புதன், 16 ஜூன், 2021

வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி


வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி

**வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி***
நாம் இயற்கையின் பக்கமும் இயற்கை தயாரிப்பின் பொருள்களை வாங்குகிறோம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருந்தால் அது நம் அறியாமை என்றே சொல்ல வேண்டும்.
குப்பைமேனி மஞ்சள் தேய்த்து அரைத்து குளித்த காலம் பின்னுக்கு தள்ளப்பட்டு. இன்று குளியல் பொடி அரைத்து குளிக்க சோம்பல் பட்டு குப்பைமேனி சோப், மஞ்சள் சோப், என்று திடப்பொருளாக உபயோகித்து கொண்டு இயற்கைக்கு மாறிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.இன்றைய மக்களின் அறிவுத்திறனை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை..
இன்று சோடியம் ஹைட்ராக்சைடையை சேர்த்து திடமாக்கப்பட்டு குளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்..
சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பு, காகிதம், ஒளிப்படச் சுருள், ரயான் செயற்கை இழை போன்றவற்றின் உற்பத்தி முறையில் பங்கு பெற்றுள்ளது. இதன் அடர் கரைசல் தோலை அரித்தெடுத்துவிடும். பாசம் பிடித்த தரை, கழிவு நீர் சாக்கடை போன்ற அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்ய இதைப் பயன்படுத்துகிறார்கள்.
சோடியம் ஹைட்ராக்சைடு (Sodium hydroxide, lye) அல்லது எரி சோடா (caustic soda) என்பது NaOH என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.இது ஒரு வலிமை மிகுந்த எரி காரம் ஆகும். இது திறந்த சூழ்நிலையிலும், சாதாரண வெப்பநிலையிலும் புரதங்களை சிதைத்து வேதிக்காயங்களை உருவாக்குகின்றது.
சோடியம் ஹைட்ராக்சைடு தொடர்பான பண்பு குறித்து ஸ்பென்சா் அம்ஃபெர்வில்லெ என்பவா் 1893 ஆம் ஆண்டில் ஒரு விாிவான அறிக்கையளித்துள்ளாா்.அதன்படி சோடியம் ஹைட்ராக்சைடு எந்தெந்த வெப்பநிலையில் என்ன செறிவுகள் உண்டாகும் என்று கூறிப்பிட்டிருக்கிறார்.அதன் படி பார்த்தால் சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பாக செய்யும் போது அதில் சேர்க்கும் மூலிகைகளை பொருத்து பலவாறான வினைப்புரிந்து எந்த தன்மை அடைந்து எதுவாக மாறும் என்று வரையருத்து கூறுவது மிகவும் கடினம் ஏன் என்றால் சோடியம் ஹைட்ராக்சைடு ஒவ்வொரு வெப்பநிலையில் ஒவ்வொரு வேதியல் மாற்றம் அடைகிறது..
அது நம் உடலில் வினைப்புரிந்து எப்படி மாறும் அதன் விளைவுகள் என்ன என்பதை பத்து வருடத்திற்கு பின்புதான் தெரியவரும்..தெரியவரும் போது காலம் கடந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சிலர் சொல்கிறார்கள் சோடியம் ஹைட்ராக்சைடு தேங்காய் எண்ணெய்யுடன் சேரும் போது அது அதன் தன்மை மாறிவிடுகிறது என்கிறார்கள்..
சரி அப்படி என்றால் எதற்காக சோடியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகிறோம்?? அது கட்டி தன்மையாக மாறுவதற்காக.அப்படி என்றால் கூட்டு வினைபுரியும் போது சோடியம் ஹைட்ராக்சைடு தன்மை இழக்கிறது என்றால் மறுபடியும் அந்த சோப்புக்கட்டி திடத்தன்மையில் இருந்து மீண்டும் திரவநிலையில் மாறி இருக்க வேண்டும் அல்லவா???
தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள் சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பாக மாற்றும் போது அது சோப்+கிளிசரினாக மாறுகிறது என்று..கிளிசரின் மட்டும் நல்லதா என்ன?? கிளிசரின் இரண்டு வகைப்படும் அது தாவரத்தில் இருக்கும் எடுக்கும் கிளிசரின்.இன்னொன்று செயற்கையாக மற்றபொருளோடு வினைபுரியசெய்து கிடைக்கும் கிளிசரின் எப்படியானது என்று உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்..
எது எப்படியானதாக இருந்தாலும் மூலிகைகளை கொண்டு தயாரிக்கும் குளியல் பொடியே சிறந்தது..ஆனால் என்ன நமது அவசர வாழ்கையில் இன்றைய சோப் கட்டிபோலவே இயற்கை கட்டியும் வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நமது சோம்பேரித்தனம் தான்.
என்னதான் சொன்னாலும் இயற்கை சோப் என்ற பேரில் தயாரிக்கும் நபர்கள் நான் சொல்வதை ஏற்க மாட்டார்கள்..
நமது முன் தலைமுறையினர் அரப்பு சீகைக்காய் இன்னும் சில மூலிகை இலைகளை தான் குளியலுக்கு உபயோகித்தார்கள்..அக்குபிரசர் சொல்கிறது உடலில் உள்ள அக்குபிரசர் புள்ளிகளில் தலையில் தான் அதிகம் உள்ளது என்று.ஆம் உண்மை தான் அதனால் தான் நம் முன்னோர்கள் தலைக்கு அரப்பு சீகைக்காய் போட்டு பத்து விரல்களை கொண்டு நன்றாக தலை முழுவதும் அழுத்தம் கொடுத்து பின் உடம்பிற்கு கல்லைகொண்டு தேய்ப்பார்கள்..ஆனால் இன்றோ நம் முன்னோர்கள் செய்ததை அக்குபிரசர் என்ற புது வடிவம் கொடுத்துள்ளது..
தலைமுதல் பாதம் வரை அழுத்தம் கொடுத்து குளிக்கும் முறை இன்றோ சோப் என்ற வடிவில் வந்து நம் முன்னோர்கள் வகுத்த முறையை காணாமல் போக செய்துவிட்டது..நமது முன்னோர்கள் ஒரு மருத்துவ துரையையே ஒர் குளியல் முறையில் கொண்டு வாழ்துள்ளனர் என்று நினைக்கையில் பிரமிக்க வைக்கிறது..
சில எடுத்துக்காட்டுடன் விளக்குகிறேன்..நான் ஒரு முறை பொள்ளாசி சென்றிருந்த போது கந்தகம் (Sulpher) உபயோகித்து தேக்காய் சிரட்டையில் இருந்து பருப்பை பிரிப்பதும் மீண்டும் பருப்பை உலர்த்த கந்தகத்தை உபயோகிப்பதுமாக செய்துகொண்டு இருந்தார்கள்.அதை பற்றி கேட்ட போது அது பருப்படன் அவ்வளவாக வினைப்புரியாது என்றும் கந்தகம் உடம்புக்கு நல்லது என்றும் சித்த மருத்துவத்தில் கந்தகம் மருந்தாக உபயோகிக்க படுத்துவதையும் எடுத்துக்காட்டாக சொன்னார்கள். சித்த மருத்துவத்தில் கந்தகம் உபயோகிக்கப்படுத்துவது உண்மை ஆனால் அந்த கந்தகத்தை பல முறை சுத்தி செய்து அதில் உள்ள நஞ்சை நீக்கியப்பின் தான் மருந்தாக அது பயன்படுத்தப்படும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்புகள் இல்லைதான்.
அந்த காலத்தில் கந்தகம் இயற்கையாய் பூமியில் இருந்து எடுக்கப்பட்ட ஒர் சுவையற்றி அலோகம்.ஆனால் இன்று அதை செயற்கையாகவே தயாரிக்கப்பட்டு வியாபிரம் ஆக்கப்பட்டுவிட்டது..கந்தகம் செம்பின் எதிரி என்ற பெயரும் உண்டு..இதைப்பற்றி விளக்கினால் பதிவு நீண்டுவிடும்..இப்படி எத்தனையோ..தேன்,வேம்பு எண்ணெய், நெல்லிக்கனி, பால்,உப்பு.....
அதை போல் இரசமணியும்..இப்போது உள்ள இரவாதிகள் பாதரசத்தை கடையில் வாங்கி அதை மணியாக கட்டி இரசமணி என்று சொல்கிறார்கள்..சித்தர்கள் சொன்ன இரசம் என்பது செயற்கை பாதரசம் கிடையாது.
சித்தர்கள் தாம் சொல்லியுள்ள மருத்துவமுறையில் மணி,மந்திரம்,ஒளடதம் எனும் முப்பிரிவினைக்கூறி அதில் மணி என்பதை முதலிடம் பெறச்செய்து சிறப்பித்துள்ளனர்.அப்படிப்பட்ட மணியான இரசமணியை சரியாக முடித்தல் வேண்டும்.என்னை பொருத்த வரையில் உண்மையான இரமணியை சரியாக முடிக்க ஆறு மாத காலம் ஆகும்.
லிக்கம் என்கின்ற கல்லில் இருந்து இரசம் என்ற பாதரசத்தை பல முறை சுத்தி செய்து கிடைப்பது இரசம்..அந்த திரவ இரசத்தை திடமான மணியாக கட்டுவதே இரசமணி ஆகும்..இன்னும் இதை பற்றி சொல்ல மறைத்த கதை நிறையவே உள்ளது..
(நேரம் கிடைப்பெற்றால் இரசமணி vs இரவாதம் சொல்ல மறந்த கதை என்ற தலைப்பில் இதை பற்றி பதிவிடுகிறேன்..)
இப்படியான உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆகையால் இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. நன்றியும் வணக்கமும்..
இயற்கையை இயற்கையாய் வாழவிடுங்கள்.இயற்கையை நீங்கள் போகும் வேகத்திற்கு தயவுசெய்து வளைக்க நினைக்காதீர்கள்..
முடிந்தால் இயற்கையோடு இசைத்து செல்லுங்கள்.இல்லையேல் இயற்கையை விட்டு விழகி நில்லுங்கள்..

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :
கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்
- சித்தர் பாடல்.
ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.
பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

மஞ்சள் காமாலை ஏன் வருகிறது

மஞ்சள் காமாலை ஏன் வருகிறது
எதன் காரணமாக  மஞ்சள் காமாலை  வருகிறது
மஞ்சள் காமாலை என்பது ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகமாக இருப்பதே.
இதற்கு முக்கியமாக ஏழு காரணங்கள் உள்ளன.
அவை என்னென்ன, மஞ்சள் காமாலையிலிருந்து எப்படி விடுபட……
வராமல் தடுப்பது எப்படி...
நம் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள் சுமார் 120 நாட்கள். அதன் ஆயுள் முடியும்போது மண்ணீரலில் சிதைக்கப்படும். அப்போது சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபின், ஹீம் மற்றும் குளோபின் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. ஹீமில் உள்ள இரும்புச் சத்து உடலுக்குள்ளே மறுசுழற்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும். மீதம் உள்ள கழிவு (பிளிருபின்)வெளியேற வேண்டும்.
மண்ணீரலில் இருந்து இந்த பிளிருபின் கல்லீரலுக்கு செல்லும். இந்த பிளிருபின் நீரில் கரையாததன்மையில் (Unconjugated/ Indirect) இருக்கும். இதை கல்லீரல் உள்வாங்கி, கரையும் (Conjugated) தன்மையுள்ளதாக மாற்றி, பித்தநீர் வழியாக பித்தப்பையில் சேகரிக்கும். உணவு செரிமானத்தின்போது, பித்தப்பையில் இருந்து, பித்தநீரோடு பிளிருபின் சிறுகுடல் வழியாக வெளியே சென்றுவிடும்.
பிளிருபின் ஓர் கழிவு மட்டுமே என்பதால், அது மலம் வழியாக வெளியேறும். சிறிதளவு பிளிருபின் உறிஞ்சப்பட்டு மறுசுழற்சியில் சிறுநீர் வழியாகவும் வெளியேறும்.
பிளிருபின் உடலில் இருந்து வெளியேறுவதில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது , அது நம் உடலில் தேங்கிவிடும், பிளிருபின் மஞ்சள் நிறமி என்பதால், நம் உடலில் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது..
சுகாதாரமற்ற உணவுகளைச் உட்கொள்ளும்போது, ஹெபடைட்டிஸ் ஏ, இ போன்ற வைரஸ்கள் உடலுக்குள் சென்று கல்லீரலைப் பாதித்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகின்றன.
ஃபீகல் (Fecal) ஓரல் வைரஸ் மூலமாக ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பரவும்.
ஒருவர் மலம் கழித்துவிட்டு, கையைச் சரியாகக் கழுவாமல் உணவைத் தொடும்போது, உணவு வழியாக இந்த வைரஸ் பரவும்.
பொதுவாக, சுகாதாரமற்ற இடத்தில் சாப்பிடுபவர்களுக்கு இந்த வகை மஞ்சள் காமாலை வரும் வாய்ப்பு அதிகம்.
ஹெபடைட்டிஸ் ஏ வைரஸுக்குத் தடுப்பூசி உள்ளது.
ஹெபடைட்டிஸ் இ-க்கு தடுப்பூசி இல்லை.
ஹெபடைட்டிஸ் ஏ, இ வைரஸ் காரணமாக மஞ்சள் காமாலை வருபவர்களுக்கு……
பசி குறையும்,
உணவைப் பார்த்தாலே வெறுப்பு ஏற்பட்டு, குமட்டல் வரும்.
கண்கள் மஞ்சளாக இருக்கும்,
சிறுநீர் மஞ்சளாகப் பிரியும்,
ரத்தப் பரிசோதனை செய்தால் எந்த வைரஸ் தொற்று என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
மஞ்சள் காமாலை நான்கைந்து நாட்கள் முதல் ஓரிரு வாரம் உடலில் இருந்துவிட்டு பின்னர் போய்விடும். இவர்கள் எளிதில் செரிமானமாகும் உணவைச் சாப்பிட்டு, மருத்துவர் சொல்லும் அறிவுரைகளைக் கடைப்பிடித்தால் போதும், குணமாகிவிடும்.
ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் ரத்தம் மூலமாகப் பரவும். சுகாதாரமற்ற ஊசிகளைக்கொண்டு பச்சை குத்துதல், காதுகுத்துதல், ஒருவர் பயன்படுத்திய ஊசி, பிரஷ், ஷேவிங் பிளேடு போன்ற வற்றை மற்றவர்கள் பயன்படுத்துதல் போன்றவற்றால் இந்த வைரஸ் பரவும்.
ஹெபடைட்டிஸ் பி-யைத் தடுக்க இப்போது தடுப்பூசி இருக்கிறது. ஆனால், சி வைரஸுக்கு தடுப்பூசி இல்லை. இந்த வைரஸ் காரணமாக வரும் மஞ்சள் காமாலையை நவீன உயர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
மருந்து
நாம் உட்கொள்ளும் உணவு, மருந்து என அனைத்தும் செரிமானம் ஆகி, கிரகிக்கப்பட்டு கல்லீரலுக்குத்தான் செல்லும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் ஒவ்வாமையாக இருக்கும்.
சாதாரணமாக, சளிக்குச் சாப்பிடும் மருந்துகள் முதல் உயர் சிகிச்சை மருந்துகள், உணவுகள், மூலிகைகள் என எதன் காரணமாக வேண்டுமானாலும் ஒவ்வாமை ஏற்பட்டு, மஞ்சள் காமாலை ஏற்படலாம். புதிதாய் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்ட பின்னர், மஞ்சள் காமாலை வந்தால், எந்த உணவு அல்லது மருந்து என்பதைக் கண்டுபிடித்து அதை நிறுத்தினாலே, மஞ்சள் காமாலை குணமாகிவிடும்.
குறிப்பிட்ட மருந்து சாப்பிட்டே ஆகவேண்டிய நிலையில் இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைப்படி மருந்தை மாற்றிக்கொள்ளலாம்.
மஞ்சள் காமாலை ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆல்கஹால் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது ஆரம்பத்தில் தெரியாது. கல்லீரல் 80 சதவிகிதம் பாதிக்கப்பட்ட பின்னர்தான் அறிகுறிகளே தெரியும்.
கல்லீரல் சுருக்க நோய் வந்த பின்னர் பிளிருபின் சரியாக வெளியேற்றப்படாமல் மஞ்சள் காமாலை வந்தால், காப்பாற்றுவது கடினம். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தீர்வு என்றாலும்கூட கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான செலவு, அதன்பிறகு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் பக்கவிளைவு மிக அதிகம். எனவே, மதுவை அறவே நிறுத்துவதுதான் ஒரே சிறந்த தீர்வு.
வீடுகளில் குப்பையைத் தினந்தோறும் அகற்றிவிடுவோம். ஒரு சிலர், நான்கைந்து நாட்கள் சேர்த்துவைத்து, பின்னர் வெளியேற்றுவார்கள். அதுபோல வெகுசிலருக்கு கல்லீரல் சோம்பலாகச் செயல்படுவதைத்தான் ‘**கில்பர்ட் சிண்ட்ரோம்**’ என்கிறோம்.
100-ல் 3 பேருக்கும், பெண்களில் இரண்டு பேருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இவர்களுக்கு ரத்தத்தில் பிளிருபின் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால், கல்லீரல் பரிசோதனை செய்யும்போது கரையும் பிளிருபின் வகை குறைவாகவும், கரையாத பிளிருபின் வகை அதிகமாகவும் இருக்கும்.
சளி, காய்ச்சல் என ஏதாவது நோய் இருக்கும் சமயங்களில் மட்டும் மஞ்சள் காமாலை ஓரிரு நாட்கள் அதிகமாக இருக்கும், பின்னர் தானாகவே சரியாகிவிடும்.
கில்பர்ட் சிண்ட்ரோம் இருப்பின் மஞ்சள் காமாலையால் உடல் பாதிக்கப்படுமோ என அஞ்ச வேண்டாம். இவர்களுக்கு எந்த வித சிகிச்சையும் தேவைப்படாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பித்தப்பையில் உருவாகும் கற்கள் சிலநேரம் உருண்டு இறங்கி பித்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தினால், மஞ்சள் காமாலை ஏற்படும்.இவர்களுக்குக் குளிர் காய்ச்சல் வரும், வாந்தி வரும், வயிறு வலிக்கும். ரத்தத்தில் பிளிருபின் அளவு மிக அதிகமாக இருக்கும். சிறப்பு எண்டோஸ்கோப்பி (E.R.C.P) சிகிச்சை மூலம் பித்தக்குழாயில் இருக்கும் கற்களை அகற்றினால், மஞ்சள் காமாலை மறைந்துவிடும்.
பித்தக்குழாய் சிறுகுடலில் சேரும் இடத்தில் கணையம் இருக்கிறது. கணையத்தின் தலைப்பகுதியில் அழற்சி, கட்டிகள் உருவானாலும் பித்தக்குழாயில் இருந்து பிளிருபின் வெளியேற்றம் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரும்.
இவர்களுக்கு ஆரம்பத்தில் வலி இருக்காது, உடல் எடை குறையும், பசியின்மை இருக்கும். உடனடியாகக் கல்லீரல் பரிசோதனை செய்து கணைய நோயைக் கவனித்து, பித்த நாளத்தை பைபாஸ் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட அளவு சிவப்பணுக்கள் மட்டுமே உடைய வேண்டும். மாறாக, அளவுக்கு மீறி சிவப்பணுக்கள் உடைந்தால், ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகரித்துவிடும். இதனால் மஞ்சள் காமாலை வரக்கூடும். இந்த பிளிருபின் கரையாத வகையாகும். ரத்த சோகை உள்ளவர்கள் அதற்குரிய சிகிச்சை கொடுத்தால் தானாகவே மஞ்சள் காமாலை போய்விடும்.
இவை தவிர, உடலில் இரும்பு, தாமிரச்சத்து அதிகமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி பிறழ்வு (Autoimmune Hepatitis) உள்ளவர்களுக்கு அரிதாக மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
சிலர், பிளிருபின் பரிசோதனை மட்டும் செய்துகொண்டு சுய சிகிச்சை எடுக்கிறார்கள். இது தவறு. கல்லீரல் செயல்பாட்டுக்கான முழுப் பரிசோதனை (#LFT) செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யும்போது, கல்லீரல் முழுமையாகச் சோதனை செய்யப்படும். இதனால், பாதிப்புகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
மஞ்சள் காமாலை
வந்தால் மரணம்தான் என முடிவுகட்ட வேண்டியது இல்லை.
எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்பதை அறிந்து, அதற்குரிய சிகிச்சை அளித்தால், கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும். முன்னெச்சரிக்கை, முறையான பரிசோதனை, முழுமையான சிகிச்சை இவை மூன்றும் இருந்தால், மஞ்சள் காமாலை நோயை விரட்ட முடியும்.
மஞ்சள் காமாலை முதலில் கண்ணில்தான் வெளிப்படுகிறது.
கண்களில் மிகவும் மெல்லிய வெள்ளை நிறப் பகுதி ஸ்க்லீரா.
பிளிருபின் அதிகமாக இருந்தால் ஸ்க்லீரா பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்துக்கு மாறும்.
நாக்கு, மேல் அன்னம், உள் உதடு, கைகள் போன்றவற்றில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும்.
பித்தநீர் சரியாக வெளியேறாது. எனவே, பித்த உப்பு உடலில் தங்கிவிடும்.
பிளிருபின், பித்த உப்புடன் சேர்ந்தால், தோலில் அரிப்பு ஏற்படும்.
பசியின்மை, உணவைப் பார்த்தாலோ, உணவு வாசனையை நுகர்ந்தாலோகூட குமட்டல் உணர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், மஞ்சள் காமாலை இருக்கலாம்.
மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.
எந்த ஓர் உணவுப் பொருளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கை கழுவ வேண்டும்.
சாலை ஓரங்கள், சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்கறி, பழங்கள் போன்ற எதையும் சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.
கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது, சமைக்கவும் கூடாது.
கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.
கழிவறையைப் பயன்படுத்திய பின், சிறுநீர் கழித்த பின், கைகளை நன்றாக கிருமி நாசினி பயன்படுத்தி கழுவ வேண்டும்.
நகம் வளர்க்கக் கூடாது.
நகம் கடிக்கக் கூடாது.
பசிக்கு சாப்பிட வேண்டும்.
குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
நண்பர்கள், உறவினர்கள் என யாருடைய……
பிரஷ்,
ஷேவிங் செட்
போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.

உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம்‌ செய்முறை

உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம்‌ செய்முறை

உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம்‌ செய்முறை :
தேவையானவை பொருட்கள் :
1.பாதாம்‌ - 100 கிராம்‌
2.முந்திரி - 100 கிராம்‌
3.பிஸ்தா - 100 கிராம்‌
4.கசகசா - 100 கிராம்‌
5.கற்கண்டு - 200 கிராம்‌
6.நெய்‌ - 250 கிராம்‌
7.சோற்றுக்கற்றாழை - 200 கிராம்‌
8.பால்‌ - அரை லிட்டர்‌
செய்முறை :
சோற்றுக்கற்றாழையை தோல்‌ நீக்கி நன்றாக கழுவி அரைத்து வைத்துக்கொள்ளவும்‌. பாதாம்‌, முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை
தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும்‌. பிறகு ஒரு சட்டியில்‌ பாலை ஊற்றி 15 நிமிடங்கள்‌ நன்றாக காய்ச்ச வேண்டும்‌. பிறகு
கற்கண்டை போட்டு கிளறி கரைந்தவுடன்‌ அரைத்து வைத்துள்ள சோற்றுக்கற்றாழை, பாதாம்‌, முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறவும்‌. பிறகு நெய்‌ ஊற்றி 40 நிமிடங்கள்‌ வரை கிளறவும்‌. லேகியம்‌ பக்குவமடையும்‌ போது நெய்‌ பிரிந்து வரும்போது இறக்கிவிடவும்‌.
பயன்படுத்தும்‌ முறை :
நன்றாக ஆறியவுடன்‌ பாட்டிலில்‌ அடைத்து வைத்து தினமும்‌ சிறியவர்களுக்கு அரை ஸ்பூன்‌, பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன்‌ அளவு
சாப்பிட்டு வரவும்‌. நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்துபவர்கள்‌ குளிர்‌ சாதனப்பெட்டியில்‌ வைத்து பயன்படுத்தலாம்‌.
பயன்கள்‌ :
1.உடலுக்கு நல்ல வலிமையை தரும்‌.
இது உடல்‌ சூட்டை தனித்து குளிர்ச்சி
உண்டாக்கும்‌.
2.அனைத்து மூல நோய்களும்‌ தீரும்‌.
நரம்பு தளர்ச்சி குணமாகும்‌. மெலிந்த உடல்‌ பலம்‌ பெறும்‌.
3.ஆண்மை குறைவினால்‌ ஏற்படும்‌
குழந்தையின்மை கோளாறு நீங்கி குழந்தை பேறு உண்டாகும்‌.
4.வெட்டை நோய்‌ குணமாகும்‌.

செவ்வாய், 15 ஜூன், 2021

விவசாய பழமொழிகள்

விவசாய பழமொழிகள்



#நம்_பண்டைய_விவசாயப்_பழமொழிகள்...

🌝 தவளை கத்தினால் மழை 

🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம் 

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல் 

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய் 

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை 

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய் 

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய் 

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை 

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ 

🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் 

🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு 

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும் 

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை 

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 

🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும் 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

யாரையும் நம்பாதீர்கள்.

உழவே தலை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.

ஹீலர் பாஸ்கர் அமைதியும் ஆரோக்கியமும் book

ஹீலர் பாஸ்கர் அமைதியும் ஆரோக்கியமும் book

ஹீலர் பாஸ்கராகிய நான்,
" அமைதியும் ஆரோக்கியமும் "
என்ற பெயரில் மாத இதழை 7 வருடமாக 81 மாத இதழ்களில் 400-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். இதோ உங்களுக்காக. 

https://drive.google.com/drive/folders/1HikLXtCAmIrUPwvbjxF-E5Z_fxUs7y9h?usp=sharing

தயவு செய்து, ஒருமுறையாவது அனைத்து இதழ்களில் உள்ள தலைப்புகளை பார்த்து வையுங்கள்.
எப்பொழுது எந்த தலைப்பு தேவையோ அப்பொழுது படிப்பதற்கு வசதியாக இருக்கும்.

இப்படிக்கு.
 ஹீலர் பாஸ்கர்.

கண் நோய்களுக்கு சித்த மருத்துவம்

கண் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் கருவிகள்
#கண் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் கருவிகள்...

#கண்ணாயுதங்கள்

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள கண் மருத்துவ சிகிச்சை முறைகள் அனைத்தும் மருத்துவ முறைகளுக்கும் முன்னோடி ஆகும். சித்தர் அகத்தியர் மற்றும் நாக முனி ஆகியோர் 96 வகை கண்நோய்களை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவற்றின் உட்பிரிவுகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் மொத்தம் 125 கண்நோய்கள் தமிழ் மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வடநாட்டு மருத்துவ நூல்கள் தங்கள் மருத்துவத்தில் தொகையில் கிடைக்காத கூடுதல் 21 நோய்களின் விபரங்களை தமிழ்மருத்துவ நூல்களில் இருந்து பெற்றதாக குறிப்பிடுகிறது. 

#கண்நோய்களுக்கு பயன்படுத்துவதற்காக இருபதிற்கும் மேற்பட்ட நுண்ணிய கருவிகள் சித்த மருத்துவத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளன. கண்ணில் வளர்ந்த சதையை உரித்து எடுப்பதற்கு சரவண பத்திரம் என்ற சொரசொரப்பான கூர்மையான விளிம்புகளை உடைய இலைகள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமன்றி கண்களில் எண்ணை ஊறவைக்கும் புறவளையம் என்ற தர்ப்பணம், பற்று போடுதல் என்ற தப்பளம், சொட்டு சொட்டாக கண்களுக்கு மருந்துவிடும் ஒழுக்கு மருத்துவம் மற்றும் வேகமாக மருந்துகளை தாரைதாரையாக ஊற்றும் தாரை மருத்துவம் என சித்த மருத்துவம் தொடாத மருத்துவ எல்லையே இல்லை எனலாம். 

#பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கண் பரிசோதனை கருவிகள் மூலமாக பல கண்நோய்களை நவீன மருத்துவம் அறிவதற்கு முன்பாகவே 96 வகையான கண் நோய்களை பெயரிட்டு அதற்கான கருவிகளையும் பெயரிட்ட சித்த மருத்துவத்தின் அறிவியலை நவீன மருத்துவம் முழுவதுமாக எடுத்துக் கொண்டது. 

#அதுமட்டுமன்றி பலகணி பார்த்தல் என்ற அகத்தியரின் கண் மருத்துவ பயிற்சியானது Pinhole refraction என்ற நவீன கண் மருத்துவ பயிற்சி கருவியாக மாறிவிட்டது. பிரித்து அழித்தல் என்ற பெயரில் விழித்திரை பாதிப்புக்கு வழங்கப்படும் இரட்சை என்ற சூடு போடும் சிகிச்சை முறை விழித்திரை கிழிதலுக்கு லேசர் சிகிச்சை முறையாக தற்சமயம் மாற்றம் எடுத்துள்ளது. நவீன மருத்துவமுறை மற்றும் பல்வேறு இந்திய முறை மருத்துவ முறைகளுக்கும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன கண் நோய் மருத்துவம் மற்றும் அதற்கான கருவிகள்தான் முன்னோடி. சித்த மருத்துவத்தில் அறிவியல் இல்லை என்று ஏளனம் செய்யும் அனைத்து முறை மருத்துவர்களும் அகத்தியரின் கண் நோய்கள் பற்றிய பாடல்களையும் அவை தொகுக்கப்பட்ட சரபோஜி மன்னரின் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நவீன மருத்துவ அறிவியலுக்கு வித்திட்டது சித்த மருத்துவம்தான் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

#சித்தமருத்துவத்தில் 
 #அறுவைகருவிகள்

        அகத்தியர் நனய விதியில் 26 வகையான அறுவை சிகிச்சை கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு உதவும் ஆயுதங்களின் பெயர்களும், அவற்றின் பயன்பாடும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் கண்ணோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்பட்டன.

        உதாரணமாக வட்ட வடிவ, பிறை வடிவ கருவிகள் எல்லாம் கண்ணின் லென்ஸ் என்னும் கண்புரையை நீக்க பயன்படுத்திய ஆதாரங்கள் என நாகமுனிவர் மற்றும் அகத்தியரின் நனய விதி மூலம் அறியப்படுகிறது.
 
“கத்தி சத்திரம் கவின்குறும்பி வாங்கியும்
முக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும்
ஆழிக் கோலு மடுத்த பிறையுடன்
கத்தரிக் கையுடன் பரகரை வாங்கியும்
முச்சலா கையோடு முனிமொழி யோட்டும்
மட்டக் கோலும் மாறும் ஊசியும்
செப்புக் கிழையுஞ் சீரிய சலாகையும்
வட்டகை தன்னுடன் வளர்பஞ் சமுகமும்
செப்புச் சலாகையுங் கொம்புங் குடோரியும்
வெங்கலக் குழலும் ஈயச் சலாகையுங்
காயக் கோலுங் கண்கத்தி தண்டும்
இவையிவை யாயுத மிருபத் தாறுஞ்
சிவனவ னருளால் திகழ்சத்ரா யுதமே” - #அகத்தியர் நயன விதி
 
1.#கத்தி
 
“அறைதருங் கத்தியா றங்குல நீளம்
அகலமோ ரங்குலம் ஆம்முனை வட்டம்
மயிர்கத்தி போன்று வழற்கு மென்ப”
        6 அங்குலம் நீளம், அகலம் 1 அங்குலம், முனைவட்டமானது ரோக்கத்தியைப் போன்றது.
 
2. #சத்திரம்
 
“சத்திர நீளஞ் சாற்றினா றங்குலம்
வேப்பிலை போலும் விளங்கும்பல் பல்லாய்
நிறைகலுஞ் சாறு நெடியதோர் பிளவை
மெத்தவும் பயமான் மேதினி மிசையே”
        6 அங்கலம் நீளம், வேப்பிலையைப் போல் பல் பல்லாக இருக்கும். நிறை 6 கழஞ்சு, பிளவை, கட்டி ஆகியவற்றை கண்டமாய் அறுக்க உபயோகப்படுகிறது.
 
3. #குரும்பிவாங்கி
 
“குரும்பி வாங்கியின் கூறே ழங்குலம்
நிறையரைக் கழஞ்சு நெடுங்கைப் பிடியோ
ஐந்தே அங்குலம் ஆமெனப் பகர்வார்”
        நீளம் 7 அங்குலம், நிறை அரைக்கழஞ்சு, கைப்பிடி மட்டும் 5 அங்குலம்.
 
4. #முகவாதனன்
“முகவர் தனனோ முந்தான் கங்குலம்
முக்காற் கழஞ்சு நிறையென மொழிவார்”
        நீளம் 12 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு.
 
5. #முள்வாங்கி
 
“முள்வாங்கி நீறம் மூவிரண் டங்குலம்
அகலமோ ரங்குலம் அணிநிறை கழஞ்சொன
றறுக்கவும் கீறவும் அவிர்நகம் வாங்கவும்
பயனாம் என்று பணித்தனர் மேலோர்”
 6 அங்குலம் நீறம், 1 அங்குலம் அகலம், 1 கழஞ்சு நிறையுள்ளது.
 
6. #ஆழிக்கோல்
 
:ஆழிக்கோல் பத்தே அங்குலம் நிறையோ
அரைப்பலம் ஆகுமென் றறைந்தன ரறிஞர்”
         நீளம் 10 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு.
 
7. #பிறைக்கோல்
 
“பிறைக்கோ லென்பது பேசின்மூ வங்குலம்
நிறைமூன்று கழஞ்சு நிகழெழுத் தாணிபோல்
நீண்ட பிறைக்கோல் மத்தியில் நிலவுறும்”
        நீளம் 3 அங்குலம், நிறை 3 கழஞ்சு, எழுத்தாணி போல் நீண்ட பிறைக்கோல் மத்தியில் விளங்கும்.
 
8. #கத்தரிக்கோல்
 
“கத்தி கைச்சீர் கழறெட் டோடரை
அங்குலம் நிறைகாற் பலமே யாகும்”
நீளம் 8 ½ அங்குலம், நிறை கால் பலம்.
 
9. #பரகரைவாங்கி
 
“பரகரை வாங்கியோ பதினாறங்குலம்
நிறையரைப் பலமென நிகழ்த்துவ ருணர்ந்தோர்”
        நீளம் 16 அங்குலம், நிறை அரைப்பலம்.
 
10. #முச்சிலாகை
 
“முச்சிலா கைச்சீர் மொழியினே ழங்குலம்
நிறைநான்கு கழஞ்சே நிலவதன் வடிவோ
ஒரு மூன்ற தகட்டுவா யுள்ளது பாரே”
        நீளம் 7 அங்குலம், நிறை 4 கழஞ்சு, மூன்று தகடாகவுள்ளது.
 
11. #முனிமொழி
 
“முனிமொழி யென்பதோர் முக்கிய கருவியே”
இது ஒரு முனை மழுங்கிய முக்கிய கருவியாகும்.
 
12. #ஒட்டுக்கோல்
 
“ஒட்டுக்கோ லங்குலம் ஒன்றொடு பத்தே
தலையொரு கழஞ்சரைப் பலமுடல்ம நிறையே”
        நீளம் 11 அங்குலம், தலை மட்டும் 1 கழஞ்சு எடை, தலையை தவிர பிற பாகம் அரைப்பலம் நிறை உடையது.
 
13. #அட்டக்கோல்
 
“அட்டக்கோ லிரொன் பானங் குலமே
காசிடை யெட்டனைக் கழறுவ ருரியோர்”
        நீளம் 18 அங்குலம், நிறை 8 காசெடை
 
14. #ஊசி
 
“ஊசிமு வங்குலம் உரைநிநை யரைமா”
        நீளம் 3 அங்குலம், நிறை அரைமா.
 
15. #செப்புக்_குழை
 
“செப்புக் குழைதான் திரட்சியாங் குழலே
ஓருசா ணளவின துயர்நிறை யரைப்பலம்
தகடோ லைக்கனம் சார்புண்ணிர் விடுவது”
        ஒரு சாண் நீளம், நிறை அரைப்பலம், தகடு ஒலைக்கனம், திரட்சியான குழல், புண்ணில் விடுவது.
 
16. #சலாகை
 
“சலாகை யங்குலந் தானொரு நான்கே
அன்றியைந் ததன்நிறை யாறிரு கழஞ்சே”
        4 அல்லது 5 அங்குலம், நிறை 12 கழஞ்சு, புரையோடிய புண்களின் நிலை அறிவதற்கு உபயோகப்படுவது.
 
17. #வட்டகை
 
“வட்டகை யென்பதோர் வகையா யுதமே”
        முனையில் வட்ட வடிவமான தகடைக் கொண்ட ஒரு ஆயுதம்.
 
18. #பஞ்சமுகம்
 
“பஞ்ச முகமுகப் பரிசின தாமே”
        ஐந்து முகங்களைக் கொண்ட ஒரு ஆயுதம்.
 
19. #செப்புச்சலாகை
 
“செப்புச் சிலாகை சிறந்ததோர் கருவியே”
        செம்பால் செய்யப்பட்ட நீளமான குச்சி போன்ற ஒரு ஆயுதம்.
 
20. #கொம்பு
 
“கொம்பீ ரைந்தங் குலமாம் வாழையின்
குருத்தொப் பதுபூண் குலவிரண் டங்குலம்
மேனிவீக் கத்தை வீட்ட வல்லதே
கீறிக் கட்டியைக் கெட்டசெந் நீரை
வெளியிடத் தக்க மிருபய னாயதே”
        10 அங்குலம் நீளம், காளை மாட்டுக் கொம்பிற்கு அடிப்பாகத்தில் பித்தளையினால் ஆன, பூண் போன்ற சுற்றுப்பூண் இரண்டங்குலம். குருதி கட்டிய சரீர வீக்கம், கட்டி இவைகளைக் கீறி, இரத்தத்தைக் கொம்பு வைத்து வாயினால் உறிஞ்சி உமிழ உதவுகிறது.
 
21. #குடோரி
 
“குடோரியே ழரையங் குலம்நிறை காற்பலம்”
        நீளம் 7½ அங்குலம், நிறை கால் பலம்.
 
22. #வெண்கலக்குழல்
 
“வெண்கலக் குழல்தான் மேவுமெட் டங்குலம்
நிறைபலம் மூன்றோ மறையென நிகழ்த்துவர்”
        நீளம் 8 அங்குலம், நிறை 3½ பலம்.
 
23. #ஈயச்சலாகை
 
“ஈயச் சலாகை மியன்பின்மூ வங்குலம்
நிறையோ நான்கு கழஞ்சென நிலவிடும்”
        நீளம் 3 அங்குலம், நிறை 4 கழஞ்சு, கட்டி, பிளவை, கிருமி இவற்றைக் குணப்படுத்துவது.
 
24. #காயக்கோல்
 
“காயக் கோல் நீளம் களறினே ழங்குலம்
நிறையிரு கழஞ்சு நெடிய பருமனோ
இரண்டங் குலமென விசைத்தனர்
பெரியோர்”
        நீளம் 7 அங்குலம், பருமன் 2 அங்குலம், நிறை 2 கழஞ்சு.
 
25. #தண்டுச்சலாகை
 
நீளம் 9 அங்குலம், நிறை ½ கழஞ்சு, ஈர்க்குக் கனம்.
 
26. #நயனக்கத்தி
 
        நீளம் 3 அங்குலம், நிறை இரு பண வெடை, ஊசி போன்ற முனையுள்ளது. முனையில் புளியிலை கனம் விட்டு மற்ற பாகங்களெல்லாம் நூலால் சுற்றப்பட்டுள்ளது.
       
இவ்வாறு 26 வகை கருவிகளை அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் நாக முனிவரும் பல்வேறு கருவிகளை தனது நூலில் விளக்கியுள்ளார். இந்த கருவிகளை பல்வேறு அசுர சிகிச்சையில் அதாவது காரம், அறுவை, அக்கினி ஆகிய சிகிச்சை முறைகளில் சித்த மருத்துவர்கள் பெரிதும் பயன்படுத்தினர்.
 
        பாண்டிய மன்னனின் #கூன்முதுகை நிமிர்த்தியது, மன்னனின் தலைக்குள் நுழைந்த #தேரையை, தலையை உடைத்து வெளியேற்றியது, போரில் காயம் பட்ட வீரர்களின் #அழுகிய தோலை நீக்கி, வேறிடத்தில் நல்ல தோலை வெட்டி எடுத்து, வைத்து தைத்தது, உடைந்த, வளைந்த #எலும்புகளை சீராக கட்டியது, மீண்டும் உடைத்து #நேராக மாற்றியது போன்ற பல்வேறு குறிப்புகள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சித்தர் வரலாறு மற்றும் பல்வேறு இலக்கிய நூல்களில் காணப்படுகின்றன.

#தகவல் தொகுப்பு மற்றும் படங்கள்:
சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...