புதன், 10 பிப்ரவரி, 2021

பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்கள்

*பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும்* எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்....

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. 

அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை.

 மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது.

இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. 

அதாவது முடி முதல்,அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான்.

இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.

முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். 

பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். 

ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்.

இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து,காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையை சுற்றி  (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத)எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. 

அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் .இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு  தகவல் உண்டு.

தண்டாயுதபாணி சிலையை இராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டுமா? ஆண்டி கோலத்தில்
(கற்சிலை) தரிசிக்க வேண்டுமா? 
எது ‌சிற‌ந்தது?

முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக,பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். 

முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பி பார்க்கலாம்.

வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. 

20 வருடமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன்.தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார். 

தீராத நோய்,என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.

மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. 

பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் ஆண்டி கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.

பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். 

நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம் ஆகும்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !

வியாழன், 4 பிப்ரவரி, 2021

என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்”



*அவர் ஒரு பிரபல ஜோதிடர்*

அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல.! அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது.  

எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”

தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன்.  

பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.

அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார்.  

கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.

வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  

அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.!

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்?  

இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது.!  

ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.

தொழிலாளி தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது.? என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.

*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* 
அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.!

நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.

சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. 
அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி.! ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது !

. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது.! தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு..!!

ஏதும் முடிவதில்லை நம்பிக்கையின் தொடக்கம் நாளும் சிறக்கும்..!!

 *கேட்டு வியந்தது..* 

வாழ்வு தரும் மரங்கள்!

வாழ்வு தரும் மரங்கள்!

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்

பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்

பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்

பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்

எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்

நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம் தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும், மூன்று யுகங்கள் தங்கி அருள் புரிவர்.

உங்களுக்காக மரங்கள் பற்றிய நூலிருந்து
மரங்களை பற்றிய சற்றே வித்தியாசமான
சுவாரசியமான தகவல்களை
தொகுத்து வழங்கியிருக்கிறோம்

கண்டிப்பாக படிக்கவும்

‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணன் கூறுகிறார்.

ஒரு அரச மரம் நட்டால் ஒரு ஆண்டு சொர்க்க லோக பதவி கிட்டும் என்று விருஷ ஆயுர்வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறதாம்.

பல ஆண்டு கால சொர்க்கலோக வாசத்துக்கு பல அரச மரங்கள் நட வேண்டும். 
அதிக அளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரச மரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்றச் சொல்லியிருப்பதன் மருத்துவ காரணங்கள் உள்ளன.

அரச மரத்தின் அதிக பிராணவாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது அதனால் புத்தி தெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது. 
புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம் என்பது ஒரு அரச மரமே என்றும் அதன் காரணமாகவே அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில் நீதி வழங்கினார்கள்.

ஆல மரம் வாக்கின் அடையாளம் என்றும் அதன் காரணமாகவே வணிகர் ஜாதியினரான பனியாக்கள் அதன் அடியில் கூடி தங்கள் வணிகத்தை நடத்தினார்கள் என்றும் அதன் காரணமாகவே 
அது ஆங்கிலத்தில் பான்யன் ட்ரீ என்று அழைக்கப் பட்டிருக்கிறது. ஆல மரம் மேகங்களை ஈர்த்து அதிக மழையை தருவிக்கக் கூடியவை, அதன் காரணமாக ஆல மரங்களை நிறைய வளர்க்க வேண்டியவை.

சாஸ்திர முறைப்படி, இரண்டு ஆல மரங்களை நடுபவர்களுக்கு கைலாயத்தில்  இடம் உண்டு என்றும் விருஷ ஆயுர்வேதம் நூல் சொல்கிறது.

மேகங்களை இழுக்கும் சக்தியுள்ள இன்னொரு மரமாக இலுப்பை மரத்தையும் அது ஏன் ஆலையில்லா ஊருக்குச் சர்க்கரையானது என்பதைப் பற்றியும் கூறுகிறார். 

தமிழ் நாட்டில் அருகி வரும் இந்த இலுப்பை மரம் அவசரமாக மிக அதிக அளவில் மீண்டும் வளர்க்கப் பட வேண்டியதன் அவசியம் இலுப்பை மரத்தின் மகிமைகளைப் படிக்கும் பொழுது புரிகிறது.

அரசு ஆண் மலடை நீக்கும் வல்லமை உடையதினாலும் வேம்பு பெண் மலடை நீக்கும் வன்மையுள்ளது என்பதினாலும் அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்யும் ஃபெர்டிலிடி
ரைட்ஸ் உருவானது.

நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு வேப்ப மரப் பட்டையின் கஷாயம் அருந்த வேண்டும்.

நெட்டிலிங்க மரங்களே தமிழ் நாட்டில் அசோக மரங்களாக கருதப் படுகின்றன. உண்மையான அசோக மரங்கள் இலங்கையில் இருந்து தருவிக்கப் பட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப் பட வேண்டும்.

இப்படி மரங்கள் குறித்தான எண்ணற்ற செய்திகள் ஒவ்வொரு மரத்தின் மீதும் பெரும் மரியாதையையும், பிரமிப்பையும் அளிக்கின்றன. தமிழ் நாட்டில் பெய்த மழை அளவிலேயே அதிகமாக பெய்த இடம் திருவாலங்காடு. திருவாலங்காட்டின் தல விருட்சம் ஆல மரம் என்பதும் ஆல மரங்கள் நிறைந்த இடத்தில் அதிக மழை பெய்தது இயற்கைதான் போலிருக்கிறது. நாம் சாதாரணமாக எதிர் கொள்ளும் வேப்ப மரத்தின் பயன் பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. புங்கை மரத்தை அதிகம் வளர்ப்பதினால் தமிழ் நாட்டின் பயோ எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடையலாம் என்கிறார். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைச் சமாளிக்க புங்கை மரத்தை அதிக அளவில் வளர்த்து புங்கை எண்ணெய் தயாரிப்பது ஒரு மாற்றாக அமையும் அதே நேரத்தில் மழையையும் பெற்றுத் தரும் போன்ற தகவல்கள் தமிழ் நாட்டு அரசு அவசியம் கவனிக்க வேண்டியவை.

ஒரு அரசு, ஒரு வேம்பு, ஒரு ஆல், பத்து புளி, முக்கூட்டாக வில்வம், விளா, நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களையும் நடுவோர் நரகத்துக்குப் போக மாட்டார்கள் என்று விருஷ ஆயுர்வேதம் சுட்டுகிறதாம். 
அந்தக் காலத்தில் இவை போன்ற சுலோகங்கள் மூலமாகவே சூழலியலைப் போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்று இந்த நூலைப் படிக்கும் பொழுது தெரிகிறது. சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நாம் வாழும் சூழலே என்பதையும் நம் வாரிசுகளின் நன்மைக்காகவே இந்த பூமியை நாம் விட்டுச் செல்கிறோம் என்ற உண்மையையும் அவை உணர்த்துகின்றன. மரம் வளர்ப்பதினால் சொர்க்கத்தையும் நம் வாரிசுகளை மரமில்லாத நீரில்லாத மாசடைந்த நரகங்களில் இருந்தும் காக்கிறோம். தில்லையம்பலமான சிதம்பரத்தின் தல விருட்சம் தில்லை என்னும் மரம். இன்று அம்பலத்தில் நடராஜர் மட்டுமே ஆடுகிறார் ஆனால் தில்லை மரங்கள் மட்டும் அம்பேல் ஆகி விட்டது என்று மறைந்து விட்ட தில்லை மரத்தின் அருமைகளை அடுக்குகிறார். தில்லை மரம் ஒரு பாலுணர்வு ஊக்கி மரம் என்றும் அவற்றை அலையாற்றி மரங்களாக கடற்கரைகளில் வளர்த்தால் அவை சுனாமி தடுப்பாகவும் எரிசக்தி அளிக்கும் வளங்களாகவும் அமையும் என்கிறார். செஞ்சந்தன மரம் அணுக்கதிர் வீச்சைத் தடுக்க வல்லது என்றும் மோசஸ் சினாய் ஏரியில் வீசி எறிந்து நீரைத் தூய்மை செய்த மரத் தடி செஞ்சந்தன மரமாகவே இருக்க வேண்டும் என்கிறார். கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகளில் ஒரு பாதுகாப்பிற்காக செஞ்சந்தன மரத்தை அதிகம் நடலாம் என்ற யோசனையையும் அளிக்கிறார்  

நாம் அதிகம் அறிந்திராத கண்டிராத மரங்களான மருதம், சேராங்கொட்டை, செம்மந்தாரை, தான்றி மரம்,வெப்பாலை, வன்னி, வாதநாராயணம், கடம்பு, புன்னை, நொச்சி,வேள்வேல்,தழுதாழை,ஆனைப்புளி, பதிமுகம், மகோகனி, சிறுநாகப்பூ, தோத்தாங்கொட்டை, எட்டி, இயல்வாகை ஆகிய அரிய வகை மரங்களின் 
மருத்துவ, சுற்றுச் சூழல் முக்கியத்துவங்களை அறிந்த நாம் 
அவற்றை நாம் அதிக அளவில் வளர்த்து மீட்டெடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது

மரங்களை பொறுத்து
அதன் தன்மையை சுறுக்கமாக அறியலாம்

நெல்லி-இந்தியாவின் எதிர்காலம்,

மருதம்-இதய நோய் நீக்கி,

வெப்பாலை-பல நோய் நிவாரணி,

முருங்கை-தாதுபுஷ்டி மரம்,

வேள்வேல்-மேக நிவாரணி,

கொய்யா-ஏழைகளின் ஆப்பிள்,

கருங்காலி-கருப்பு வைரம்

தொகுப்பு 
வாழ்வு தரும் மரங்கள்
 
இப்படி நமக்கு வாழ்வு
தரும் மரங்களைப் படித்து, 
அறிந்து கொள்வதோடு நின்று விடாமல் அவற்றை வளர்ப்பதும் நம் ஒவ்வொருவர் கடமையுமாகும்.
இனி ஒரு விதி செய்வோம்
அதில் வீதி எங்கும் மரம் வளர்ப்போம்.
   - பகிர்ந்த நண்பருக்கு நன்றி!

திங்கள், 1 பிப்ரவரி, 2021

அபிராமி அந்தாதி -100 பாடல் பலன்.

அபிராமி அந்தாதி -
100 பாடல் பலன்.

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:- 

1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள். 

2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள். 

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள். 

4. உயர்பதவிகளை அடையலாம். 

5. மனக்கவலை தீரும். 

6. மந்திர சித்தி பெறலாம். 

7. மலையென வருந்துன்பம் பனியென நீங்கும். 

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும். 

9. அனைத்தும் கிடைக்கும். 

10. மோட்ச சாதனம் பெறலாம். 

11. இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள். 

12. தியானத்தில் நிலை பெறுவார்கள். 

13. வைராக்கிய நிலை அடைவார்கள். 

14. தலைமை பெறுவார்கள். 

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள். 

16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும். 

17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம். 

18. மரணபயம் நீங்கும். 

19. பேரின்ப நிலையை அடையலாம். 

20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும். 

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும். 

22. இனிப்பிறவா நெறி அடையலாம். 

23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும். 

24. நோய்கள் விலகும். 

25. நினைத்த காரியம் நிறைவேறும். 

26. செல்வாக்கும் 
சொல்வாக்கும் பெருகும். 

27. மனநோய் அகலும். 

28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம். 

29. எல்லா சித்திகளும் அடையலாம். 

30. விபத்து ஏற்படாமல் இருக்கும். 

31. மறுமையில் இன்பம் உண்டாகும். 

32. துர்மரணம் வராமலிருக்கும். 

33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும். 

34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும். 

35. திருமணம் நிறைவேறும். 

36. பழைய வினைகள் வலிமை அழியும். 

37. நவமணிகளைப் பெறுவார்கள். 

38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள். 

39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம். 

40. பூர்வ புண்ணியம் பலன்தரும். 

41. நல்லடியார் நட்புப்பெறும். 

42. உலகினை வசப்படுத்தும். 

43. தீமைகள் ஒழியும். 

44. பிரிவுணர்ச்சி அகலும். 

45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.

46. நல்நடத்தையோடு வாழ்வார்கள். 

47. யோகநிலை அடைவார்கள். 

48. உடல்பற்று நீங்கும். 

49. மரணத்துன்பம் இல்லாதிருக்கும். 

50. அம்பிகையை நேரில் காண முடியும்.

51. மோகம் நீங்கும். 

52. பெருஞ் செல்வம் அடைவார்கள். 

53. பொய்யுணர்வு நீங்கும். 

54. கடன்தீரும்.  

55. மோன நிலை கிடைக்கும். 

56. அனைவரையும் வசப்படுத்தலாம். 

57. வறுமை ஒழியும். 

58. மன அமைதி பெறலாம். 

59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள். 

60. மெய்யுணர்வு பெறலாம். 

61. மாயையை வெல்லலாம். 

62. எத்தகைய அச்சமும் வெல்லலாம். 

63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம். 

64. பக்தி பெருகும். 

65. ஆண்மகப்பேறு அடையலாம். 

66. கவிஞராகலாம்.

67. பகைவர்கள் அழிவார்கள். 

68. நிலம்,  வீடு போன்ற செல்வங்கள் பெருகும். 

69. சகல சவுபாக்கியங்களும் அடைவார்கள். 

70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம். 

71. மனக்குறைகள் தீரும். 

72. பிறவிப்பிணி தீரும். 

73. குழந்தைப்பேறு உண்டாகும்.

74. தொழிலில் மேன்மை அடையலாம். 

75. விதியை வெல்வார்கள். 

76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள். 

77. பகை அச்சம் நீங்கும். 

78. சகல செல்வங்களையும் அடைவார்கள். 

79. அபிராமி அருள்பெறுவார்கள்.  

80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும். 

81. நன்னடத்தை உண்டாகும். 

82. மன ஒருமைப்பாடு அடையலாம். 

83. ஏவலர் பலர் உண்டாகும். 

84. சங்கடங்கள் தீரும். 

85. துன்பங்கள் நீங்கும். 

86. ஆயுத பயம் நீங்கும்.

87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள். 

88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம். 

89. யோக சித்தி பெறலாம். 

90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். 

91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள். 

92. மனப்பக்குவம் உண்டாகும். 

93. உள்ளத்தில் ஒளியுண்டாகும். 

94. மனநிலை தூய்மையாக இருக்கும். 

95. மன உறுதி பெறும். 

96. எங்கு பெருமை பெறலாம். 

97. புகழும் அறமும் வளரும். 

98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம். 

99. அருள் உணர்வு வளரும். 

100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.  

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

தூபங்களின்_நன்மைகள்

 தூபங்களின்_நன்மைகள். 


#சந்தனம்-தெய்வ கடாட்சம் கிட்டும்.

#சாம்பிராணியில்-  தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

#ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.

#அகிலி  - தூபமிட குழந்தை பாக்கியம் கிட்டும்.

#துகிலி - தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.

#துளசி தூபமிட - காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.

#தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.

#வலம்புரிக்காய் -  தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.

#வெள்ளைகுங்கிலியம் -  தூபமிட துஷ்ட ஆவிகள் இருந்த இடம் தெரியாது நீங்கிவிடும்.

#வெண்கடுகு - பகைமை எதிர்ப்புகள் விலகும்.

#நாய்கடுகு - துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.

#மருதாணிவிதை- சூனிய கோளாறுகள் நீங்கும்.

#கரிசலாங்கன்னி - மகான்கள்அருள்கிட்டும்.

#வேப்பம்பட்டை - ஏவலும் பீடையும் நீங்கும்.

#நன்னாரிவேர் - இராஜவசியம் உண்டாக்கும்.

#வெட்டிவேர் - சகல காரியங்களும் சித்தியாகும் .

#வேப்பஇலைதூள்-சகல நோய்களும் குணமாகும்.

#மருதாணிஇலை - இலட்சுமி கடாட்சமுண்டாகும்.

#அருகம்புல்தூள்- சகல தோஷமும் நீங்கும். 

#குறிப்பு: மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும். நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்.

கருப்பு குதிரை லாடம் பயன்கள்

 கருப்பு குதிரை லாடம் பயன்கள் :


1.வலது காலில் ஒடி தேய்ந்த கருப்பு குதிரையின் லாடத்தை தலை வாசல் கதவு மேல் பகுதியில் மாட்டுவதின் மூலம் தீய சக்திகளை அகற்றி நல்ல அதிர்ஷடத்தை வரவழைத்து குடுக்க கூடியது .


2.இது விட்டிற்கு மிக பெரிய பாதுகாப்பு வளையம் போல் செயல் படும்.கண் திஷ்டி.மற்றும் மாந்திரிக செயல்பாடுகளில் இருந்து நம்மை பாதுகாகக்கும்.


3.வேலை இல்லாமல் இருப்போர் மற்றும் வேலையில் இருந்து கொன்டு உயர் பதவி எதிர் பார்த்து காத்து கொன்டு இருப்போர். இந்த கருப்பு குதிரை லாடத்தை விட்டின் வடக்கு திசையில் மாட்டி வைத்தால் வேலை கிடைக்கும் மற்றும் வேலையில் உயர் பதவி கிடைக்கும் நன்றி


திருஷ்டி தோஷங்கள் போக்க தாந்திரீக பரிகார


குதிரையின் கால் குளம்புகளில் அடிக்கப்பட்டு, கழன்று விழுந்த குதிரை லாடம் எங்கேனும் உங்களுக்கு கிடைத்தால் வீட்டிற்கு கொண்டு வந்து, உங்கள் பிறந்த நாளைக்கு முன்பாக இரவில் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி, மறுநாள் அந்த குதிரை லாடத்தை உங்கள் வீட்டில் எங்கேனும் பத்திரமாக வைத்து விடுவதால், உங்களின் திருஷ்டி தோஷங்கள் அனைத்தையும் போக்கி நன்மைகளை அருளச் செய்யும் ஒரு சிறந்த தாந்திரீக பரிகார முறையாக இருக்கிறது.

மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி?

 🌺 மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி?


🍃தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை?


‘சிரஞ்சீவி’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை ‘சிரஞ்சீவி’ என்பர்.


அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர்.


மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள்.


இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்?


எமனுக்கு பயந்து 16 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.


மார்கண்டேயனுக்கு 16 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும்.....


அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.


ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு சீக்கிரம் உபநயனம் செய்வித்ததார்.


பின்னர் பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக என்று பணித்தார்.


மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.


சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற.....


அவர்களும், தீர்க்கா யுஷ்மான் பவ என்று வாழ்த்திவிட்டார்கள்.


பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 16 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று.


என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா.

இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள்.


அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார்.


இப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.


பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா?


ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.


பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று.


எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும்.


அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல…

உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது...


எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும்.


நமக்கு வரும் துன்பத்தை காப்பாற்றகூடியது பெரியோர்களின் ஆசீர்வாதம் என உணர்ந்து நாம் பெரியோர்களை வணங்கி நலம் பெறுவோம்.

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...