீவிர தொற்று நிலைக்கு கொண்டு செல்லாமல் உங்களை பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்து கொண்டாலே கரோனா தாக்காது என்று எண்ணக் கூடாது.

17. *ஹோமியோபதி மருந்துகள் பலன் தருமா?*

கண்டிப்பாக...

 ஹோமியோபதி மருந்துகள் நோய் பரவுவதை தடுப்பதிலும் இதற்கு சிகிச்சை அளிப்பதிலும் மிகச்சிறந்த பலனை கொடுத்து வந்திருக்கின்றன.

அன்புடன் 

மரு.ப.எழில் செல்வன் B.H.M.S.,
மலர் ஹோமியோபதி மருத்துவ மையம்.
நாமக்கல்-கரூர்
📱94432 65902

செவ்வாய், 4 மே, 2021

இரத்த புற்று நோய் நுரையீரல் புற்றுநோய்வாய்புற்றுநோய்குடல்புற்றுநோய்போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்

தயவு செய்து அதிகமாக பகிரவும் !!

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல்        புற்றுநோய்
வாய்புற்றுநோய்
குடல்புற்றுநோய்
போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்

 முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளபட்டு சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் ஆசிர்வாதத்துடன் 
புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

அந்த மருந்தின் பெயர் *"நந்தி வித்து நாதமருந்து"* ஆகும்.

இந்த மருந்து நம்ம ஈரோட்டில்உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில்  3200 மதிப்பு உள்ள15 நாள் மருந்து ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது...
இதை ஒருசேவையாக செய்து வருகிறார்கள்
ஆயிரக்கணக்கான பேர் குணமாகிவருகிறார்கள்
நேரில் சென்று ஆதாரத்தை பார்த்து கொள்ளலாம்
நாம் விரும்பினால் அங்கு ஒரு உண்டியல் வைத்து இருப்பார்கள்
அதில் காணிக்கை செலுத்தலாம் 
 காலை உணவு மதிய உணவு இலவசமாக வழங்குகிறார்கள் 
அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள்நாகலிங்கம் RAMP
மருத்துவரின்பெயர்
டாக்டர் சிவானந்தம் BSMS
 இங்கு உள்ள சிறப்பு என்னவெனில்நன்கு கவனித்து பார்கிறார்கள் மரணதருவாயில் உள்ள பலர் மீண்டு வாழ்ந்து வருகிறார்கள் 
நீங்கள் எந்த மருத்துவமுறையில் மருத்துவம் பார்த்தாலும்
இங்கு செல்லுங்கள்

அணுக வேண்டிய முகவரி;
அருள் சித்தா கேர்
H.25 ஹவுசிங்யூனிட்
மோலகவுண்டன் பாளையம் பிரிவு பஸ்ஸடாப் 
(கார்மல் ஸ்கூல் அடுத்த ஸ்டாப்)
கொல்லம்பாளையம்
ஈரோடு.638002
பஸ் நம்பர்;42,38,30சோலார் வழி பஸ் அனைத்தும்
செல்லும்
🦀🦀🦀🦀🦀🦀

*அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டிய து*
நோயாளர் பெயர்
ஊர் இவற்றை கீழ்க்கண்ட நம்பரில் வாட்சப்பில் பதிவு செய்து கொள்ளவும் அவர்கள் உங்களுக்கு அப்பாயின்மென்ட் தருவார்கள் தினமும் நூற்று கணக்கான போண் வருவதால் போண்பேசுவதை தவிர்க்கறார்கள்
போணில் ஆலோசனை வழங்குவதில்லை 

 

PHONE :
☎ முன்பதிவு வாட்சப் நம்பர் 9385941299
📞6382525456

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...

frnzz plz pass this msg... to all !

பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!

இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...

இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...

ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.

அக்கறையுடன் இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... 👈👈👈  # health # தகவல்: காந்தி ஆசிரம முன்னாள் துணை தலைவர் திரு.S.ஆராவமுதன். செல்போன் எண்.9442435626. ஓய்வு. பெங்களூரு .

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

*கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

VERY VERY IMPORTANT PLEASE PLEASE SHARE TO ALL..

*மீண்டும் உலகை ஆளப்போகும் நம் தமிழினம்!!!.*

கோவை E S I   மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி?

 *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

 இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. 

 இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும்.

 அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது. 

அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை. 

மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....*
          *இஞ்சி,மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள். 

உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி  கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....*

     *இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த  அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்  சேர்ந்தால் அதன்மூலம் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....*💓🙏🙏

வியாழன், 22 ஏப்ரல், 2021

பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்

பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள்.

அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

8. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும். உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.

9. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே உங்கள் மகளுக்கு பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.

10. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். வெளியுலகில் எந்த மாதிரி பிரச்சனைகள் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். மேலும் தற்காப்பு கலைகளையும் சொல்லி கொடுங்க.

11. இன்றைய காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் அடுத்தவர் கையை எதிர் பார்க்க முடியாது. அனைத்து வேலைகளை பற்றியும் சொல்லி கொடுங்க. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.

12. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்!

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

ஓமம், சோம்பு, கிராம்பு, லவங்கப்பட்டை, சுக்கு மற்றும் ஏலக்காய்,*

*- BEST HEALTH*

*உடலில்* *ஆக்சிஜன்* *அளவு* *98* - *100* *க்குள்* *இருக்க* *வேண்டும்* என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;
ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் *ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* .
1.கிராம்பு.      314446 ORAC
2. பட்டை. ....   267537 ORA
3. மஞ்சள்.......102700 ORA
4. சீரகம்........... 76800 ORA
5. துளசி..........67553 ORAC
6. இஞ்சி..........28811 ORAC

சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?... அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;
1. *ஓமம்* ........100 கிராம்
2. *சோம்பு* .......50 கி.
3. *கிராம்பு* ........5 கி.
4. *பட்டை* .........   5 கி
5. *சுக்கு* ............10 கி
6. *ஏலக்காய்* .....10 கி.
இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால்  டீ  மசாலா டீ ஆக மாறும் ; 

Corona வேகம்  அதிகரித்துக் கொண்டே உள்ளது. நுரையீரலை சென்று தாக்கி ஆக்சிஜன் அளவை குறைத்து மரணம் அடையச் செய்யும் ஒரு கிருமி.  

தயவு செய்து உங்கள் உறவுகளுக்கும் / நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள் ! 
கொரோனா தொற்று வந்து செலவிடும் விரயச் செலவிற்குப் பதில் எப்போதும் வழக்கமாக உபயோகிக்கும் பொருள்களான *ஓமம், சோம்பு, கிராம்பு, லவங்கப்பட்டை, சுக்கு மற்றும் ஏலக்காய்,* தேவையான அளவு சேர்த்து மேலே சொன்னது போல் தயார் படுத்தி காலையில் அருந்தும் டீ யில் கலந்து பருகினால் நம் உடலுக்கு தேவையான Oxygen கிடைத்து விடுமே.                                            *வரும் முன் காப்போம்*  கொள்கை ரீதியாக நாம் கடைபிடிக்கலாமே...

*இது ஒர் விழிப்புணர்வு பதிவு...*

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...