புதன், 10 பிப்ரவரி, 2021
பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்கள்
வியாழன், 4 பிப்ரவரி, 2021
என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்”
வாழ்வு தரும் மரங்கள்!
திங்கள், 1 பிப்ரவரி, 2021
அபிராமி அந்தாதி -100 பாடல் பலன்.
ஞாயிறு, 31 ஜனவரி, 2021
தூபங்களின்_நன்மைகள்
தூபங்களின்_நன்மைகள்.
#சந்தனம்-தெய்வ கடாட்சம் கிட்டும்.
#சாம்பிராணியில்- தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
#ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.
#அகிலி - தூபமிட குழந்தை பாக்கியம் கிட்டும்.
#துகிலி - தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.
#துளசி தூபமிட - காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.
#தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.
#வலம்புரிக்காய் - தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.
#வெள்ளைகுங்கிலியம் - தூபமிட துஷ்ட ஆவிகள் இருந்த இடம் தெரியாது நீங்கிவிடும்.
#வெண்கடுகு - பகைமை எதிர்ப்புகள் விலகும்.
#நாய்கடுகு - துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.
#மருதாணிவிதை- சூனிய கோளாறுகள் நீங்கும்.
#கரிசலாங்கன்னி - மகான்கள்அருள்கிட்டும்.
#வேப்பம்பட்டை - ஏவலும் பீடையும் நீங்கும்.
#நன்னாரிவேர் - இராஜவசியம் உண்டாக்கும்.
#வெட்டிவேர் - சகல காரியங்களும் சித்தியாகும் .
#வேப்பஇலைதூள்-சகல நோய்களும் குணமாகும்.
#மருதாணிஇலை - இலட்சுமி கடாட்சமுண்டாகும்.
#அருகம்புல்தூள்- சகல தோஷமும் நீங்கும்.
#குறிப்பு: மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும். நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்.
கருப்பு குதிரை லாடம் பயன்கள்
கருப்பு குதிரை லாடம் பயன்கள் :
1.வலது காலில் ஒடி தேய்ந்த கருப்பு குதிரையின் லாடத்தை தலை வாசல் கதவு மேல் பகுதியில் மாட்டுவதின் மூலம் தீய சக்திகளை அகற்றி நல்ல அதிர்ஷடத்தை வரவழைத்து குடுக்க கூடியது .
2.இது விட்டிற்கு மிக பெரிய பாதுகாப்பு வளையம் போல் செயல் படும்.கண் திஷ்டி.மற்றும் மாந்திரிக செயல்பாடுகளில் இருந்து நம்மை பாதுகாகக்கும்.
3.வேலை இல்லாமல் இருப்போர் மற்றும் வேலையில் இருந்து கொன்டு உயர் பதவி எதிர் பார்த்து காத்து கொன்டு இருப்போர். இந்த கருப்பு குதிரை லாடத்தை விட்டின் வடக்கு திசையில் மாட்டி வைத்தால் வேலை கிடைக்கும் மற்றும் வேலையில் உயர் பதவி கிடைக்கும் நன்றி
திருஷ்டி தோஷங்கள் போக்க தாந்திரீக பரிகார
குதிரையின் கால் குளம்புகளில் அடிக்கப்பட்டு, கழன்று விழுந்த குதிரை லாடம் எங்கேனும் உங்களுக்கு கிடைத்தால் வீட்டிற்கு கொண்டு வந்து, உங்கள் பிறந்த நாளைக்கு முன்பாக இரவில் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி, மறுநாள் அந்த குதிரை லாடத்தை உங்கள் வீட்டில் எங்கேனும் பத்திரமாக வைத்து விடுவதால், உங்களின் திருஷ்டி தோஷங்கள் அனைத்தையும் போக்கி நன்மைகளை அருளச் செய்யும் ஒரு சிறந்த தாந்திரீக பரிகார முறையாக இருக்கிறது.
மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி?
🌺 மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி?
🍃தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை?
‘சிரஞ்சீவி’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை ‘சிரஞ்சீவி’ என்பர்.
அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர்.
மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள்.
இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்?
எமனுக்கு பயந்து 16 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.
மார்கண்டேயனுக்கு 16 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும்.....
அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.
ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு சீக்கிரம் உபநயனம் செய்வித்ததார்.
பின்னர் பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக என்று பணித்தார்.
மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.
சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற.....
அவர்களும், தீர்க்கா யுஷ்மான் பவ என்று வாழ்த்திவிட்டார்கள்.
பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 16 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று.
என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா.
இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள்.
அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார்.
இப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.
பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா?
ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.
பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று.
எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும்.
அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல…
உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது...
எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும்.
நமக்கு வரும் துன்பத்தை காப்பாற்றகூடியது பெரியோர்களின் ஆசீர்வாதம் என உணர்ந்து நாம் பெரியோர்களை வணங்கி நலம் பெறுவோம்.
ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....
ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...
-
தயவு செய்து அதிகமாக பகிரவும் !! இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல் புற்றுநோய் வாய்புற்றுநோய் குடல்புற்றுநோய் போன்ற...
-
வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி **வழலை கட்டி (சோப் SOAP) Vs இயற்கை குளியல் பொடி*** நாம் இயற்கையின் பக்கமும் இயற்கை தயாரிப்பின்...
-
சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள் சில வார்த்தைகள் இணையும்போது , அதற்கு அபரிமிதமான சக்தி கிடைத்து விடுகிறது...