புதன், 16 ஜூன், 2021

உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம்‌ செய்முறை

உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம்‌ செய்முறை

உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம்‌ செய்முறை :
தேவையானவை பொருட்கள் :
1.பாதாம்‌ - 100 கிராம்‌
2.முந்திரி - 100 கிராம்‌
3.பிஸ்தா - 100 கிராம்‌
4.கசகசா - 100 கிராம்‌
5.கற்கண்டு - 200 கிராம்‌
6.நெய்‌ - 250 கிராம்‌
7.சோற்றுக்கற்றாழை - 200 கிராம்‌
8.பால்‌ - அரை லிட்டர்‌
செய்முறை :
சோற்றுக்கற்றாழையை தோல்‌ நீக்கி நன்றாக கழுவி அரைத்து வைத்துக்கொள்ளவும்‌. பாதாம்‌, முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை
தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும்‌. பிறகு ஒரு சட்டியில்‌ பாலை ஊற்றி 15 நிமிடங்கள்‌ நன்றாக காய்ச்ச வேண்டும்‌. பிறகு
கற்கண்டை போட்டு கிளறி கரைந்தவுடன்‌ அரைத்து வைத்துள்ள சோற்றுக்கற்றாழை, பாதாம்‌, முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறவும்‌. பிறகு நெய்‌ ஊற்றி 40 நிமிடங்கள்‌ வரை கிளறவும்‌. லேகியம்‌ பக்குவமடையும்‌ போது நெய்‌ பிரிந்து வரும்போது இறக்கிவிடவும்‌.
பயன்படுத்தும்‌ முறை :
நன்றாக ஆறியவுடன்‌ பாட்டிலில்‌ அடைத்து வைத்து தினமும்‌ சிறியவர்களுக்கு அரை ஸ்பூன்‌, பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன்‌ அளவு
சாப்பிட்டு வரவும்‌. நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்துபவர்கள்‌ குளிர்‌ சாதனப்பெட்டியில்‌ வைத்து பயன்படுத்தலாம்‌.
பயன்கள்‌ :
1.உடலுக்கு நல்ல வலிமையை தரும்‌.
இது உடல்‌ சூட்டை தனித்து குளிர்ச்சி
உண்டாக்கும்‌.
2.அனைத்து மூல நோய்களும்‌ தீரும்‌.
நரம்பு தளர்ச்சி குணமாகும்‌. மெலிந்த உடல்‌ பலம்‌ பெறும்‌.
3.ஆண்மை குறைவினால்‌ ஏற்படும்‌
குழந்தையின்மை கோளாறு நீங்கி குழந்தை பேறு உண்டாகும்‌.
4.வெட்டை நோய்‌ குணமாகும்‌.

செவ்வாய், 15 ஜூன், 2021

விவசாய பழமொழிகள்

விவசாய பழமொழிகள்



#நம்_பண்டைய_விவசாயப்_பழமொழிகள்...

🌝 தவளை கத்தினால் மழை 

🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம் 

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல் 

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய் 

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை 

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய் 

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய் 

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை 

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ 

🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் 

🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு 

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும் 

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை 

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 

🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும் 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

யாரையும் நம்பாதீர்கள்.

உழவே தலை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.

ஹீலர் பாஸ்கர் அமைதியும் ஆரோக்கியமும் book

ஹீலர் பாஸ்கர் அமைதியும் ஆரோக்கியமும் book

ஹீலர் பாஸ்கராகிய நான்,
" அமைதியும் ஆரோக்கியமும் "
என்ற பெயரில் மாத இதழை 7 வருடமாக 81 மாத இதழ்களில் 400-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். இதோ உங்களுக்காக. 

https://drive.google.com/drive/folders/1HikLXtCAmIrUPwvbjxF-E5Z_fxUs7y9h?usp=sharing

தயவு செய்து, ஒருமுறையாவது அனைத்து இதழ்களில் உள்ள தலைப்புகளை பார்த்து வையுங்கள்.
எப்பொழுது எந்த தலைப்பு தேவையோ அப்பொழுது படிப்பதற்கு வசதியாக இருக்கும்.

இப்படிக்கு.
 ஹீலர் பாஸ்கர்.

கண் நோய்களுக்கு சித்த மருத்துவம்

கண் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் கருவிகள்
#கண் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் கருவிகள்...

#கண்ணாயுதங்கள்

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள கண் மருத்துவ சிகிச்சை முறைகள் அனைத்தும் மருத்துவ முறைகளுக்கும் முன்னோடி ஆகும். சித்தர் அகத்தியர் மற்றும் நாக முனி ஆகியோர் 96 வகை கண்நோய்களை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவற்றின் உட்பிரிவுகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் மொத்தம் 125 கண்நோய்கள் தமிழ் மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வடநாட்டு மருத்துவ நூல்கள் தங்கள் மருத்துவத்தில் தொகையில் கிடைக்காத கூடுதல் 21 நோய்களின் விபரங்களை தமிழ்மருத்துவ நூல்களில் இருந்து பெற்றதாக குறிப்பிடுகிறது. 

#கண்நோய்களுக்கு பயன்படுத்துவதற்காக இருபதிற்கும் மேற்பட்ட நுண்ணிய கருவிகள் சித்த மருத்துவத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளன. கண்ணில் வளர்ந்த சதையை உரித்து எடுப்பதற்கு சரவண பத்திரம் என்ற சொரசொரப்பான கூர்மையான விளிம்புகளை உடைய இலைகள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமன்றி கண்களில் எண்ணை ஊறவைக்கும் புறவளையம் என்ற தர்ப்பணம், பற்று போடுதல் என்ற தப்பளம், சொட்டு சொட்டாக கண்களுக்கு மருந்துவிடும் ஒழுக்கு மருத்துவம் மற்றும் வேகமாக மருந்துகளை தாரைதாரையாக ஊற்றும் தாரை மருத்துவம் என சித்த மருத்துவம் தொடாத மருத்துவ எல்லையே இல்லை எனலாம். 

#பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கண் பரிசோதனை கருவிகள் மூலமாக பல கண்நோய்களை நவீன மருத்துவம் அறிவதற்கு முன்பாகவே 96 வகையான கண் நோய்களை பெயரிட்டு அதற்கான கருவிகளையும் பெயரிட்ட சித்த மருத்துவத்தின் அறிவியலை நவீன மருத்துவம் முழுவதுமாக எடுத்துக் கொண்டது. 

#அதுமட்டுமன்றி பலகணி பார்த்தல் என்ற அகத்தியரின் கண் மருத்துவ பயிற்சியானது Pinhole refraction என்ற நவீன கண் மருத்துவ பயிற்சி கருவியாக மாறிவிட்டது. பிரித்து அழித்தல் என்ற பெயரில் விழித்திரை பாதிப்புக்கு வழங்கப்படும் இரட்சை என்ற சூடு போடும் சிகிச்சை முறை விழித்திரை கிழிதலுக்கு லேசர் சிகிச்சை முறையாக தற்சமயம் மாற்றம் எடுத்துள்ளது. நவீன மருத்துவமுறை மற்றும் பல்வேறு இந்திய முறை மருத்துவ முறைகளுக்கும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன கண் நோய் மருத்துவம் மற்றும் அதற்கான கருவிகள்தான் முன்னோடி. சித்த மருத்துவத்தில் அறிவியல் இல்லை என்று ஏளனம் செய்யும் அனைத்து முறை மருத்துவர்களும் அகத்தியரின் கண் நோய்கள் பற்றிய பாடல்களையும் அவை தொகுக்கப்பட்ட சரபோஜி மன்னரின் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நவீன மருத்துவ அறிவியலுக்கு வித்திட்டது சித்த மருத்துவம்தான் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

#சித்தமருத்துவத்தில் 
 #அறுவைகருவிகள்

        அகத்தியர் நனய விதியில் 26 வகையான அறுவை சிகிச்சை கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு உதவும் ஆயுதங்களின் பெயர்களும், அவற்றின் பயன்பாடும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் கண்ணோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்பட்டன.

        உதாரணமாக வட்ட வடிவ, பிறை வடிவ கருவிகள் எல்லாம் கண்ணின் லென்ஸ் என்னும் கண்புரையை நீக்க பயன்படுத்திய ஆதாரங்கள் என நாகமுனிவர் மற்றும் அகத்தியரின் நனய விதி மூலம் அறியப்படுகிறது.
 
“கத்தி சத்திரம் கவின்குறும்பி வாங்கியும்
முக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும்
ஆழிக் கோலு மடுத்த பிறையுடன்
கத்தரிக் கையுடன் பரகரை வாங்கியும்
முச்சலா கையோடு முனிமொழி யோட்டும்
மட்டக் கோலும் மாறும் ஊசியும்
செப்புக் கிழையுஞ் சீரிய சலாகையும்
வட்டகை தன்னுடன் வளர்பஞ் சமுகமும்
செப்புச் சலாகையுங் கொம்புங் குடோரியும்
வெங்கலக் குழலும் ஈயச் சலாகையுங்
காயக் கோலுங் கண்கத்தி தண்டும்
இவையிவை யாயுத மிருபத் தாறுஞ்
சிவனவ னருளால் திகழ்சத்ரா யுதமே” - #அகத்தியர் நயன விதி
 
1.#கத்தி
 
“அறைதருங் கத்தியா றங்குல நீளம்
அகலமோ ரங்குலம் ஆம்முனை வட்டம்
மயிர்கத்தி போன்று வழற்கு மென்ப”
        6 அங்குலம் நீளம், அகலம் 1 அங்குலம், முனைவட்டமானது ரோக்கத்தியைப் போன்றது.
 
2. #சத்திரம்
 
“சத்திர நீளஞ் சாற்றினா றங்குலம்
வேப்பிலை போலும் விளங்கும்பல் பல்லாய்
நிறைகலுஞ் சாறு நெடியதோர் பிளவை
மெத்தவும் பயமான் மேதினி மிசையே”
        6 அங்கலம் நீளம், வேப்பிலையைப் போல் பல் பல்லாக இருக்கும். நிறை 6 கழஞ்சு, பிளவை, கட்டி ஆகியவற்றை கண்டமாய் அறுக்க உபயோகப்படுகிறது.
 
3. #குரும்பிவாங்கி
 
“குரும்பி வாங்கியின் கூறே ழங்குலம்
நிறையரைக் கழஞ்சு நெடுங்கைப் பிடியோ
ஐந்தே அங்குலம் ஆமெனப் பகர்வார்”
        நீளம் 7 அங்குலம், நிறை அரைக்கழஞ்சு, கைப்பிடி மட்டும் 5 அங்குலம்.
 
4. #முகவாதனன்
“முகவர் தனனோ முந்தான் கங்குலம்
முக்காற் கழஞ்சு நிறையென மொழிவார்”
        நீளம் 12 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு.
 
5. #முள்வாங்கி
 
“முள்வாங்கி நீறம் மூவிரண் டங்குலம்
அகலமோ ரங்குலம் அணிநிறை கழஞ்சொன
றறுக்கவும் கீறவும் அவிர்நகம் வாங்கவும்
பயனாம் என்று பணித்தனர் மேலோர்”
 6 அங்குலம் நீறம், 1 அங்குலம் அகலம், 1 கழஞ்சு நிறையுள்ளது.
 
6. #ஆழிக்கோல்
 
:ஆழிக்கோல் பத்தே அங்குலம் நிறையோ
அரைப்பலம் ஆகுமென் றறைந்தன ரறிஞர்”
         நீளம் 10 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு.
 
7. #பிறைக்கோல்
 
“பிறைக்கோ லென்பது பேசின்மூ வங்குலம்
நிறைமூன்று கழஞ்சு நிகழெழுத் தாணிபோல்
நீண்ட பிறைக்கோல் மத்தியில் நிலவுறும்”
        நீளம் 3 அங்குலம், நிறை 3 கழஞ்சு, எழுத்தாணி போல் நீண்ட பிறைக்கோல் மத்தியில் விளங்கும்.
 
8. #கத்தரிக்கோல்
 
“கத்தி கைச்சீர் கழறெட் டோடரை
அங்குலம் நிறைகாற் பலமே யாகும்”
நீளம் 8 ½ அங்குலம், நிறை கால் பலம்.
 
9. #பரகரைவாங்கி
 
“பரகரை வாங்கியோ பதினாறங்குலம்
நிறையரைப் பலமென நிகழ்த்துவ ருணர்ந்தோர்”
        நீளம் 16 அங்குலம், நிறை அரைப்பலம்.
 
10. #முச்சிலாகை
 
“முச்சிலா கைச்சீர் மொழியினே ழங்குலம்
நிறைநான்கு கழஞ்சே நிலவதன் வடிவோ
ஒரு மூன்ற தகட்டுவா யுள்ளது பாரே”
        நீளம் 7 அங்குலம், நிறை 4 கழஞ்சு, மூன்று தகடாகவுள்ளது.
 
11. #முனிமொழி
 
“முனிமொழி யென்பதோர் முக்கிய கருவியே”
இது ஒரு முனை மழுங்கிய முக்கிய கருவியாகும்.
 
12. #ஒட்டுக்கோல்
 
“ஒட்டுக்கோ லங்குலம் ஒன்றொடு பத்தே
தலையொரு கழஞ்சரைப் பலமுடல்ம நிறையே”
        நீளம் 11 அங்குலம், தலை மட்டும் 1 கழஞ்சு எடை, தலையை தவிர பிற பாகம் அரைப்பலம் நிறை உடையது.
 
13. #அட்டக்கோல்
 
“அட்டக்கோ லிரொன் பானங் குலமே
காசிடை யெட்டனைக் கழறுவ ருரியோர்”
        நீளம் 18 அங்குலம், நிறை 8 காசெடை
 
14. #ஊசி
 
“ஊசிமு வங்குலம் உரைநிநை யரைமா”
        நீளம் 3 அங்குலம், நிறை அரைமா.
 
15. #செப்புக்_குழை
 
“செப்புக் குழைதான் திரட்சியாங் குழலே
ஓருசா ணளவின துயர்நிறை யரைப்பலம்
தகடோ லைக்கனம் சார்புண்ணிர் விடுவது”
        ஒரு சாண் நீளம், நிறை அரைப்பலம், தகடு ஒலைக்கனம், திரட்சியான குழல், புண்ணில் விடுவது.
 
16. #சலாகை
 
“சலாகை யங்குலந் தானொரு நான்கே
அன்றியைந் ததன்நிறை யாறிரு கழஞ்சே”
        4 அல்லது 5 அங்குலம், நிறை 12 கழஞ்சு, புரையோடிய புண்களின் நிலை அறிவதற்கு உபயோகப்படுவது.
 
17. #வட்டகை
 
“வட்டகை யென்பதோர் வகையா யுதமே”
        முனையில் வட்ட வடிவமான தகடைக் கொண்ட ஒரு ஆயுதம்.
 
18. #பஞ்சமுகம்
 
“பஞ்ச முகமுகப் பரிசின தாமே”
        ஐந்து முகங்களைக் கொண்ட ஒரு ஆயுதம்.
 
19. #செப்புச்சலாகை
 
“செப்புச் சிலாகை சிறந்ததோர் கருவியே”
        செம்பால் செய்யப்பட்ட நீளமான குச்சி போன்ற ஒரு ஆயுதம்.
 
20. #கொம்பு
 
“கொம்பீ ரைந்தங் குலமாம் வாழையின்
குருத்தொப் பதுபூண் குலவிரண் டங்குலம்
மேனிவீக் கத்தை வீட்ட வல்லதே
கீறிக் கட்டியைக் கெட்டசெந் நீரை
வெளியிடத் தக்க மிருபய னாயதே”
        10 அங்குலம் நீளம், காளை மாட்டுக் கொம்பிற்கு அடிப்பாகத்தில் பித்தளையினால் ஆன, பூண் போன்ற சுற்றுப்பூண் இரண்டங்குலம். குருதி கட்டிய சரீர வீக்கம், கட்டி இவைகளைக் கீறி, இரத்தத்தைக் கொம்பு வைத்து வாயினால் உறிஞ்சி உமிழ உதவுகிறது.
 
21. #குடோரி
 
“குடோரியே ழரையங் குலம்நிறை காற்பலம்”
        நீளம் 7½ அங்குலம், நிறை கால் பலம்.
 
22. #வெண்கலக்குழல்
 
“வெண்கலக் குழல்தான் மேவுமெட் டங்குலம்
நிறைபலம் மூன்றோ மறையென நிகழ்த்துவர்”
        நீளம் 8 அங்குலம், நிறை 3½ பலம்.
 
23. #ஈயச்சலாகை
 
“ஈயச் சலாகை மியன்பின்மூ வங்குலம்
நிறையோ நான்கு கழஞ்சென நிலவிடும்”
        நீளம் 3 அங்குலம், நிறை 4 கழஞ்சு, கட்டி, பிளவை, கிருமி இவற்றைக் குணப்படுத்துவது.
 
24. #காயக்கோல்
 
“காயக் கோல் நீளம் களறினே ழங்குலம்
நிறையிரு கழஞ்சு நெடிய பருமனோ
இரண்டங் குலமென விசைத்தனர்
பெரியோர்”
        நீளம் 7 அங்குலம், பருமன் 2 அங்குலம், நிறை 2 கழஞ்சு.
 
25. #தண்டுச்சலாகை
 
நீளம் 9 அங்குலம், நிறை ½ கழஞ்சு, ஈர்க்குக் கனம்.
 
26. #நயனக்கத்தி
 
        நீளம் 3 அங்குலம், நிறை இரு பண வெடை, ஊசி போன்ற முனையுள்ளது. முனையில் புளியிலை கனம் விட்டு மற்ற பாகங்களெல்லாம் நூலால் சுற்றப்பட்டுள்ளது.
       
இவ்வாறு 26 வகை கருவிகளை அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் நாக முனிவரும் பல்வேறு கருவிகளை தனது நூலில் விளக்கியுள்ளார். இந்த கருவிகளை பல்வேறு அசுர சிகிச்சையில் அதாவது காரம், அறுவை, அக்கினி ஆகிய சிகிச்சை முறைகளில் சித்த மருத்துவர்கள் பெரிதும் பயன்படுத்தினர்.
 
        பாண்டிய மன்னனின் #கூன்முதுகை நிமிர்த்தியது, மன்னனின் தலைக்குள் நுழைந்த #தேரையை, தலையை உடைத்து வெளியேற்றியது, போரில் காயம் பட்ட வீரர்களின் #அழுகிய தோலை நீக்கி, வேறிடத்தில் நல்ல தோலை வெட்டி எடுத்து, வைத்து தைத்தது, உடைந்த, வளைந்த #எலும்புகளை சீராக கட்டியது, மீண்டும் உடைத்து #நேராக மாற்றியது போன்ற பல்வேறு குறிப்புகள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சித்தர் வரலாறு மற்றும் பல்வேறு இலக்கிய நூல்களில் காணப்படுகின்றன.

#தகவல் தொகுப்பு மற்றும் படங்கள்:
சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை

பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?

பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?
**********************************
சில அடிப்படைத் தகவல்கள்:

ஆண்டுகளைக்  நமது முன்னோர் சுழற்சி முறையில் (in rotation) அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டனர்.

வான் மண்டல தொகுதி அல்லது  ராசி மண்டல தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் (Degrees) கொண்டுள்ளது. 

நாம் முக்கியமானவையாக நம்பும 27 நட்சத்திரங்களும் இந்த பாதையில் உள்ளன. 

 இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும் சஞ்சாரம் செய்கின்றன. 

360 பாகைகளில் (degrees)
 12 ராசிகள் அடங்கியுள்ளன. 

எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளை (degrees) கொண்டுள்ளது.

 சூரியன் வான் பாதையில் தினசரி 1 பாகை(degree)  நகர்கிறது.

ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.

குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். 

சனி மாதத்துக்கு ஒருபாகை (degree) நகரும்.

 எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 12வருடங்கள் ஆகின்றன. 

சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30வருடங்கள் ஆகின்றன.

சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. 

அதுவே பிரபவ வருடம்.
இதுவே முதல் வருடம். 

இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன.

 ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.

ஆண்டுகள் 60

1.பிரபவ 2.விபவ 3.சுக்கில
4.ப்ரமோதூத, 5. ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ 7. ஸ்ரீமுக 8.பவ
9.யுவ,10.தாது, 11.ஈசுவர
12.வெகுதான்ய, 13.ப்ரமாதி 
14.விக்கிரம,15.விஷு
16.சித்ரபானு,17.சுபானு
18.தாரண,19.பார்த்திப ,20.விய
21.ஸர்வஜித், 22.ஸர்வதாரி
23.விரோதி,24.விக்ருதி, 25.கர
26.நந்தன,27.விஜய, 28.ஜய
29.மன்மத, 30.துர்முகி,
31.ஹேவிளம்பி, 32.விளம்பி
33.விகாரி, 34.சார்வரி, 35.ப்லவ
36.சுபகிருது, 37.சோபக்கிருது
38.குரோதி, 39.விசுவாவசு
40.பராபவ, 41.ப்லவங்க,
42.கீலக, 43.சௌமிய
44.சாதாரண,45.விரோதிகிருது
46.பரிதாபி,47.ப்ரமாதீ,
48.ஆனந்த, 49.ராக்ஷஸ,50.நள
51.பிங்கள, 52.களயுக்தி,
53.சித்தார்த்தி, 54.ரௌத்ரி
55.துன்மதி, 56.துந்துபி
57.ருத்ரோத்காரி,58.ரக்தாக்ஷி
59.குரோதன, 60.அக்ஷய

தமிழ்மாதங்கள்

சூரியன்  ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் 30 நாட்கள் ஒரு மாதம் என கணக்கிடப்பட்டுள்ளது.

சூரியன்  எந்த ராசியில் என்று பிரவேசிக்கிறதோ அதுவே மாதத்தின் தொடக்க நாள். அந்த ராசியின் பெயரே அந்த மாதத்தின் பெயர்.

வீட்டில் பூஜைகள் செய்யும்போது ஸங்கல்பத்தில் நாம்  சொல்வது மாதத்தின் இந்தப் பெயர்களையே.. 

  நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள்-
அந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரையே கொண்டதாக அமைந்துள்ளது.

மாதங்களின் பெயர்கள்

நடைமுறை  -     ஸங்கல்பம் 
===========       ===========
சித்திரை     -    மேஷ மாசம்
வைகாசி      -    ரிஷப மாசம்
ஆனி.            -    மிதுன மாசம்
ஆடி.               -    கடக மாசம்
ஆவணி.      -    சிம்ம மாசம்
புரட்டாசி      -    கன்னி மாசம்
ஐப்பசி.            - துலா மாசம்
கார்த்திகை -  விருச்சிக மாசம்
மார்கழி.         - தனுர் மாசம்
தை.               -    மகர மாசம்
மாசி.             -   கும்ப மாசம்
பங்குனி.      -    மீன மாசம்

எந்த மாதத்தில் பெளர்ணமி, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாதத்துக்கு விஷமாதம் என்று பெயர்.

எந்த மாதத்தில் இரண்டு பெளர்ணமி,   அல்லது இரண்டு அமாவாஸ்யை  வருகிறதோ அதற்கு மலமாதம் என்று பெயர்.

விஷ மாதத்திலும், மல மாதத்திலும் சுபகார்யங்கள் செய்யக்கூடாது.

 ஆனால் சித்திரை, வைகாசி, மாதங்களில் இவைகள்  ஏற்பட்டால்  அந்த இரண்டு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.

அயனங்கள் (Path)
----------------------------------
ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் (Half yearly paths) பிரிக்கப்பட்டுள்ளது. 

சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் ஆரம்பம். 

சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் போது தட்சிணாயனம் ஆரம்பம். 

தைமாதம் முதல் ஆனி மாதம் வரை 6 மாதங்கள் உத்தராயன காலம்.

இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம்.

 கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம் போன்றவை  இக்காலகட்டத்தில்  செய்வது
உத்தமம்.

ஆடி மாதம் முதல்  மார்கழி மாதம் வரை  6 மாதங்கள் தட்சிணாயன காலம். 

இக்காலகட்டத்தில் நல்ல காரியங்கள் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.

ருதுக்கள் (Season s)  - 6

ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சித்திரை, வைகாசி - வஸந்த ருது

ஆனி, ஆடி, -   க்ரீஷ்ம ருது

ஆவணி, புரட்டாசி -  வர்ஷ ருது

ஐப்பசி, கார்த்திகை -  சரத் ருது

மார்கழி, தை  -  ஹேமந்த ருது

மாசி, பங்குனி -   சிசிர ருது

கிழமைகள் (days)  - 7

ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. 

சூரிய உதயத்திலிருந்து மறுநாள் சூர்ய உதயம்  வரை ஒரு நாள்.

சாயா கிரகங்கள் இரண்டு (ராகு, கேது) நீங்கலாக மீதமுள்ள ஏழு கிரகங்களின்  ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம்.
 
ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் சொல்லப்படும் 

நடைமுறை -   ஸங்கல்பம்   
*************      *************
 ஞாயிறு.   -  பானு வாஸரம்

திங்கள்.    -   இந்து வாஸரம்

செவ்வாய் -   பௌம வாஸரம்

புதன்.      -   ஸௌம்ய வாஸரம்

வியாழன்   -     குரு வாஸரம்

வெள்ளி      -     ப்ருகு வாஸரம்

சனி              -     ஸ்திர வாஸரம்

திதிகள் (Lunar day)  - 15
****************************
சூரியன் இருக்கும் இடத்தில் இருநது 12 பாகைகள்(Degrees) சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.

1. ப்ரதமை

 2. த்விதியை

 3. த்ருதியை

 4. சதுர்த்தி

 5. பஞ்சமி,

6. ஷஷ்டி

 7. ஸப்தமி

8. அஷ்டமி

9. நவமி

10. தசமி

11. ஏகாதசி

12. துவாதசி

13. த்ரயோதசி

14. சதுர்த்தி

15. பூர்ணிமா (அல்லது) அமாவாஸ்யை.

ஒரு மாதம்  இரண்டு பட்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை  சுக்லபட்சம்.

 பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபட்சம்.

தமிழில் இதை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுஇவர்கள். 

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பவை பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களாகும்.

இவற்றில் திதி, வாரம், (வாஸரம்) ஆகிய  பற்றி  மேலே கூறப்பட்டுள்து.

இனி மற்ற மூன்றை பற்றி  அறிவோம்.

நட்சத்திரங்கள் - 27

வான் வட்டப்பாதையில் உள்ள நட்சத்திரங்கள் இருபத்தேழும் பன்னிரண்டு ராசிகளுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

நக்ஷத்திரங்கள் - 27 -  
*************************

நடைமுறை  -   ஸங்கல்பம்   

அஸ்வதி       -  அஸ்வினி

பரணி            -  அபபரணீ

கார்த்திகை  -   க்ருத்திகா

ரோகிணி.   -  ரோகிணீ

மிருகசீர்ஷம்   - ம்ருகசிரோ

திருவாதிரை  -   ஆர்த்ரா

புனர்பூசம்.     -    புனர்வஸூ

பூசம்.                 -     புஷ்யம்

ஆயில்யம்     -    ஆஸ்லேஷா

மகம்                 -    மகா

பூரம்            -      பூர்வபல்குனி

உத்திரம் - உத்ரபல்குனி

ஹஸ்தம் - ஹஸ்த

சித்திரை - சித்ரா

சுவாதி - ஸ்வாதீ

விசாகம் - விசாகா

அனுஷம் - அனுராதா

கேட்டை - ஜ்யேஷ்டா

மூலம்  - மூலா

பூராடம் - பூர்வ ஆஷாடா

உத்திராடம் - உத்ர ஆஷாடா

திருவோணம் - ச்ரவண

அவிட்டம் - ஸ்ரவிஷ்டா

சதயம் - சதபிஷக்

பூரட்டாதி - பூர்வப்ரோஷ்டபதா

உத்திரட்டாதி - உத்ரப்ரோஷ்டபதா

ரேவதி - ரேவதி

ராசிகள் - 12

1. மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி
7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்

மேலே சொன்ன நக்ஷத்திரங்கள் இருபத்தி ஏழும் ஒவ்வொரு ராசிக்கும் 21/4 நக்ஷத்திரம் விதம் பங்கிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. 
ஆகவே, ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் அல்லது 2 1/4 நக்ஷத்திரங்கள் உண்டு.

யோகங்கள் - 27

1. விஷ்கம்பம்  2. ப்ரீதி
 3. ஆயுமான், 4.சௌபாக்யம்
5. சோபனம் 6. அதிகண்டம்
7.சுகர்மம், 8.த்ருதி,  9.சூலம்
10.கண்டம்,  11.வ்ருத்தி, 
12. துருவம்,13. வியாகாதம்
 14.ஹர்ஷணம்,  15.வஜ்ரம்
16.ஸித்தி ,17.வ்யதீபாதம்,
 18.வரியான், 19.பரீகம்,
 20.சிவம்,  21.ஸித்தம்
22. ஸாத்தியம்,  23.சுபம் 
24.சுப்ரம், 25. பராம்யம் 
26.மாஹேந்த்ரம் 27.வைத்ருதி
 
கரணங்கள் - 11

1. பவம்   -  சிங்கம்
2. பாலவம்   - புலி
3. கௌலவம்  -   பன்றி
4. தைதிலம்   - கழுகு
5. கரம்     - யானை
6. வணிஜை   - எருது
7. பத்ரம் -   கோழி
8. சகுனி -   காக்கை
9. சதுஷ்பாதம் -   நாய்
0. நாகவம் -   பாம்பு
11. கிமுஸ்துக்னம்   - புழு

இராகு காலம்

ஒவ்வொரு கிழமையிலும் இராகு காலம் எப்போது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வரிப்பாட்டு ஒன்று சொல்லுவார்கள். 

"தி"ருவிழா "ச"ந்தையில் "வெ"ளியில் "பு"குந்து "வி"ளையாட "செ"ல்வது "ஞா"யமா?"

கிழமை     =  இராகு காலம்

ஞாயிறு.      = 04.30 - 06.00
திங்கள்        = 07.30 - 09.00
செவ்வாய்  =  03.00 - 04.30
புதன்             = 12.00 - 01.30
வியாழன்   =  01.30 - 03.00
வெள்ளி      = 10.30 - 12.00
சனி.              = 09.00 - 10.30

எமகண்டம்

இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.

"வி"ழாவுக்கு "பு"திதாக "செ"ன்று "தி"ரும்பும் "ஞா"பகம் "ச"ற்றும் "வெ"றுக்காதே

கிழமை -    எமகண்டம் : பகல் 

ஞாயிறு :     12.00 - 01.30
திங்கள் :      10.30 - 12.00
செவ்வாய் : 09.00 - 10.30
புதன் :           07.30 - 09.00
வியாழன் :  06.00 - 07.30
வெள்ளி :     03.00 - 04.30
சனி :              01.30 - 03.00

கிழமை -  எமகண்டம் :இரவு 

ஞாயிறு :     06.00 - 07.30
திங்கள் :      03.00 - 04.30
செவ்வாய் : 01.30 - 03.00
புதன் :           12.00 - 01.30
வியாழன் :  10.30 - 12.00
வெள்ளி :     09.00 - 10.30
சனி :             07.30 - 09.00

இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை தவிர்க்க வேண்டும். 

குளிகை நேரம்

கிழமை     -  குளிகை  - பகல் 

ஞாயிறு =        03.00 - 04.30
திங்கள் =         01.30 - 03.00
செவ்வாய் =    12.00 - 01.30
புதன் =              10.30 - 12.00
வியாழன் =      09.00 - 10.30
வெள்ளி =         07.30 - 09.00
சனி =                  06.00 - 07.30

கிழமை     =   குளிகை- இரவு  

ஞாயிறு =      09.00 - 10.30
திங்கள் =        07.30 - 09.00
செவ்வாய் =   06.00 - 07.30
புதன் =             03.00 - 04.30
வியாழன் =     01.30 - 03.00
வெள்ளி =        12.00 - 01.30
சனி =                 10.30 - 12.00

குளிகை காலத்தில் அசுபச் செயல்களை தவிர்க்க வேண்டும்.

ராசிகள் -          Tamil Signs
நட்சத்திரங்கள் - Tamil Stars

மேஷம்.  -  Aries

அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய - 

ரிஷபம்    -   Taurus

கிருத்திகை 2ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2ஆம் பாதம் முடிய - 

மிதுனம்   -  Gemini

மிருகசிரீஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம்3ஆம் பாதம் முடிய - 

கடகம்   -   Cancer

புனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய - 

சிம்மம்    -  Leo

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய - 

கன்னி   - Virgo

உத்திரம் 2ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய - 

துலாம்.  -    Libra

சித்திரை 3ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3ஆம் பாதம் முடிய - 

விருச்சிகம்.   -Scorpio

விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய -

தனுசு.  -   Sagittarius

முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய - 

மகரம்.  - Capricorn

உத்திராடம் 2ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம்2ஆம் பாதம் முடிய - 

கும்பம் - Aquarius

அவிட்டம் 3ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய - 

மீனம் - Pisces

பூரட்டாதி 4ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய    குரு மண்டலம்.

( நன்றி ; பாபாஜி )

மூச்சு தியானம் மனம் அடங்கும் கலை

மூச்சு தியானம் மனம் அடங்கும் கலை
மூச்சு பற்றி ...

எதுவுமே 'ஒன்னுமே' கெடையாது'னு அழிச்சாட்டியமா பேசிக்கிட்டு இருந்தா என்னா பண்றது?

ஏதாவது ஒன்னே அடிப்படையா வச்சித்தானே ... மேலே மேலே முன்னேறிப் போக முடியுமாம்? ...

'ரெயில்வே லெவல் கிராசிங்'ல ... இரும்பு கம்பத்தை குறுக்கால போட்டு ... கேட் மாதிரி சாத்தி உட்டு  ... அந்த பக்கமும், இந்த பக்கமும் ... கார், வண்டி எதுவுமே ... தண்டவாளத்துல கடந்து போகாம பாத்துப்பாங்க ... 

டிரென் கடந்து போனதும்தான் அந்த 'குறுக்கால போட்ட கம்பத்தை' தூக்கி விட்டு ... வாகனங்கள் கடந்து போக வழி ஏற்படுத்துவாங்க ...

அப்பிடி 'குறுக்கால போட்ட கம்பத்தை' 50 பேர் சேர்ந்து தூக்குனாலும் ... தூக்க முடியாது, தொறக்க முடியாது. 

ஆனா, ஒரே ஒரு தொத்தலான railway gateman ... ஒத்த விரலால ... ஒரு lever ஐத் திருப்பி உட்டு  ... ரெண்டு பக்கத்து 'குறுக்கால போட்ட கம்பத்தை' அநாயசமாக தொறந்து உட்டுடுவாரு !!! இல்லையா?

அதே மாதிரி, மனுஷனுங்க 'மனசை அடக்கணும்', 'மனசை அடக்கணும்'னு .. மனசுகூட நேரடியா மல்லு கட்டிக்கிட்டு நின்னாக்க ... ஜென்மத்துக்கும் ஜெயிக்க முடியாது. 

அதே சமயம், அந்த தொத்தலான ரெயில்வே ஆசாமி அந்த 'குறுக்கால போட்ட கம்பத்த' ... அநாயசமாக நெடுக்கால தூக்கி நிறுத்தறத்துக்கு உபயோகப்படுத்தற lever மாதிரி ஒரு சமாச்சாரம் நம்மகிட்டேயும் இருக்கு ...

என்னா அது?

மூச்சுக்காற்று !!!

அதாவது, நேரடியா மனசுங்கற சமாச்சாரத்தை அடக்கறத்துக்கு பதிலாக ...

மூச்சுக் காற்றை ... சீராக்குனோம்னா ... மனசு கொழந்தை மாதிரி ... சொன்னப் பேச்சு கேட்கும் !!!

உண்மை !!!

மனந்தானே புத்தியாங் காரஞ்சித்தம்
மதியிரவி யண்டபிண்ட மானவாறும்
மனந்தானே சக்திசிவ மாய்கை ஞானம்
வாசிபார் தேசிபர பிரம்மம்யாவும்
மனந்தானே நாதவிந்து அரூபரூபம்
வளிகனல் விண்புனல் பண்புனல்மண்ணானவாறும்
மனந்தானேவுதிக்குமிட மொடுங்குமிடமிரண்டும்
வகைசொல்லுஞ் சற்குருவை வணங்கிக்கேளே

- அகத்தியர்

மனம் தான்  ... புத்தி, அகங்காரம், சித்தம் எல்லாம்.

'நான் அறிவேன்' என்கிற 'எண்ணத்தால் எழுந்ததால்' அது அகங்காரம்.

 'நான் அறிவேன்' என்கிற 'இருதயத்தால் எழுந்ததால்'  ... அது சித்தம் ...

'நான் அறிவேன்' என்கிற 'மூளையால் எழுந்ததால்' ... அது புத்தி.

எனவே எல்லாமே மனம் தான். 

மனம்தான் சக்தியாக உள்ளது ; சிவம் அறிவாக உள்ளது. இரண்டுமில்லாத நிலை தான் ஞானம்.  

உலக உயிர்கள், பிரம்மம் யாவுமே ... மனம்தான் என்பது விளங்கும். 

மனம் என்கிற ஒன்றால்தான் நாதம் விந்து என்கிற விஷயங்கள் உண்டாகின. 

மனமாக நிலைபெற்ற பிராணனாக உருவெடுத்தது, அறிவால் அந்தநிலை அடைந்த பிராணன் நீங்கியது. 

மனதிற்கு மூலம் காற்று. ஆக எல்லாமே காற்றாகவே உள்ளன.

மனிதனைப் பொறுத்தவரை மூச்சு என்று சொல்லப் படுவது ... ஜீவசக்தியாகிய வாயுவாகும். 

அந்த ஜீவ சக்தி வெளியில் சென்று ... உலக விஷயங்களை உள்ளே இழுத்துக் கொண்டு வருகிறது ... அவ்வாறு இழுத்து வரும் இத்தியாதிக்கு ... வாயு என்று பெயர்.

வாயு என்றால் சலிக்கின்றது  என்றாகும். அதாவது, சலனிக்கிறது ... சலனம் செய்கிறது ... இயக்கம் செய்கிறது ... அசைகிறது ... மேலும், கீழுமாக நகர்கிறது ... மூச்சுக் காற்றுத் தான் அது.

அந்த சலனதிலிருந்தாகும் விசாரம் உண்டாகின்றது. விசாரம்னா என்ன?

இது உலகம், இது உயிர்கள், இது சந்திரன், இது சக மனிதன் , இது அடுப்பு, இது டிவி ... அப்பிடி தனித்தனியாக விவரங்களை பதிவு செய்து கொள்வதுவே ... விசாரம் ... 

உலக அறிவு உருவாக காரணம் வாயு சலனித்து ... வெளியே போயி ... விசாரிச்சுக்கிட்டு ... 'அது என்ன, இது என்ன'னு விசாரிச்சு, அறிவதனால்தான் ... விசாரம் உருவாச்சி.

அந்த விசாரத்திற்குக் கர்த்தா (creator)மனம் . 

அவ்வாறு சலனமுள்ள பொருள் ... நம்மில் அடங்கும் இயல்புடையது ... 

காற்றுதான் மனதின் கூறு என்றால் ... காற்று உள்ளே அடங்கும் என்று சொல்லப் போனால் ... அப்பொழுது நம்முடைய மனமும் நம்மிலேயே அடங்கித்தானே ஆகணும்?

ஆகையினால், நம்மில் அடங்கினால் ... நமக்கு மற்றொன்றை காண்பதற்கும் அறிவதற்கும் ... முடியாமல் போக ... தன்னுள்ளேயே ஆழ்ந்து இருக்க கூடுமானது.

தன்னிலிருந்து வெளியே சலித்து ... அதாவது பரவிக் கொண்டிருக்கிறதற்குத்தான் வாயு என்று சொல்லப்படுகிறது.

 அது தன்னிலிருந்து வெளியே போகாமல் தன் உள் வழியாய் மேல் கீழாய் கதாகதம் செய்து அதாவது நடமாடி பிரம்மரந்திரத்தோடு தாக்கிக் கொண்டிருக்கிற நிலைமைக்கு கொண்டு போக முடியும்.

அப்படி ... மேல்கீழாக அசைவித்து, பிரம்மரந்திரத்தை (தலை உச்சி) தொடுவதற்கு ...
 “சமீரணன்” என்று பெயர்.

சமீரணன் என்றால் பிரம்மரந்திரத்தோடு 'ஈரணம்' செய்தல் ... அதாவது தாக்கிக் கொண்டிருத்தல்.

அந்தப் பொருளுடன் தொட்டு வேறுபடாமல் முட்டிக் கொண்டிருக்கிற கதியே அதாவது நடப்பே ஈரணம்.

அவ்விதமாயுள்ள கதியானது தன் உள் வழியாய் மேல் கீழ் நடந்து வெளியே விட்டுப் போகாமல் பிரம்மரந்தத்தோடு தாக்கிக் கொண்டிருப்பதற்கு 'சமீரணன்' என்றும்...

 அப்படியில்லாமல் வெளியே சென்று சலித்துக் கொண்டிருக்கிற கதிக்கு 'வாயு' என்றும் பெயர்.

அதனால் தன்னுடைய சக்தி எப்பொழுது தன்னில் லயிக்கின்றதோ, அச்சமயத்தில் மற்றொன்றையும் அறிகிறதில்லை என்று நாம் கண் கூடாக அனுபவப்பட முடியும்.

தன்னுடைய சலனத்திலிருந்தேயாகும் தனக்கு எல்லா ... நல்லது கெட்டதான  நிலைமைகளும் உண்டாகிறதென்பது வெளிப்படை.

தவிர, தன்னுடைய சலனம் தன்னிலடங்கி ஆலோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் நமக்கு உணர்வு உண்டாகிறது ... அதாவது ஆலோசித்துக் கொண்டிருக்கிற காரியம் ஞாபகத்துக்கு வருகிறது.

ஞாபகம் எவ்விடமிருந்து உண்டாகிறதென்றால் ... பிரகாசத்திலிருந்தே தான்.

பிரகாசம் அக்கினியிலிருந்து உண்டாகிறது.

அக்கினி உண்டாவது வாயுவிலிருந்து.

ஆக மொத்தத்தில் ... வாயுவாகி, அக்கினியாகி, பிரகாசமாகி, அறிவாக இருக்கின்ற ஜீவ சக்தி தன்னிலேயே அடங்கும் போது தான் நமக்கு 'தன் உணர்வு' உண்டாகிறது.

தன் உணர்வு'னா self awareness ! Self consciousness !!!

The consciousness can be related to a universal sea. Conscious-ness is therefore something that is moved only by a divine ebb and flow, by a realization of itself. This universal, all-penetrat-ing sea is the true substance of everything, for consciousness (or Self) was before the beginning and consciousness (or Self) is after the end. Beginning and end are illusions, but Self is eternal. Consciousness is therefore union with Self. Conscious-ness knows no separateness. As long as me and thee exist, consciousness is not perfected. Life and death, good and evil, light and shadow—these are the illusions of mind. But in consciousness diversity is totally annihilated and all things are one in reality and in essence.

அப்படீனா, அறிவாயிருக்கும் பொருள் எது?

ஜீவ சக்தியே !!!

அறிவாகி, ஜீவ சக்தியாயிருக்கின்ற பொருள் ... சலித்து வாயுவாகி ... நம்முள்ளிலிருந்து வெளியே போய்க் கொண்டிருருப்பதற்கே “மாயை” என்று சொல்லுவது ...

இதற்காகவே “யாதொன்று இல்லாததாகின்றதோ ... அது மாயை” என்று சொல்லுவதன் காரணமாகும்.

 “யாதொன்று” என்பது அறிவு.

அந்த அறிவு வாயு ரூபமாய் வெளியில் போய் நசித்துக் கொண்டிருப்பதற்கே மாயை என்று பெயர்.

இதற்காகவே தன்னுடைய மாயை அல்லது 'தான் சிருஷ்டிக்கும் உலகமானது' தன்னிலிருந்து  உண்டானது என்றும் சொல்லக் காரணம். 

“தான்” என்றால் யார் என்பதாய் நீர் கருதுகிறீர்?

தான் என்றால் அவனவனே

அப்பொழுது மாயையினுடைய உற்பத்தி எவ்விடமிருந்து?

அவனவனிடமிருந்தே ...

ஆகையினால் மாயை என்பது மேலே சொன்னபடி உண்டானதாகும்.

அதற்குப் பிறகேயாகும் மனதினுடைய உற்பத்தி. 

பிராணனை இழுப்பதும் வெளிவிடுவதும் கிளை நாடிகள் வழி horizontal-ஆக
நடந்தால் அது மாயையால் உண்டாகும் நிலையாகும்.

பிராணன்  vertical-ஆக மேலும் கீழும் நடந்தால் அதுவே உயிரை இயற்கையொடு ஐக்கியப்படுத்தும்.

 நாம சொல்ல வேண்டிய விஷயம் மேலே சொன்னதோடு முடிந்து விட்டாலும்கூட
 ...

'இடம் சுட்டி பொருள் விளக்குக' என்று மேலும் விளக்கம் பெறுவதற்காக ...

'Explain with reference to the context (ERC)'  ...

சூரிய வெளிச்சம் ... பூமி மேலே படும்போது ... வெளிச்சம் முடிஞ்சிபோற  ரெண்டு பக்கத்துலேயும் ... நிழல்ல கோடு போட்ட மாதிரி இருக்கும் ...

அதுக்கு பக்கத்துலேயே ஒளியினாலேயே ஆன கோடும் ... ரெண்டு பக்கத்துல இருந்தும் வரைஞ்ச மாதிரி இருக்கும் ...

மறுபடி சொல்லணும்னாக்க ...

எப்போதும் பூமிக்கு மறுபுறம் (சூரிய ஒளி இல்லாத புறம்) ஒரு நிழல் இருக்கும். அப்படியானால் இரு நிழற்கோடுகள் உண்டாகும். நிழற்கோடுகள் இருந்தால் அதைத் தொட்டு ஒளிக் கோடுகள் இருக்கும். 

இந்த நான்கு ... நிழல் மற்றும் ஒளிக் கோடுகள் செல்லும் பாதைகள் உடலிலும் உண்டு. 

அதைத் தான் நான்கு கலைகள் உடலில் உள்ளது'னு சொல்றாங்க பெரியவங்கள்ளாம்.

கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக்
கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும் 

- காகபுசுண்டர்

நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது
நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே 

- அகஸ்தியர்

ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற
ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. 

-திருமந்திரம்

“சண் முக தூலமும் சதுர் முக சூட்சமும்” என்று ஒளவையார் கூறுகிறார். சூட்சமத்திற்கு நான்கு முகம் என்கிறார் அவர்.

இந்த நீண்ட நிலை பெற்ற (மடிந்த) பிராணனிடையே இரு புறமும் சூரிய ஒளி போலும் சந்திர ஒளி போலும் பிராணனும் அபானனும் இயங்குவதால் தான் ..

”அக்னி வடிவான சூரியனும் குளிர்ச்சி வடிவான சந்திரனும் ஹம்சத்தின் இரு சிறகுகள்” என்று ஹம்சோ உபநிஷதம் கூறுகிறது.

இப்போ எதுக்கு இந்த நாலமணொருவன், நான்கு முகம், நாலு கலை'னு ஒரே விஷயத்தை டிசைன் டிசைனா ... சொல்லிக்கிட்டு இருக்கோம்?

வெறும் சிந்தனையாக மட்டும் உள்ள போது ... ராகுவும்
கேதுவும் செயல்பட ...
சந்திரன் இரு புறமும், முன்னும் பின்னும் போய் வருவதைப் போன்ற நிலை உண்டாகும். 

நான் என்கிற உணர்வு மேலோங்கி இருக்கும் போதும், ஆசைகள் உள்ள போதும், சந்திரன் சூரியன் உதிக்கும் புறமாகவே வெளிச்சம் அதிகம் இருப்பதைப் போல், மற்ற பகுதிகளில் மிக்க இருள் சூழ்ந்து ... இருள் அதிகமாக இருக்கும்.

அறிவு நிகழும் போது ... சந்திரன் சூரியன் மறையும் புறமே பெரிதும் இருப்பதைப் போல் ... அறிவு நிகழும். 

இதைப் போலவே, நிலை பெற்ற பிராணனின் இரு புறமும் பிராணனும் அபானனும் இயங்கி வருகிறது.

இறுதியில் எண்ணங்களற்ற நிலையில் நிலை பெற்ற பிராணன் கரைய ... பிராணனும் அபானனும் கலக்க, தன்னை உணராத நிலை உண்டாகும்.

பிராணன் கீழிருந்து மேல் செல்வதால் உயிரோடு இணைக்கப் பட்டதாகவும் ...

அபானன் மேலிருந்து கீழ் இயங்குவதால் அறிவோடு இணைக்கப் பட்டதாகவும் உணர்த்தப் பட்டுள்ளது.

ராகு என்பது அறிவது ... கேது என்பது அறிய உதவுவது.

இரண்டும் ஒரே நாடியில் செலுத்த தன்னை உணர்வதை போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. 

"அருவுருவந் தானறிதல் ஆயிழையாய் ஆன்மா
அருவுருவ மன்றாகு முண்மை-அருவுருவாய்த்
தோன்றியுட னில்லாது தோன்றாது நில்லாது
தோன்றன் மலர்மணம் போற் றொக்கு."

நூல்- செப்படு வித்தை

பஞ்சபட்சி சாஸ்திரம் விதியை மாற்றும் தந்திரம்

பஞ்சபட்சி சாஸ்திரம் விதியை மாற்றும் தந்திரம்
விதியை மாற்றும் தந்திரம் 

 பஞ்சபட்சியில் தன்னுடைய பட்சி எதுவென அறிந்து - அந்த பட்சியின் மூலிகையை பஞ்சபட்சி முறைப்படி பூஜை செய்து எடுத்து ( அரசு வேளையில் எடுக்கலாம் ) ஊண் வேளையில் தாய்த்தாக்கி கொடுக்கலாம் . பஞ்சலோக தாயத்து நலம் பயக்கும் . இது மிகவும் அற்புதமான தாந்திரீக பரிகாரமாகும் . நன்கு பஞ்சபட்சி சாஸ்திரம் ! அனுபவம் பெற்றவர்கள் பட்சிகளின் சூட்சுமத்தில் எடுத்து - அணிந்து கொள்ள வாழ்வில் எதிலும் வெற்றிதான் , தொட்டுதெல்லாம் பொன்னாகும் ஆயுள் முழுவதும் நற்பலனைத் தரும் , 

அனுபவமுறை 

பஞ்சபட்சியில் தங்கள் பட்சிக்குரிய பட்சிகளின் சிறகுகளை அரசு நேரத்தில் தாயத்து செய்து அணிய சர்வ வெற்றியாகும். எதிரி இல்லை.   

இதுப்போல பல அறிய பிரசன்னம் ரகசியங்களை உள்ளடக்கிய கலை சக்கரா சாஸ்திரம். விரைவில் அனைவரும் அறிய கற்று தருகிறேன். 

கையாலும் முறைதான். 

பஞ்ச பட்சி 

மனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளுக்கு பல்வேறு வழிகளிலிருந்து சக்தி கிடைக்கும் வகையில் மனித உடல் அமைப்பு அமைந்துள்ளது.

மனிதனின் உடல் உறுப்புகளில் இருந்து வரும் நரம்புகளின் தொடர்பு மற்றும் நரம்புகளின் முடிச்சுகள் மனிதனின் கண், காது உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வந்தடைகிறது. மனிதனின் அகத்தை வெளிப்படுத்தும் புறவழி உறுப்பே கண்கள்தான் இயற்கையின் தோற்றத்தையும், மற்றவையையும் ஊர்ஜிதப்படுத்துவதும் கண்கள்தான்.

எதையும் முதலில் அங்கரிப்பது கண்கள் மூலமாகத்தான். அழகான உறுப்பே கண்கள். மனிதனின் உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் நாடி பார்த்து நோயை கணிப்பது போல மனிதனின் கருவிழியை வைத்தும் நோயை கணிக்கலாம்.

கருவிழித் திசுக்களில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், நிற மாற்றங்கள் கருவிழித் திசுக்களின் ஒருங்கிணைப்பு மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடல் உறுப்புகளின் பாதிப்புகளை துல்லியமாக கண்டு தீர்வு காணலாம். கண்களின் கருவிழிக் கொண்டு நோய் அறிந்து காது, உள்ளங்கை, கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதின் மூலமாக நோயினை குண்படுத்த முடியும்.

கருவிழியில் மருத்துவம் எப்படி உருவானது?

பஞ்சபட்சிகளில் ஒன்றான ஆந்தையை மையமாகவும் இதன் கண்களின் கருவிழியில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டும் தான் கருவிழியில் மருத்துவம் உருவானது. கால் உடைந்த ஆந்தைக்கு காலில் கட்டு போடுவதற்கு முன் ஆந்தையை வைத்தியர் பார்த்தபோது அந்த ஆந்தையின் கண்ணின் கருவிழியில் ஒரு புள்ளி இருப்பதை கண்டறிந்தார். அதை வைத்து சிகிச்சை அளித்தார். இதில் ஆந்தையின் கால் குணமானது. உடனே அப்புள்ளி மறைந்தையும் கண்டார்.

அதே போலவே ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவன் கருவிழியில் இதைப்போன்ற மாற்றம் ஏற்பட்டதையும் பின்பு அந்த மனிதனின் காயம் சரியானதும் அவன் கண்ணின் கருவிழி சரியானதையும் கண்டார்.

இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நோயை நிர்ணயம் செய்ய ஒரு புதிய யுத்தியை கண்டறிந்து கையாண்டார்கள்.

கருவிழியின் மூலம் நோய் அறியும் மருத்துவம் கி.பி. 1837-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.

அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் ஓர் மனிதனின் வாழ்க்கை முறையையும், வசதி வாய்ப்பையும் மற்றும் அவனின் நோய் தன்மையையும், உள் உறுப்புகளில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதையும், அவன் உடலில் எந்த சக்கரம் சரியாக   இயங்கவில்லை என்பதையும் கூற முடியும். மகாபாரத்தில் சாகதேவன் சோதிட சாஸ்திரம் கையாண்டார்.

கிருஷ்ண பகவான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கையாண்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதே போல ராமயணத்தில் பலவகை கலைகளையும் அறிந்த ராவணனும் பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்தவர் ஆவார்.

இவர்கள் பஞ்ச பட்சிசாஸ்திரம் அதிகம் கையாண்டுயுள்ளனர்     

இந்த அபூர்வ சாஸ்த்திரங்களையோகிகள்"ஞானிகள்" முனிவர்கள்"சித்தர்களும்பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.

இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்துகுருவின் திருப்பாதமே கதிஎன இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்குமட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.

இதில் பஞ்சபட்சி சாஸ்திரம்எனப்படும்  மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்திஉமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.

தமிழ்க் கடவுளாகியசுப்பிரமணியர்சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனைசம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகியமகாசக்தியால் சுப்பிரமணியருக்குஉபதேசித்த உன்னத கலையாகும் "பஞ்ச பட்சி சாஸ்திரம்" இதனையே சூரனை வதம்செய்ய  முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.

சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகியஅகத்திய முனிவருக்குமுருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.

அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு  உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.  

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும். 

நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் - 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.

பஞ்சபூதம் எனப்படும்நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும்வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம்  தெரிந்தவனிடம்  சரசமாடாதே 

பட்சி தெரிந்தவனிடம்  பகைகொள்ளாதே 

பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே 

என்பது பெரியோர் வாக்குவாகும்.

மேற்கண்டபடி  பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும்வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம்  அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர். 

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரைவாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை  எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும்வெல்ல முடியாது என்பது உறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும்

நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.    

உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும். 

எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்.....
.

பஞ்ச பட்சி சாஸ்திரம் பற்றிய திரட்டு 

                    ஒரு சிறிய விளக்கம் 

பஞ்ச பட்சி சாஸ்திரம்

இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது. 

      பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை  அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு  சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.

பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையே 

வல்லூறு 

ஆந்தை

காகம்

கோழி

மயில் 

முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.

ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-

வல்லூறு

அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்     
         
ஆந்தை

திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்    
              
காகம்

உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்    
                           
கோழி

அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்     
                        
மயில்

திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி

 இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.

வளர்பிறை

அ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.) 

இ, ஈ - ஆந்தை

உ, ஊ - காகம்

எ, ஏ - கோழி

ஒ, ஓ - மயில்

தேய்பிறை

அ, ஆ - கோழி 

இ, ஈ - வல்லூறு

உ, ஊ - ஆந்தை

எ, ஏ - மயில்

ஒ, ஓ - காகம்

         ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்

அரசு  - 100% பலம்
ஊண் - 80%      “
நடை -   50%    “
துயில் - 25%    “
சாவு     - 0%     “

         ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. 

       இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை,  புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.

வளர்பிறை - படுபட்சி நாட்கள்

வல்லூறு - வியாழன், சனி

ஆந்தை - ஞாயிறு, வெள்ளி

காகம் - திங்கள்

கோழி - செவ்வாய்

மயில் - புதன்

தேய்பிறை படுபட்சி நாட்கள் 

வல்லூறு -செவ்வாய்

ஆந்தை -திங்கள்

காகம் -ஞாயிறு

கோழி -வியாழன், சனி

மயில் -புதன், வெள்ளி

       அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-

வளர்பிறை

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன், திங்கள்

காகம் - வியாழன்

கோழி - வெள்ளி

மயில் - சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு - வெள்ளி

ஆந்தை -ஞாயிறு

காகம் -ஞாயிறு, செவ்வாய்

கோழி - திங்கள், புதன் 

மயில் -வியாழன் 

தேய்பிறை

பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -வெள்ளி

ஆந்தை - வியாழன் 

காகம் -புதன்

கோழி - ஞாயிறு, செவ்வாய்

மயில் - திங், சனி

இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)

வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்

ஆந்தை - புதன்

காகம் - வியாழன்

கோழி - திங்கள், சனி 

மயில் -வெள்ளி 

      இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.

    அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல்லூறு
4) கோழி
5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.

        இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.

           அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள்,  அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.

                  தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள்,  அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.

படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம  என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.

நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த  திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.

பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.

உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும். 

அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

வல்லூறு - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி 

வல்லூறு - தேய் பிறை

நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி 

ஆந்தை - வளர்பிறை

நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி

ஆந்தை - தேய்பிறை

நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்

காகம் - வளர்பிறை

நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்

காகம் - தேய்பிறை

நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி

கோழி - வளர்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு 

கோழி - தேய்பிறை

நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு

மயில் - வளர்பிறை

நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

மயில் - தேய்பிறை

நட்பு :  வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்

ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.

நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.

“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி  நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.

பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.

நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.

         பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.

ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.

பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.

1)   உடலிலிருந்து நோய் நீக்குதல்
2)   பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3)   மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4)   பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5)   எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6)   பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7)   போட்டிகளில் வெற்றியடைதல்
 எதிரிகளை வெல்லுதல்
9)   தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்.!!!

நன்றி குருமுனி

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...