ஞாயிறு, 19 டிசம்பர், 2021

பெரும் செல்வந்தர்களிடம் தொடர்ந்து பணம் சேர இவைகள் தான் காரணமாம்!

பெரும் செல்வந்தர்களிடம் தொடர்ந்து பணம் சேர இவைகள் தான் காரணமாம்! இது அவர்களுடைய நம்பிக்கையாம்! அவை என்னவென்று நாமும் தெரிந்து கொள்வோமா?
பெரும் செல்வந்தர்கள் சில விஷயங்களை தொடர்ந்து நம்பிக்கையோடு ஆத்மார்த்தமாக இறைவழியில் கடைபிடித்து வருவது உண்டு. இதை ரகசியமாகவும் அவர்கள் செய்து வருவார்கள். இதில் குறிப்பாக சேட்டு எனப்படும் வட நாட்டுக்காரர்கள் பெரும் செல்வந்தராக நிலைத்து நிற்பதற்கு இவைகளை தொடர்ந்து கடைபிடித்து வருவதாக அவர்களே சில குறிப்புகளில் கூறியுள்ளனர். அத்தகைய குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
முதலாவதாக அவர்கள் முழு இறை நம்பிக்கையோடு செயல்படுபவர்கள் ஆக இருப்பார்கள். தங்களுக்கு சில நேரங்களில் போட்ட முதலீடு மொத்தமும் நஷ்டம் ஆகி விடும் என்றாலும் இறை நம்பிக்கையை அவர்கள் கைவிடுவது இல்லையாம். மீண்டும் விழுந்த இடத்திலேயே எழுந்து முயற்சி செய்து அதிக லாபம் ஈட்டி விடுவார்கள். இதிலிருந்து அவர்கள் தன்னம்பிக்கையானவர்கள் என்பது நமக்கு புரிய வருகிறது.அவர்களுடைய வீடுகளில் அதிகமாக புறாக்கள் நடமாடுவதை நாம் பார்த்திருப்போம். பெரிய பெரிய செல்வந்தர்களது வீட்டு ஜன்னல்கள் இருக்கும் மேல்தள பகுதிகளில் புறாக்கள் அமர்ந்திருப்பதை நாம் உற்று நோக்கினால் தெரிய வரும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? அவர்கள் தங்களது வீட்டு மொட்டை மாடிகளில் புறாக்கள் போன்ற பறவைகளுக்கு தானியங்களை வைப்பது அதனுடன் சிறிதளவு தண்ணீர் வைப்பதும் வழக்கமாக வைத்துள்ளனர்.இவைகளை உண்ண வரும் புறாக்கள் தங்களுடைய கர்ம வினைகளை அழிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். நம்முடைய சமுதாயத்தில் நாம் காக்கைக்கு உணவு வைப்பது போல், அவர்களுடைய சமுதாயத்தில் பறவைகளுக்கு தானியங்கள் வைப்பது தோஷத்தை போக்கும் என்று நம்புகின்றனர். இதுவே அவர்களிடம் மேலும் மேலும் செல்வத்தை பெருக்கி தருகிறது என்பதையும் ஆணித்தரமாக நம்புகின்றனர்.அடுத்ததாக அவர்கள் இருக்கும் வீட்டு பகுதியில் ஆங்காங்கு இருக்கும், கண்களில் தென்படும் எறும்பு புற்றுக்கு அரிசியை வீட்டில் வைத்து இடித்து மாவாக்கி அந்த மாவை கொண்டு வந்து எறும்பு புற்றில் தூவுவார்கள். இதனால் செல்வம் பெருகும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஒரு எறும்பு சாப்பிட்டால் கூட 100 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம் என்பது சாஸ்திரம். நம்முடைய சாஸ்திரத்தில் பச்சரிசியை பயன்படுத்தி கோலம் போட சொல்வதும் இந்த காரணத்தினால் தான். அதை சாப்பிட வரும் எறும்புகளால் நம்முடைய கர்மவினைகள் தீரும் என்பது ஐதீகம். இதனையே அவர்களும் எறும்பு புற்றுகளுக்கு அரிசிமாவு கொடுத்து வினைகளை குறைத்துக் கொள்கிறார்கள்.அதுபோல் அவர்களுடைய பகுதியில் அல்லது அவர்களது வீட்டிற்கு வரும் பசுமாட்டிற்கு தீவனம் வைப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். பசுமாடு தெய்வீக விலங்கினமாக விளங்குவதால் பசுமாட்டிற்கு மிகுந்த மரியாதையும் அவர்கள் கொடுக்கிறார்கள். கோமியத்தை சிறிதளவில் தலையில் தெளித்துக் கொண்டு தீர்த்தமாக அருந்துவார்கள். இதனால் பாவங்கள் தீரும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இதை நாமும் நம்முடைய சாஸ்திரத்தின்படி பின்பற்றி தான் வருகிறோம் என்றாலும் அவர்கள் இதை தவறாமல் செய்கிறார்கள் என்பது தான் இங்கு குறிப்பிடத்தக்கது.மேலும் பசு மாடுகளுக்கு அவைகளைப் பாதுகாக்கும் இடங்களுக்கு சென்று தேவையான பண உதவிகளையும், தானங்களையும் தாராளமாக செய்து வருவார்கள். பசுமாட்டிற்கு செய்யும் தானம் ஆனது சந்ததியை தழைக்க வைக்கும் என்பது நம்பிக்கை. சாஸ்திரம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். நம் முன்னோர்கள் கூறியுள்ள ஒவ்வொரு விஷயமும் நம்முடைய நல்வாழ்விற்கு என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதனை கடைப்பிடித்து வருவது செல்வ வளத்தை அதிகரிக்கும். சுகபோக வாழ்வு கிட்டும் என்பதை உணர வேண்டும்.

பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

🌈
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி 
இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு நன்றி

 என் வாழ்வில் அனைத்து வளங்களும் நிறைந்திருப்பதற்கு நன்றி 

என் எண்ணங்கள் எளிதாக நிறைவேறுவதற்கு நன்றி

 எனக்கு நல்ல அழகான குடும்பத்தைக் கொடுத்ததற்கு நன்றி

அறிவான ஆரோக்கியமான குழந்தைகளை கொடுத்ததற்கு நன்றி

நான் தொடும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கு நன்றி

என் மனநிறைவான வாழ்க்கைக்கு நன்றி

என் அலுவலகப்பணி மன நிறைவாக செல்வதற்கு நன்றி

எனக்கு நல்ல உறவுகள் மற்றும் நல்ல நண்பர்களை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி

என்னிடம் சேரும் அளவில்லா செல்வத்திற்கு நன்றி

அலுவலகத்தில் என் மேல் அனைவரும் நல்ல மதிப்பு மரியாதையுடன் இருப்பதற்கு நன்றி

நான் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு நன்றி

என் தாய் தந்தை உடல் ஆரோக்கியத்திற்கு நன்றி

என் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு நன்றி

எனக்கு தகுந்த நேரத்தில் தேவையான உதவிகளை பிரபஞ்சம் என்னிடம் சேர்ப்பதற்கு நன்றி

என்னால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி செய்ய முடிவதற்கு நன்றி

நான் விரைவில் கோடீஸ்வரர் ஆவதற்கு கூடிய வாய்ப்புக்கள் தொடர்ந்து அமைந்து கொண்டிருப்பதற்கு நன்றி நன்றி நன்றி

இந்த குழுவின் மூலம் பிரபஞ்ச பேராற்றல் பற்றி தெளிவான அறிவு கிடைத்து கொண்டே இருப்பதற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏

செவ்வாய், 7 டிசம்பர், 2021

கல்லா கட்டும் ‘கடக்நாத்’ கோழி வளர்ப்பு தொழில்

கோழியும் கறுப்பு, கறியும் கறுப்பு: கல்லா கட்டும் ‘கடக்நாத்’ கோழி வளர்ப்பு தொழில்

Hero image
preview-clap

எம்புட்டு அங்காளி, பங்காளியாய் பழகினாலும், சோறுனு வந்துவிட்டால் முறைப்படி கவனிக்காவிட்டால் சண்டை, சச்சரவு, தான். அந்த அளவுக்கு பவர் புல்லானது சோறு. 

அப்படித்தான், ஒரு கோழிக்காக இரு மாநிலங்கள் கட்டி உருண்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ‘கடக்நாத்’ கோழிகள் எங்களுக்கே சொந்தம் என்று 'புவிசார் குறியீடு' கேட்டு மனு அளிக்க, மத்திய பிரதேச மாநிலமோ ‘செல்லாது... செல்லாது’ கோழி எங்கூருக்கே சொந்தம் என்று கூறியதுடன், கடக்நாத் கோழிகளின் விற்பனைக்காக ’MP kadaknath’ என்ற செயலியையும் வெளியிட்டது. இறுதியாய், மத்திய பிரதேசத்துக்கே கடக்நாத் கோழிக்கான புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

இரண்டு மாநிலங்கள் அடித்துக் கொள்ளும் அளவுக்கு கடக்நாத் கோழியில் அப்படியின்ன ஸ்பெஷல் என்றால்... ஸ்பெஷல் தான்.
image

அது என்ன கடக்நாத் சிக்கன்?

மத்திய பிரதேசத்தின் நாட்டுக் கோழிகளான இக்கோழியை அம்மாநில மக்கள் ‘காளி மாசி’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். காளி மாசி என்றால் காளியின் தங்கை என்று பொருள்படும். நம்மூரில் கருங்கோழிகள் என்றும் அழைக்கப்படுகிறது. 

நல்லா கரு, கருவெனயிருக்கும் கடக்நாத் கோழியின் இறக்கைகள் மட்டுமின்றி, அதன் இறைச்சி, எலும்பு, இரத்தம், என சகலமும் கறுப்பு தான். இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். 

ஷாஜகான் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் 'கறுத்தக்கோழி மிளகுப் போட்டு வறுத்து வச்சிருக்கேன்' என்று நடிகை மீனா சொல்வதும் கடக்நாத்தை தான். 

இந்தக் கோழியைச் சாப்பிடுவதால், இதன் மெலனின்தன்மை காரணமாக நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்றும், ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்னைகளை போக்கவல்லது என்றும் சொல்லப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களுக்காகவே கடக்நாத் கோழிகளுக்கு சந்தையில் மவுசு ஜாஸ்தி. 

தமிழகத்திலும் கருங்கோழி பண்ணைகள் வைத்து நடத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அவர்களில் ஒருவர் தான் தமிழ்ச்செல்வன். சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் வெண்ணாங்குபட்டு கிராமத்தில் கோழிப்பண்ணை அமைத்திருக்கிறார். கடக்நாத் மட்டுமின்றி அசில், சிறுவிடை, நிகோபாரி இனக் கோழிகளையும் மேய்ச்சல் முறையில் கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.

“கால்நடை மற்றும் விவசாயத்தின் மீது பள்ளி வயதிலிருந்தே ஆர்வம் அதிகம். கோழிப் பண்ணை வைக்கத் திட்டமிட்டப் பின்னும், அதிகப்படியான முதலீடு போடுவதில் தயக்கமும், அச்சமும் இருந்ததது. 2001ம் ஆண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பிராய்லர் கோழி பண்ணை அமைத்தேன். சொந்த முதலீட்டில் பண்ணை அமைத்துவிட்டால், கோழிக்குஞ்சும், தீவனமும் நிறுவனங்களே கொடுத்துவிடுவர். அதில் வளர்ப்புக் கூலி மட்டும் பண்ணையாளர்களுக்கு கிடைக்கும். ஆனால், அது பண்ணையாளர்களை நசுக்கும் நாசக்கார வேலை. 

கோழிப்பண்ணை தமிழ்ச்செல்வன் (இடது)

தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயச் சங்கத்தில் மாநில துணைத் தலைவராக பதவி வகித்து அதை எதிர்த்து தொடர் போராட்டங்களும், எதிர்ப்புக் குரலும் கொடுத்து வந்தேன். ஆனாலும், நிறுவனங்களிடமே மீண்டும் செல்ல வேண்டிய நிலை. 

”அதனால், 35 லட்ச ரூபாய் நஷ்டத்தினையும் பாராமல் பிராய்லர் கோழி வளர்ப்பை கைவிட்டேன். 2013ம் ஆண்டு நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுப்பட்டேன்,” என்றார்.

நம் ஊரில் சந்தைக்காகவும், இறைச்சிக்காகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ‘அசில்’ ரக கோழிக் குஞ்சுகள் நூறை முதலீட்டாகக் கொண்டு பிசினசை தொடக்கியுள்ளார். அப்போது தான் தனித்தன்மையடன் புதிததாக செய்யவேண்டும் என்று சிந்தித்தவருக்கு, கடக்நாத் கோழிகள் பற்றி தெரிய வந்துள்ளது. மருத்துவக் குணங்கள் மிகுதியாகவும், சந்தையில் அதிக வரவேற்புடன் கருங்கோழிகள் இருந்ததால், நண்பரின் உதவியுடன் மத்திய பிரதேசத்தில் இருந்து 250 கோழிக் குஞ்சுகள் வாங்கி வந்து வளர்ப்பைத் தொடங்கி உள்ளார்.

இன்று 300 கடக்நாத் கோழிகள், மற்றும் 200 சிறுவிடை, நிகோபாரி 200, 100 ஒரிஜினல் அசில் கோழிகளுடன் தொழிலை விரிவுப்படுத்தியதுடன் பதினைந்து பண்ணைகளின் ஆலோசராகவும் இருக்கிறார்.

கோழிக் குஞ்சுக்கான பல்புகளும், பராமரிப்பும்...

“முட்டை பொரிச்சு கோழிக்குஞ்சுகள் பிறந்த முதல் 20 நாளுக்கு செயற்கையா வெப்பம் கொடுக்கணும். தகரத்தை வட்ட வடிவில் அமைத்து 100 வாட்ஸ் பல்புகளைத் தொங்கவிட்டால் போதும். 100 குஞ்சுகளுக்கு 100 வாட்ஸ் பல்பு போதுமானதாக இருக்கும். அதிகமான எண்ணிக்கையில் கோழிக்குஞ்சுகள் இருப்பின், பல்புகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். 

குஞ்சுகளுக்கு வைக்கிற தண்ணீர்ல வசம்பைக் கலந்துவிட்டாலும் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். குளிர்காலத்தில் தண்ணீர்ல அதிமதுரம் பொடியைக் கலந்து கொடுத்தால் சளிப் பிடிக்காது. இந்த நாட்டு வைத்தியத்தை தொடர்ச்சியாய் கொடுத்து வந்தாலே கோழிக்கு எந்தவொரு நோய்சீக்கும் வராது. 

ஒரு கோழிகக்கு தீவனம் என்று எடுத்துக் கொண்டால் அருந்தீவனம் 40 சதவீதமும், பசுந்தீவனம் (அகத்துக்கீரை, முருங்கைக்கீரை, சிறுக்கீரை) 60 சதவீதமும் தேவைப்படும். ஒரு ‘சிறுவிடை’ நாட்டுக்கோழிக்கு 5 மாதத்துக்கு 3 கிலோ 400 கிராம் தீவனம் தேவைப்படும். இதில் அருந்தீவனம் மட்டும் எடுத்துக் கொண்டால் ஒன்றரை கிலோ, பசுந்தீவனம் 2கிலோ. 

அருந்தீவனத்துக்கு 37.50 ரூ, பசுந்தீவனத்துக்காக 12.50ரூ என ஒரு கோழிக்குஞ்சு தாய்கோழி ஆவதற்கு தீவனச் செலவு 50 ரூபாய் ஆகும். ஒரு கோழிக் குஞ்சு 65ரூபாய்க்கு விலைக்கு வாங்கி வளர்த்தால், 65+ தீவனச்செலவு + இதர செலவு = 125ரூபாய். ஒரு கோழிக்கான செலவு 125ரூபாய் மட்டுமே. அதன் விற்பனை விலை 300ரூபாய்க்கு குறையாமல் விற்கலாம். ஒவ்வொரு இனத்துக்கும் ஏற்றவாறு முன்னப்பின்ன மாற்றங்கள் இருக்கும்,” என்கிறார்.
இப்படி நூறு கடக்நாத் கோழிக்குஞ்சுகளுடன் பண்ணை அமைப்பதில் உள்ள வரவு, செலவுகளை பகிரத் தொடங்கினார்.
image

கல்லாவை நிரப்பும் ‘கடக்நாத்’கோழி வளர்ப்பு

“கடக்நாத் கோழிக் குஞ்சுகள் 100 வாங்கி பண்ணையாளர் தொழில் தொடங்கினால், விற்பனைவாய்ப்புக்கு ஏற்றவாறு கடக்நாத் கோழிகள் பன்மடங்கு லாபம் தரும். நாட்டுக் கோழி வளர்ப்பில் முட்டை விற்பனை, குஞ்சுகள் விற்பனை, வளர்ந்தக் கோழி விற்பனை என்று மூன்று வகையில் வருமானம் ஈட்ட முடியும். 

முட்டை விற்பனை என்று எடுத்துக் கொண்டால் நூறு தாய்க்கோழிகளிடமிருந்து ஆண்டுக்கு தலா நூறு முட்டை என்ற கணக்கில் 10 ஆயிரம் முட்டைகள் கிடைக்கும். ஒரு கடக்நாத் முட்டையின் விலை 40 ரூபாய். பத்தாயிரம் முட்டைகளுக்கு 40 ரூபாய் வீதம் மொத்தம் ரூ 4 லட்சம் வருமானம் பார்க்கலாம். 

அதுவே குஞ்சு விற்பனை என்றால், பத்தாயிரம் முட்டைகளையும் குஞ்சுகளாக வளர்க்கையில் நூறு சதவீதமும் குஞ்சுகள் கிடைப்பதில்லை. 75 சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும் 7 ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் கிடைக்கும். ஒரு கோழிக்குஞ்சு 60 ரூபாய்க்கு விற்பனைவயாகிறது. எனில் 7 ஆயித்து 500 கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ 4லட்சத்து 500 வருமானம் ஈட்டலாம். 

இறைச்சிக்காக கோழி வளர்க்கையில் 7 ஆயிரத்து 500 கோழிக் குஞ்சுகளையும் வளர்க்கையில் அதில் 10 சதவீதம் கழிந்து 750 கோழிகள் இல்லாமல் போனாலும் 6 ஆயிரத்து 750 தாய்க் கோழிகளை வளர்த்துவிடலாம். சராசரியாய் 6 ஆயிரம் கோழிகள் என்று வைத்து கொண்டாலும் ஒரு உயிர்க் கோழி 400ரூபாய், 6 ஆயிரம் கோழிக்கு ரூ 24 லட்சம் வருமானம் கிடைக்கும். 

”ஆனால், பண்ணையாளர்கள் அவர்களுக்கான கஸ்டமர்களை தேடிக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 6 ஆயிரம் கோழிகளை விற்க வேண்டும் என்றால் மாதத்துக்கு 500 கோழிகளை விற்க வேண்டும். அப்படியானால், ஒரு பண்ணையாளர் மாதம் 500 கோழிகளை விற்பதற்கு 700 வாடிக்கையாளர்களையாவது கொண்டிருக்க வேண்டும். 700 கஸ்டமர்களை கையாளக் கூடிய திறமையானப் பண்ணையாளராக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்,” என்கிறார் அவர்.


ஞாயிறு, 5 டிசம்பர், 2021

*I Love Money* *Money Loves Me*

😍 *I Love Money* 😁 
      *Money Loves Me*😃

💰 என்னிடம் இருக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கு 
நன்றி🙏

💸 நான் பணத்தை காந்தம் போல் அபரிவிதமாக ஈர்க்கிறேன். 

💸 நான் தேடும் பணம் என்னை தேடி என்னிடம் வந்துகொண்டே இருக்கிறது. 

💸நான் பணத்தை விரும்புகிறேன். மதிக்கிறேன். பணம் அனைவருக்கும் 
அதிகமாக கிடைத்துக்கொண்டே இருப்பதற்கு நன்றி 🙏

💸நான் செல்வ செழிப்பாக இருக்கிறேன்🙏

💸என்னை நோக்கி செல்வமானது வெள்ளம் போல் ஓடி வருகிறது🙏

💸நான் பணத்தை நேசிக்கிறேன் பணம் என்னை நேசிக்கிறது🙏

💸என் வங்கி கணக்கில் அதிகமான பணம் இருந்து கொண்டே இருக்கிறது🙏

💸என்னிடம் எப்பொழுதும் அபரிமிதமான பணம் இருந்து கொண்டே இருக்கிறது🙏

💸நான் பணம் நிறைந்தவன்🙏

💸என்னிடம் இருந்து செல்லும் பணமானது யார் யாரிடமோ செல்கிறதோ அவர்களுக்கு பல ஆயிரம் நன்மைகளை செய்து விட்டு அதேபோல் பணம் எனக்கு ஆயிரம் மடங்காக திருப்பி வந்து கொண்டே இருக்கிறது🙏

💸என்னிடம் இருக்கும் அபரிமிதமான பணத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கின்றேன்🙏

💸என்னிடம் இருக்கும் பணத்தால் நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருந்து கொண்டே இருக்கின்றேன்🙏

💸என்னிடம் எப்பொழுதும் போதுமான பணம் இருந்து கொண்டே இருக்கிறது🙏

💸எனது வருமானம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது🙏

💸நான் ஒரு அன்பான பிரபஞ்சத்தின் பணக்கார குழந்தை🙏

💸பிரபஞ்சம் எப்போதும் எனக்கு பணத்தை  வழங்கிக் கொண்டே இருக்கிறது🙏

💸எனக்குத் தேவையானதை விட பணம் எப்போதும்  அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறது🙏

💸நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் பணத்தை பெற்றுக் கொண்டே இருக்கின்றேன்🙏

💸நான் ஒரு பணக்காரன்🙏

💸எனது பணப்பை பணத்தால் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது🙏

💸நான் எப்பொழுதும் அதிகமான பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றேன்🙏

💸நான் இயற்கையாகவே பணத்தை விரும்புகிறேன்🙏

💸ஆடம்பர வாழ்க்கையை முறையை நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொண்டே இருக்கின்றேன்🙏

💸பணம் எப்பொழுதும் எனக்கு எளிதாக கிடைத்துக்கொண்டே இருக்கிறது🙏

💸ஒரு நீர்வீழ்ச்சி போல பணம் என்னிடம் வந்து கொண்டே இருக்கிறது🙏

💸இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் 😀😊☺😃😄 
🙏🙏🙏🙏🙏🙏🙏

வெள்ளி, 3 டிசம்பர், 2021

சீரக நீர் அருந்துவது செரிமானப் பணி சீராக உதவும்.

உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும், நோய்கள் இன்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தண்ணீருக்கு பதில் சீரக நீர் அருந்தினாலே போதும்.சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சீரகம் பற்றி பல்வேறு குறிப்புகள் உள்ளன. ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, மருத்துவ பயன்கள் நிறைந்த சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்தோ, அல்லது வெந்நீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் 10 நாளில் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடியும்.

சீரகத்தில் மிகக் குறைவான கலோரியே உள்ளது. மற்ற எந்த ஒரு பானத்தைக் காட்டிலும் சீரக நீர் கலோரி குறைந்ததாகவும் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் விளங்குகிறது.

ஏராளமான ஆன்டிஆக்ஸிடண்ட் இதில் உள்ளது. உடலில் ஏற்படக் கூடிய ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸ் பாதிப்பை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

தினமும் சீரக நீர் அருந்துவது செரிமானப் பணி சீராக உதவும். செரிமானம் சரியாக நடந்தால், உடலின் அத்தனை உறுப்புகளுக்கும் சரியான வகையில் ஊட்டச்சத்து சென்று சேரும். உள் உறுப்புக்கள் ஆரோக்கியம் மேம்படும்.

சீரக நீர் புரதம், கொழுப்பு, சர்க்கரையை சிதைத்து உடலுக்குத் தேவையான வகையில் மாற்றும் செயல்பாட்டுக்கு துணை செய்கிறது. இதனால் செரிமானக் குறைபாடு, வயிறுப்பூக்கு, குமட்டல், வாந்தி போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கான வாய்ப்பு குறைகிறது.

சீரக நீர் உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் தூண்டுகிறது. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது. வயிறு தொப்பை பிரச்னை உள்ளவர்கள் சீரக நீர் அருந்தி வருவது நல்லது.

சீரக நீர் சில வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் காரணமாக உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன.

இன்சுலின் சென்சிடிவிட்டியைக் மேம்படுத்தும் ஆற்றல் சீரக நீருக்கு உள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வர விரும்புகிறவர்கள் சீரக நீர் அருந்தலாம். டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.

சீரக நீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தைக் காக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்ட் மற்றும் நுண்கிருமி எதிர்ப்பு திறன் சருத்தை பாதுகாக்கிறது.

*இதயத்தில் அடைப்பு உள்ளதா?

*இதயத்தில் அடைப்பு உள்ளதா?*

திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இதய அடைப்பிற்கு இலவசமாக  வைத்தியம் செய்கிறார். நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.

*வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் வைத்தியம்.*

இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய்..  *ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்தக் குழாய் அடைப்பு மாறுகிறது.* பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம்.

மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அனைவருக்கும் பகிருங்கள். இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும்  மகிழ்ச்சியே..

*Sukumaran Vaidyans* ,
*G A Pharmacy & Nursing Home,* *Neyyattinkara P.O.,*
*Thiruvananthapuram.*
*Pin: 695 572,*
*Kerala State.*
*Phone: 0471 2222364.*
👍🏻🙏🏻

புதன், 1 டிசம்பர், 2021

டாக்டர்களின் எதிரி யார்???*#நிலக்கடலை* தான்...

டாக்டர்களின் எதிரி யார்???
*#நிலக்கடலை* தான்...

சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!!

#நிலக்கடலை_சர்க்கரையை_கொல்லும்..!!

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

 நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

★ நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

★ பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

★ இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

★ இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

★ ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

★ மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

★ கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. 

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

★ அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

 எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

★ கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

★ பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.

 நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
.
பகிருங்கள் பலரும் தெரிந்துகொள்ளட்டும்... கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்...

எளிதாக கிடைப்பதனை அடுத்தவருக்கு சத்தான கடலையை தானம் கொடுக்கிறோம் ஏன்???🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔🥔

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...