திங்கள், 14 ஜூன், 2021

திருமலை திருப்பதி ஆர்ஜித சேவையும். சிலிர்க்கவைக்கும் உண்மை சம்பவம்...

*இஸ்லாமிய பக்தரும்*                             திருமலை திருப்பதி                          ஆர்ஜித சேவையும்....?

👉சிலிர்க்க வைக்கும்                                        உண்மை சம்பவம்...?

🙏திருப்பதியில் பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க,
அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு ஆர்ஜித சேவைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது 'அஷ்டதள பாத பத்மாராதனை' சேவை.
இந்த சேவை துவங்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.

🌸  'அஷ்டதள பாத பத்மாராதனை' எனப்படும் இந்த ஆர்ஜித சேவை திருமலையில் 1984 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து ஷேக் மஸ்தான் என்கிற ஒரு இஸ்லாமியர் திருமலை திருப்பதிக்கு புறப்பட்டார். திருப்பதியை அடைந்தவுடன் ஏழு மலைகளையும் கடந்து நடந்தே சென்ற அவர் திருமலையை  அடைந்தார்.
மகா துவாரத்துக்கு ( பிரதான நுழைவாயில் )  சென்ற அவர், அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை கேட்ட அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒருவருக்கொருவர்  பார்த்துக் கொண்டனர்.  அவரை நேரே தேவஸ்தானத்தின் உயரதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். அவர்களும் அதிர்ச்சியடைந்து அவரை ஆலயத்தின் செயல் அலுவலரிடம் (EO) அனுப்பி வைத்தனர்.

இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கம் வேறு ஒரு விஷயம்…

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது. திருமலையின் நிர்வாகம் முழுக்க முழுக்க இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அதன் பொன்விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட தேவஸ்தானம் தரப்பில் அப்போது திட்டமிட்டு கொண்டிருந்தனர். இதற்காக பல நாட்கள் பல ரவுண்ட் மீட்டிங்குகள் நடத்தப்பட்டன. ஆனாலும் பொன்விழாவுக்கு என்ன செய்வது, எந்த மாதிரி கொண்டாடுவது என்று எந்தவொரு முடிவுக்கும் அவர்களால் வர இயலவில்லை. இது போன்றதொரு சூழ்நிலையில் தான் அதிகாரிகள் தேவஸ்தான கமிட்டியிடம் வந்து அந்த முஸ்லீம் பக்தரின் கோரிக்கை பற்றி தெரிவித்தனர்.

அப்போது போர்டு ரூமில் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களின் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. குமாஸ்தா ஒருவர் மெல்ல அறைக்குள் சென்று, EO வை சந்தித்து, முஸ்லிம் பக்தர் ஒருவர் குறிப்பிட்டதொரு கோரிக்கையுடன்  கூறி, தங்களை அவசியம் பார்க்க வேண்டும் என்று காத்திருப்பதாக தெரிவித்தார்.

“மிக மிக முக்கியமான மீட்டிங் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. என்னால், எழுந்து வெளியே செல்ல முடியாது. அந்த பக்தரை நேரே இந்த அறைக்கே அனுப்பு பரவாயில்லை. என்ன ஏது என்று விசாரித்துவிட்டு உடனே அவரை அனுப்பிவிடுகிறேன்” என்று குமாஸ்தாவிடம் தகவல் தெரிவித்து அனுப்பினார்.

ஆனால் அவருக்கோ அந்த அறையில் இருந்த மற்ற தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களுக்கோ தெரியாது… அந்த முஸ்லீம் பக்தரை அனுப்பியவன் சாட்சாத் அந்த ஸ்ரீனிவாசனே என்பதும், அந்த பக்தரின் கோரிக்கையை ஏற்று இவர்கள் செயல்படுத்த இருக்கிற திட்டத்தால் அந்த ஏழுமலையானே மனம் குளிர்வான், தேவஸ்தான பொன்விழா கொண்டாட்டங்களில் மகத்தானதொரு முத்திரையை அது பதிக்க போகிறது என்று.

குமாஸ்தா வெளியே வந்து ஷேக் மஸ்தான் என்கிற அந்த இஸ்லாமிய பக்தரை போர்டு ரூமுக்குள் EO அழைப்பதாக தெரிவித்தார்.

அதுவரை வெயிட்டிங் ஹாலில் காத்திருந்த ஷேக் மஸ்தான் தனது இருக்கையிலிருந்து எழுந்து நேரே மீட்டிங் நடைபெறும் அந்த அறையை நோக்கி சென்றார்.

கைகளை கூப்பியபடி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார் மஸ்தான். அவருடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் தெரிவித்த இ.ஓ., “நாங்கள் இப்போது மிக முக்கியமானதொரு மீட்டிங்கில் இருக்கிறோம். நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?
என்னை ஏன் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்று கூறினீர்கள்?
அது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா? சீக்கிரம், சுருக்கமாக சொன்னீர்கள் என்றால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.”

அடுத்து ஷேக் மஸ்தான் கூறிய விஷயம் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“ஐயா என் பெயர் ஷேக் மஸ்தான். நான் குண்டூரை சேர்ந்த ஒரு சிறு வணிகன்.  எங்கள் குடும்பத்தில் பலர் பல தலைமுறைகளாக ஏழுமலையானின் பக்தர்களாக இருந்து வந்துள்ளனர். பலப் பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் பின்பற்றும் வழக்கப்படி தினமும் காலை எங்கள் வீட்டில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக கூடி, சுப்ரபாதம் பாடுவோம். எந்த வித தவறும் இன்றி, வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம், ஸ்ரீனிவாச பிரப்பத்தி. மங்களா சாசனம் ஆகியவற்றை கூட பாடுவோம். ஸ்ரீனிவாச கத்யத்தை கூட என்னால் முழுமையாக பாட முடியும்!”

கமிட்டி உறுப்பினர்கள் அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிருக்க, அந்த முஸ்லீம் அன்பர் தொடர்ந்தார்….

“எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திரம் என்பது இறைவனை போற்றி கூறும் 108 போற்றிகள்). இதுதவிர, எங்கள்  வீட்டு புழக்கடையில் உள்ள தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம் கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அர்பணிப்போம்.”

“ஆனால் ஐயா… இதுபோன்றதொரு தருணத்தில் எங்கள் முப்பாட்டனார் காலத்தில், பக்தர்கள் இதே போன்றதொரு சேவையை ஏழுமலையானுக்கு செய்ய, தங்கத்தினாலான 108 பூக்களை அவனுக்கு (சொர்ண புஷ்பம்) காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்டார்கள். ஆனால் எங்கள் நிதிநிலைமை ஒத்துழைக்காததால் 108 பூக்களில் என் கொள்ளு தாத்தாவால் சில பூக்களைத் தான் சேர்க்க முடிந்தது. அவருக்கு பிறகு என் தாத்தா சிறிது பூக்கள் சேர்த்தார். பின்னர் என் அப்பா தன் காலத்தில் சிறிது பூக்கள் சேர்த்தார். இப்போது நான் என் காலத்தில் அதை நிறைவு செய்திருக்கிறோம்.”

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், தங்கத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது அர்ச்சனை செய்ய மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். (வில்வத்திற்கு கூட நிர்மால்ய தோஷம் கிடையாது!)

அதிர்ச்சியுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தேவஸ்தான செயல்  அலுவலர், “எ….ன்…ன….  நீங்கள் 108 பூக்களை சேர்த்துவிட்டீர்களா?”

“ஆம்!” என்றார் ஷேக் மஸ்தான்.

“ஐயா… மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் வயிற்றை கட்டி வாயை கட்டி இந்த பூக்களை சேர்த்திருக்கிறோம். ஒவ்வொரு பூவும் 23 கிராம் எடையுள்ளது!” (கிட்டத்தட்ட மூன்று சவரன்!)

“நாங்கள் உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த ஏழைகளிடமிருந்து ஸ்ரீநிவாசனுக்கு அன்புக் காணிக்கையாக இந்த மலர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்…
அவற்றை அஷ்டோத்திரம் சொல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் சேவையின் போதோ பயன்படுத்தவேண்டும் என்பதே”

“எங்கள் கோரிக்கையை தட்டாமல் ஏற்றுக்கொண்டால், எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதன் எங்கள் தாத்தாவின் ஆன்மா கூட நிச்சயம் இதன் மூலம் சாந்தியடையும். இது தான் நான் சொல்ல விரும்பியது. இப்போது முடிவை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்!!”

ஷேக் மஸ்தான் முடிக்க…. அமைதி… அமைதி…
அந்த அறை முழுக்க ஒரே அமைதி. நிசப்தம். 
இது சாதாரண அமைதி அல்ல. அசாதாரணமான அமைதி.

அடுத்த சில கணங்களுக்கு அந்த அறையில் ஃபேன்கள் சுழலும் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை.

சேர்மன், செயல் அலுவலர், இணை அலுவலர், துணை அலுவலர் மற்றும் பல அதிகாரிகளும் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களும் நிரம்பியிருந்த அறையில் எவருமே வாயை திறந்து எதுவும் பேசவில்லை.

தங்கள் முன், கைகளை கட்டிக்கொண்டு பவ்யமாக நின்றுகொண்டிருந்த அந்த முஸ்லிம் பக்தரிடம் என்ன சொல்வது, என்ன பதில் அளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.

தங்களுக்கு நடுவே சாட்சாத் ஸ்ரீனிவாசனே அங்கு எழுந்தருளி நடக்கும் அனைத்தையும் பார்த்துகொண்டிருப்பது போன்று அறையில் அனைவரும் உணர்ந்தனர்.

எக்சியூட்டிவ் ஆபிஸர் எனப்படும், இ.ஓ. தான் முதலில் வாயை திறந்தார்.

கண்களில் இருந்து அவருக்கு தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தனது இருக்கையை விட்டு எழுந்தவர் நேரே அந்த முஸ்லிம் பக்தரிடம் சென்று “இத்தனை நேரம் உங்களை நிற்கவைத்து பேச வைத்ததற்கு எங்களை மன்னிக்கவேண்டும். முதலில் இந்த சேரில் உட்காருங்கள்” என்று கூறி ஷேக் மஸ்தான் அமர்வதற்கு ஒரு நாற்காலியை போட்டார்.

“மஸ்தான் காரு, உங்களை போன்றதொரு பக்தரை இந்த காலத்தில் இங்கு பார்ப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வாழ்க்கையில் பல வித்தியாசமான பக்தர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் உங்களைப் போன்றதொரு பக்தரை இதுவரை பார்த்ததில்லை.”

“எவ்வித நிபந்தனையுமின்றி ஏழுமலையானுக்கு நீங்கள் கொண்டுவந்திருக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்… அதை உடனடியாக சேவையில் பயன்படுத்துவோம் என்று இப்போது, இங்கு நான் எந்த வித உத்திரவாதமும் கொடுக்க முடியாது. மேலும் தேவஸ்தானத்தின் பாலிஸி தொடர்பான இந்த விவகாரத்தில் நான் மட்டும் உடனே முடிவெடுத்துவிட முடியாது. தவிர அது எங்கள் கைகளில் மட்டும் இல்லை.”

“ஆனால், உங்கள் கோரிக்கையை ஏற்று செயல்படுத்துவது என்று உறுதி பூண்டிருக்கிறோம். எங்களுக்கு கொஞ்ச காலம் அவகாசம் நீங்கள்  அளிக்கவேண்டும். அது போதும்! முடிவெடுத்த பின்னர் நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம்!”

மஸ்தான் விடைபெற்று செல்ல, அவருக்கு தரிசனம் செய்வித்து பிரசாதம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர் தேவஸ்தான தரப்பில்.

அதற்கு பிறகு தேவஸ்தான கமிட்டி கூட்டம் மேலும் பல முறை கூட்டப்பட்டு இந்த மலர்களை பயன்படுத்துவதற்கு என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் திருமலையில் அஷ்டதள பாத பத்மாராதனை எனப்படும் ஆர்ஜித சேவை துவக்கப்பட்டது.

சிறப்பு மிக்க இந்த ஆர்ஜித சேவைக்கு டிக்கெட்டை மூன்று மாதங்களுக்கு முன்பே பதிவு  செய்துவிட வேண்டும். இந்த சேவையில் கலந்துகொள்ளும் சேவார்த்திகள் பங்காரு வாசலுக்கு குலசேகரப்படிக்கும் இடையே உள்ள சிறிய மண்டபத்தில் உட்கார வைக்கப்படுவார்கள்.

🌸  ஏழுமலையானின் 108 அஷ்டோத்திரங்களும் உச்சரிக்கப்பட்டு ஒவ்வொரு நாமத்துக்கும் (ஷேக் மஸ்தான் குடும்பத்தினர் காணிக்கையாக அளித்த) ஒரு மலர், வேங்கடவனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படும்.

🌸 1984 ல் திருமலையில் ஏழுமலையான் சன்னதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இன்றும் நடக்கிறது.

திருமலை தேவஸ்தானத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய இந்த ஆர்ஜித சேவை, காலங்காலமாக ஏழுமலையான் மீது பக்தி செலுத்தி வந்த ஒரு குடும்பத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அந்த ஏழுமலையான் இரட்சித்து வருகிறான் என்பதையும் பறைசாற்றுகிறது.
🙏  🙏  🙏  🙏  🙏

( நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த உண்மை சம்பவம் திருமலை திருப்பதியில் 1983ஆம் ஆண்டு நடைபெற்றது).

🙏 நன்றி. 

🙏வணக்கம்.

ஞாயிறு, 13 ஜூன், 2021

பிரபஞ்சத்தோடு எப்படி_உறவாடுவது

*#பிரபஞ்சத்தோடு_கலந்து_எப்படி_உறவாடுவது...*

******************************************************************************************************************************************************

*பிரபஞ்சம் நாம் எதை கேட்டாலும் அள்ளி தரும் ஆற்றல் கொண்டது என நிறைய கேள்வி பட்டிருக்கின்றோம்.*

*இதை எப்படி நடைமுறை படுத்துவது என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.  பிரபஞ்சத்திடம் எனக்கு இன்ன இன்ன பொருட்கள் வேண்டும், பணம் வேண்டும்,  கார் வேண்டும்,  வீடு வேண்டும், நகை வேண்டும் என கேட்டால் கிடைக்குமா? பிரபஞ்சத்தால் எப்படி இதையெல்லாம் எனக்கு தர முடியும்  ?  இப்படி பல கேள்விகள்.*

*முதலில் உள்ள அடிப்படை கேள்வி,  பிரபஞ்சத்தின் மொழி எது ?*

*பிரபஞ்சத்திடம் என்ன மொழியில் பேசினால் அதற்கு புரியும் ?  தமிழில் பேசவா,  தெலுங்கில் பேசவா,  கன்னடத்தில் பேசவா,  அல்லது ஆங்கிலத்தில் பேசவா ?  எப்படி பிரபஞ்சத்திடம் தொடர்பு கொள்வது  ?*
 
*உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு மொழிகளில் பேசுவதை பிரபஞ்சம் எப்படி அறிந்து கொள்ளும் என நமக்கு சந்தேகம் வரலாம்.*  

*அப்படி என்றால் பிரபஞ்சத்திற்கும் மொழிக்கும் தொடர்பு இல்லை என்பது புலனாகிறது.* 

*மொழி தேவை இல்லை என்றால் நாம் அதனுடன் தொடர்பு கொள்ள, உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதனுடன் உறவாட பொதுவான ஒரு வழி இருக்க வேண்டுமல்லவா ?*

*மொழியை கடந்து,  பல்வேறு கலாச்சாரங்களை கடந்து, அனைவராலும் இந்த பிரபஞ்சத்தோடு இணைய, நமது தேவைகளை, கோரிக்கைகளை முன்வைத்து பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்  ?*

*இது ஒரு சூட்சுமமான கேள்வி.  இதில் தான் இரகசியம் அடங்கி உள்ளது.  இந்த இரகசியத்தை அறிந்து கொண்டால், பின் பிரபஞ்சத்தோடு நம்மால் தொடர்பு கொள்ள முடியும்.*  

*முதலாவதாக,  நாம் கேட்காமலேயே நமக்கு இந்த பிரபஞ்சம் அளித்துள்ளவைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.   நாம் சுவாசிக்கும் காற்று, நீர்,  காடு, மலை, நமது இந்த உடல், நமக்கு தேவையான உணவிற்க்கான ஆதாரம்,  என நாம் இங்கு உயிர் வாழ தேவையானவற்றை அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி ஆரம்பிப்பது தானே முறையாக இருக்கும்.* 

*இரண்டாவதாக , நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் பிரபஞ்சத்திடம் இறுதி பொருட்களை (end product )  கேட்பதை தவிர்த்து, அதன் மூல பொருட்களை கேட்ப்பதுதான்  உத்தமமாக இருக்கும்.*  

*உதாரணமாக நமக்கு நகை, வண்டி,  வீடு என தனித்தனியாக கேட்பதற்கு பதிலாக, நிறைவான செல்வம் வேண்டும் என கேட்பதால்,  அதை கொண்டு நமது மேற்படி தனித்தனி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.*

*காதல் கைகூட வேண்டும், நல்ல மனைவி மக்கள் வேண்டும், நல்ல தொழில் வேண்டும் என கேட்பதை தவிர்த்து,  மன மகிழ்ச்சியான வாழ்கை வேண்டும் என கேட்பதால், நமது சங்கடங்கள் நீங்கி , நம்மை மகிழ்சியாக இருக்க என்னென்ன தேவையோ அவையனைத்தும் நமக்கு இந்த பிரபஞ்சம் உருவாக்கி தரும்.*
 
*இவை உதாரணத்திற்கு தான் இங்கு குறிப்பிட படுகின்றது.  ஆகவே நாம் பிரபஞ்சத்திடம் மூலமானவற்றை (source ) யை கேட்பது தான் சரியானதாக இருக்கும்.* 

*மகிழ்ச்சியான,  நிறைவான,  ஆரோக்கியமான,  மற்றவர்களுக்கும் உபயோகமான,  சுற்றத்தார் போற்றும் உயர்நிலை வாழ்கை வேண்டும் என கேட்பதால், மற்ற எல்லா கோரிக்கைகளும் இதனுள்ளேயே அடங்கி விடுகின்றதல்லவா.* 

*மூன்றாவதாக நாம் அறிந்துகொள்ள போவது தான் முக்கியமானது.   இது தான் நமது ஆசைகளை அங்கு கொண்டு சேர்க்கும் மந்திரம்.  இதை யாரும் அவ்வளவு எளிதில் சொல்லி தர மாட்டார்கள் .  ஏனென்றால் இந்த இரகசியம் நல்லவர்கள் கைகளில் மட்டுமே சென்றடைய வேண்டும்.  இதை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.*

*நம் தேவைகளை நான்கு நிலைகளாக பிரித்து கொள்ளவேண்டும்.*

*ஒன்றாவதாக, நமக்கு தோன்றும் ஆசைகளை,  தவிர்க்க முடியாதது என்றோ,  தேவையற்றது என்றோ பிரித்துக் கொள்ள வேண்டும்.*

*அத்தியாவசியமான தேவைகள் திரும்ப திரும்ப மனதில் ஆசையாக தோன்றுகின்றதா என்பதை கவனியுங்கள்.  ஒரே ஆசை பலமுறை மனதில் தோன்றினால் அல்லது ஒன்றை பற்றியே நாம் சிந்தித்து கொண்டு இருந்தால் அது நமக்கு தேவை என எடுத்துக்கொள்ளலாம் (Desire) .  மற்ற சிறு சிறு, அவ்வப்போது தோன்றும் ஆசைகளை தவிர்த்து விடலாம்.*
  
*இரண்டாவதாக,  நமது பலமான ஆசைகள் எண்ணங்களாக வலுபெற்று நமது மனதில் பதிந்துவிடும்.* 

*எண்ணங்களுக்கு கற்பனை சக்தி அதிகம் உள்ளது.   (Thoughts), இல்லாததை இருப்பது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் நமக்கு காட்சிப்படுத்த வல்லது.*

*மூன்றாவதாக,  அவ்வாறு வலு பெற்ற எண்ணங்கள், நம் மனதில் பிம்பங்களாக,  காட்சிப் பொருட்களாக ( image) வடிவம் பெறும்.  மனதில் தோன்றும் பிம்பங்கள் வலு பெற்று ஆழ்மனதில் பதிந்து விடும்.  நான்காவதாக, நம் மனதில் பதிவேறிய பிம்பங்கள், வடிவங்கள் ஆழப்பதிந்து, அதை குறித்து ஒரு உண்மைத்தன்மையை, மாய உலகை நம் முன்னே உருவாக்கி விடும். அது உண்மை என நம்மை நம்பவைத்து அந்த ஆசைகள் நிறைவேறியது போல தோன்றவைத்துவிடும்.  கிட்டத்தட்ட சினிமா போல்.*

*இது மிக வலுவான அதிர்வலைகளை நம் மனதில் உருவாக்கி, அந்த அதிர்வலைகள் இந்த பிரபஞ்சத்தை சென்றடையும்.*
  
*இந்த அதிர்வலைகள் மூலமாக தான் பிரபஞ்சத்துடன்  நாம் தொடர்பு கொள்ள முடியும்.*  

*நமக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொப்புள் கொடி இந்த அதிர்வலைகள் தான்.   நம்மில் இருந்து எவ்வளவு அதிர்வலைகள் வெளிபடுகின்றதோ அது பிரபஞ்சத்தை சென்றடைந்து, பன்மடங்கு பெருகி,  நம்மிடம் வந்து சேரும் போது, அது நடைபெறுவதற்கான, நிறைவேறுவதற்கான சாத்தியகூறுகளுடன் வந்தடையும். இதுவே சத்தியம்.*

*ஆரம்பத்தில் இந்த அதிர்வலைகள் நம்மிடமிருந்து மட்டுமே வெளிபட்டு கொண்டிருக்கும்,  அதை மட்டுமே நம்மால் உணரமுடியும்,  பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரபஞ்சத்தில் உள்ள மற்ற அதிர்வலைகளையும் நம்மால் அடையாளம் காணமுடியும்.  அவ்வாறு நாம் இங்கு உள்ள அதிர்வலைகளை உணர தொடங்கினால்,  பிரபஞ்சத்துடன்  உள்ள தொடர்பு  முழுமை பெற்று, பல அபரிதமான  தகவல்களை, உண்மைகளை  அறிந்து கொள்ள முடியும்.  அதிர்வலைகள் மூலமாக தான் நாம் பிரபஞ்சத்திடம் உறவாட முடியும்.*

*இதுவே பிரபஞ்சத்துடன் உறவு கொள்ளும் எளிமையான வழி.  அனைவரும் பயனடைய வாழ்த்துக்கள்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*    

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*   

*#வாழ்த்துக்கள்.*

*#வாழ்க_வளமுடன்.*

Smell of Mind(Part-1) by Hr.Baskar(Peace O Master)

KARMA THEORY by (Healer Baskar) (Peace O Master)

வியாழன், 20 மே, 2021

கோரோனோவுக்கு சில டிப்ஸ்

நல்லதைப் பகிர்வோம்

கோரோனோவுக்கு சில டிப்ஸ்

முதலில் ct  ஸ்கேன் எல்லாம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் உள்ள ct cevery score எடுத்து வைத்து கொண்டு.. 10 / 25 இருக்கு 9/25 இருக்கு என எல்லாம் கணக்கு பார்த்து பயப்பட அவசியம் இல்லை.
முக்கியமானது இரண்டே விஷயம் தான் நீங்க ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆகனுமா வேணாமா என்பதை தீர்மானிப்பது அதுதான்

1. மூச்சு திணறல் இருக்க கூடாது

2. ஆக்சிஜன் லெவல் 94 கு கீழ் போக கூடாது..

அப்புறம் சின்ன சிம்படம்ஸ் இருந்தாலும் கண்டிப்பா செக் பண்ணி உறுதி பண்ணி கொள்ளுங்க.. 

கோரோனோ வந்தா வருத்த பட இப்ப ஒன்னும் இல்ல அதெல்லாம் முதல் அலைல தான் இப்போ கோரோனோ டேபிள் மேட் மாதிரி எதிர் வீட்ல இருக்கு பக்கத்து வீட்ல இருக்கு கீழ் வீட்ல இருக்கு. கிட்ட தட்ட எல்லார் கதவும் தட்டிட்டு தான் போகும்.

எனவே முதலில் உறுதி பண்ணி கொள்ளவேண்டியது அவசியம். ஏனென்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள் இருக்காது. சிலருக்கு வாசனை போகும் டேஸ்ட் போகும். சிலருக்கு போகாது. சிலருக்கு இருமல் இருக்கும் காய்ச்சல் இருக்கும் வயிறு புரட்டும்.சிலருக்கு பண்ணாது ஆனா பிறருக்கு அவரால் பரப்ப முடியும்.
எனவே உறுதி பண்ணி கொள்ள வேண்டியது முக்கியம்.

எனவே கோரோனோ பாசிட்டிவ் என தெரிந்ததும் நீங்க செய்ய வேண்டியது 700 ரூபாயுக்கு ஆக்சிமீட்டர் சொந்தமா வாங்கி கொள்ளுங்கள் 250 அல்லது 150 ரூ கு ஒரு தெர்மோ மீட்டர் வாங்கிகொங்க தொடர்ந்து கண்காணிக்க வசதியாக இருக்கும்.

94கு கீழ் ஆக்சிஜன் லெவல் சென்றால் அல்லது மூச்சு திணறல் இருந்தால் மட்டும் உடனே ஹாஸ்ப்பிட்டல் செல்ல வேண்டும் அது அப்நார்மல்.
அடிக்கடி ஜுரம் வருவது.. தொடர்ந்து 5 மணி நேரம் ஜுரம் அடிப்பது வயிறு புரட்டுவது.. இருமல் உடல் அயர்ச்சி.. இதெல்லாம் பயப்பட வேண்டாம் . இது இருக்க தான் செய்யும் இது நார்மல்.

🔘பண்ண வேண்டிய folowups :

1.காலை மாலை இருவேளை வெது வெதுப்பான நீரில் உப்பு மஞ்சள் போட்டு வாயை காக்ளிங் பண்ண வேண்டும்.

2. கொதிக்க வைத்த நீரில் வேப்பிலை மஞ்சள் உப்பு துளசி போட்டு போர்வை போர்த்தி நாக்கை நீட்டி வாய் மற்றும் மூக்கு வழியாக மூச்சு இழுத்து ஆவி பிடிக்க வேண்டும்.
70 டிகிரி வெப்பத்தில் கிருமி இறந்து போகும் என்பதால் ஆவி பிடித்தல் முக்கியம்.

3. நெல்லி காய் சூரணம் கிடைத்தால் ஒரு கிளாஸ் நீரில் காலை மாலை குடிக்க வேண்டும்.

4. காலை வெய்யில் மாலை வெய்யிலில் அரை மணிநேரம் அமருங்கள்.

🔘 தினம் குடிக்க வேண்டியவை : 

1. காலை மாலை இருவேளை கபசுர நீர் குடிக்க வேண்டும்

2. காலை மாலை இருவேளை மூலிகை டீ குடிக்க வேண்டும் அதாவது இஞ்சி மஞ்சள் துளசி மிளகு போட்டு எலுமிச்சை பிழிந்த டீ.

3. புளிப்பு சுவை கோரோனோக்கு எதிரி எனவே ஆரஞ்சு சாத்துகுடி மற்றும் அண்ணாச்சி ஜூஸ் குடிக்க வேண்டும். 

4. நிறைய நீர் குடிக்க வேண்டியது ரொம்ப முக்கியம் எனவே ORS வாங்கி கலக்கி வைத்து கொண்டு வேண்டிய போது குடித்து கொண்டே இருக்க வேண்டும்.

🔘எடுத்து கொள்ள வேண்டிய மாத்திரைகள்

1) 6 மணி நேரத்துக்கு ஒரு முறை paracetamol 650 mg எடுத்தே ஆகணும். ஜுரம் இருப்பின் 4 மணிநேரத்துக்கு ஒரு முறை.

2) மல்டி வைட்டமின் டேப்லட் மற்றும் ஜிங்க் டேப்லட் காலை மாலை எடுத்து கொள்ள வேண்டும்.

3) ஆண்ட்டி பயடிக் கோரோனோவை கட்டு படுத்துவதில்லை ஆனால் கோரோனோவில் வரும் வேறு சில பாதிப்பை கட்டு படுத்தும் எனவே அதையும் எடுத்து கொள்ள வேண்டும்.

🔘உணவு 

1. நார்மலா நீங்க என்ன சாப்பிடுவீங்களோ அதை அனைத்தையும் சாப்பிடலாம்.

ஜிங்க் அதிகம் கொண்ட மற்றும் வைட்டமின் c அதிகம் கொண்ட உணவு வகை மற்றும் காய் கறிகள் பழங்கள் எடுத்து கொள்ளலாம்.
சப்பாத்தி சாப்பிடலாம் இட்லி தோசை வெங்காய சட்னி.. மற்றும் சாதாரணமாக நீங்கள் உண்ணும் உணவு உண்ணலாம்.

குறிப்பாக நிறைய நீர் அருந்தவேண்டியது முக்கியம்.

அவ்வளவு தான் இதை செய்து வந்தால் போதும் வீட்டில் இருந்த படி 14 நாளில் முற்றிலும் குணம் ஆகிவிடும்.

சரியாயிடிச்சின்னு எப்படி தெரிஞ்சிக்கிறது. 

அறிகுறி இல்லாதவர்களுக்கு 14 நாள் டைம்.
அறிகுறி உள்ளவர்கள் தொடர்ந்து 72 மணி நேரம் ஜுரம் வரலை என்றால் குணம் ஆகி விட்டது என்று அர்த்தம்...

 உறுதி பண்ணி கொள்ள இன்னொரு டெஸ்ட் எடுத்து கொள்ளுங்க அவ்வளவு தான்..

கோரோனோ எளிதில் வெல்ல கூடிய எதிரி தான்...படித்தேன் பகிர்கிறேன்

செவ்வாய், 18 மே, 2021

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண் !

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண் !
முகஸ்டாலின் – தமிழ்நாடு முதலமைச்சர் –
துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர் – 94445 29999
கே . என் . நேரு – நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் – 98424 66666
இ . பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர் – 95853 66666
க . பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர் – 94438 59983
எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர் – 99444 69091
எம் . ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் – 94433 71590
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் – 98424 45899
தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர் – 97891 18449
எஸ் . இரகுபதி – சட்டத் துறை அமைச்சர் – 9943136888
சு.முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர் – 98410 17999
கே.ஆர் . பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் – 94433 68479
தா . மோ . அன்பரசன் – ஊரகத் தொழிற்துறை அமைச்சர் – 94440 70354
மு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர் – 94449 66678
பி . கீதா ஜீவன் – சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் – 94422 45210
அனிதா ஆர் . ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் – 98429 05111
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர் – 94440 81146
கா.ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர் – 94435 66666
அர . சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் – 94422 07777
வி. செந்தில்பாலாஜி – மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் – 94422 53345
ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் – 94432 22770
மா.சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – 91767 00000
பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் – 9842122446
எஸ்.எஸ் . சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் – 94431 42600
கே.சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையதுறை அமைச்சர் – 98410 40026
பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை – 94423 27251
சா.மு. நாசர் – பால்வளத்துறை அமைச்சர் – 98406 56565
செஞ்சி கோஸ்மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் | நலத்துறை அமைச்சர் – 94430 73085
அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் – 97157 02222
சிவ . வி . மெய்யநாதன் – சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் – 98426 25119
சி.வி.கணேசன் அவர்கள் தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் – 94434 45168
த . மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் – 94434 50150
மா . மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர் – 90037 95707
என் . கயன்விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் – 94877 94952.....!!!!!

அதிகமாக ஷேர் செய்யவும் அனைவரும் தெரிந்துகொள்ளட்டும்...

திங்கள், 17 மே, 2021

இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில்  எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை  அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்... 
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு)  மூக்கிரட்டை சாறு கலந்து"  1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.  

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும். 
நன்றி:
Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S. 
கிளினிக்
கறம்பக்குடி 
புதுக்கோட்டை மாவட்டம் .9865224588

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...