வியாழன், 30 செப்டம்பர், 2021

மரத்தின் கதை

👌ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு,

" ஆடிப்பாடி ,விளையாடி விட்டு போவான்".........!!

"அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்"....!!

திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை....!! 

"மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது"......!!

சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்....!! 

அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ,

 "ஏன் இவ்வளவு நாள் வரவில்லை".....? 

உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது....!!

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள்,....!!

 ஆனால் ,
  "என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை" என்றான்.

கவலைப்படாதே ....!!

இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று,

" கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்".....!!

என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...!!

அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.....!!!

மறுபடியும் அவன் வரவேயில்லை....!!
 

மரம் அவனுக்காக ஏங்கியது....!!

 பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்....!!

 அவன் முகத்தில் கவலை தெரிந்தது,

 இப்போது அவன் வளர்ந்திருந்தான்....!!

 அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். 

"வா என்னிடம் வந்து விளையாடு"...!!

 "இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது".....!!!

அதற்கு அவன்_
  இல்லை இப்பொது வயதாகி விட்டது_...!!

எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,

ஆனால் ,
  "நாங்கள் வசிக்க சொந்தமாக 
நல்ல வீடு இல்லை"....!! 

"வீடு வாங்க என்னிடம் பணமில்லை",.....!

மரம் உடனே சொன்னது ,

 பரவாயில்லை ....
  "உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை".....!!

அதற்கு பதில்,
  " என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் "....!!

"அதில் ஒரு வீடு கட்டிக்கொள்" என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான்.....!!

 "இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே" .......!!

முடிந்த வரை,
  " வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல்" என்றது.....!!

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான்.....!! 

அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை....!! 

அவன் வருவான்.... வருவான்.... என்று மரமும் நித்தமும் காத்திருந்தது..... !!

பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.....!!

மரம் அவனை பார்த்து,
   " ஆனந்த கூத்தாடியது"......!!!

அவன் எப்போதும் போல் ,
    'சோகமாக இருந்தான்'.....!!

"ஏன் இப்படி இருக்கிறாய்",
        என்று மரம் கேட்டது.....!! 

"என் மீன் பிடி படகு உளுத்து விட்டது"....,

 "படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை"......, !!

"அதனால் வருமானம் இல்லை"

 "நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்" என்றான்.....!!

மரம் துடித்து போனது,.....!!

" நான் இருக்கிறேன்".....!!

  "என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக் கொள்"......!!

"இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்" என்றது.....!!!

அவன் அடி மரத்தை வெட்டும் போது....,

 மறக்காதே....!!

வருடத்திற்கு ஒரு முறை 
என்றில்லாமல் ......,

"எப்போதாவது 
என்னை பார்க்க வா".. என்றது....!!

ஆனால் அவன் வரவேயில்லை.....!!

 மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.....!!!

அப்போது அவன் வந்தான்.....!!!

 'தலையெல்லாம் நரைத்து' ,
 'கூன் விழுந்து' ,
 'மிகவும் வயதான தோற்றத்துடன்'... ,
 அவன் இருந்தான்.....!!

"அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது"........!!!

"இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை".......!!!

"கிளைகள் இல்லை"........!!!

"அடி மரமும் இல்லை".........!!

 உனக்கு கொடுக்க,
 "என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது".........!!!

அவன் சொன்னான் ,

நீ..... 'பழங்கள் கொடுத்தாலும்' ,

 அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை,......!!

 வீடு கட்டவும் ,
படகு செய்யவும் 
என்னிடம் சக்தி இல்லை....!!

 "எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது" என்றான்.....!!!

அப்படியா....!!!

 இதோ....,
   " தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள்" என்றது....!!

 "அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான்"......!!

இந்த சுகத்துக்கு தான்......

 "அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது"..........!!

"இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது",.....!!

 "அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது".......!!

"இது மரத்தின் கதையல்ல"....!!

 " நம் பெற்றோர்களின் கதை"....!!

 இந்த சிறுவனை போல் ,

"நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம்"...!!

 வளர்ந்து பெரியவனானதும்...,

 தமக்கென்று குடும்பம்,
 குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். 

அதன் பின் ,

"ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம்"........!!

"நம்மிடம் இருப்பவை எல்லாம்",

  " அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்"...... !!

  "நம்மால் அவர்களுக்கு எதுவும் 
கொடுக்க முடியாது"......!!

   "நம்முடைய பாசம், அன்பு, அனுசரணையான வார்த்தைகளை தவிர".........!!!

"அவர்கள் விரும்புவதும் அதைதான்"..........!!!

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

நீரிழிவு நோய்க்கு மருந்துகள்

Copy from Tmt. Kavithagopi  with Thanks 🙏

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில்  எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை  அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்... 
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு)  மூக்கிரட்டை சாறு கலந்து"  1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.  

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும். 
நன்றி:
Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S. 
கிளினிக்
கறம்பக்குடி 
புதுக்கோட்டை மாவட்டம் .9865224588

மூக்கிரட்டை இலையின் படம் கீழே காண்க...
பகிர்வு

சனி, 21 ஆகஸ்ட், 2021

உங்களுக்கு தெரியுமா வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு

*உங்களுக்கு தெரியுமா வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!*
 
பன்னீர் மரங்கள், உயரமாக வளரும் இந்த மரங்கள், பரந்து விரிந்த கிளைகளுடன், கரும் பச்சை நிறத்தில் சற்றே அகன்ற இலைகளுடன், உருவத்தில் நாதஸ்வரத்தை ஒத்த, நீண்ட நறுமணமுடைய வெள்ளை நிறத்தில் எழிலுடன் விளங்கும் மலர்களுடன், காட்சியளிக்கும். தமிழகத்தில் காண்பதற்கு மிக அரிதாகி விட்ட பன்னீர் மரங்கள், இலை, பூக்கள், மற்றும் மரம், வேர் இவற்றின் மூலம், மனிதர்க்கு பலன்கள் தருபவை. பன்னீர் மரத்தை அதன் தோற்றத்தைக் கொண்டு அடையாளம் காண முடியாத மனிதர்கள் கூட, பன்னீர் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில், அவ்விடங்களில் பரவும், அவற்றின் வசீகர நறுமணத்தின் மூலம், வெகு எளிதாக, அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வெள்ளை நிறத்தில், அளவில் சற்றே நீண்ட மலர்கள், தரும் வாசனை, மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் அளிக்கும். பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர் மறை எண்ணங்கள் விலகி, மனதில் தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும். பன்னீர் மலர்கள் உடலுக்கும் மனதுக்கும் சக்தியை அளிக்கும்.

பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில் இருந்தாலே, பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் நீங்கி விடும், என்கின்றன சாத்திரங்கள். மேலும், மலர்கள் பூக்கும் காலங்களில், மரத்தினடியில் பூ மெத்தை போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும், பன்னீர் மலர்கள், இயற்கையின் அருட் கொடை என்றே, சொல்லலாம். தற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம், வாஸ்து என்ற காரணத்துக்காக, வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக, பன்னீர் மரங்கள் நட்டு வளர்க்கப் படுகின்றன. அதைப்போல சிலர், இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்று கூறியும், வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.

தெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். பன்னீர் மலர்கள், மனிதர்களின் மனதை அமைதிப் படுத்தும் தன்மை மிக்கதால், அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன் படுகின்றன. சித்த மருத்துவத்தில் பன்னீர் மலர்கள், பித்த மருந்துகளில் இணை மருந்தாக, சேர்க்கப் படுகின்றன.

*பித்தம் தணியும் :*
பன்னீர் மலர்களை காய்ச்சி பருகி வர, உடல் நல பாதிப்பால், வாந்தி எடுப்பது நிற்கும். பன்னீர் மலர்களைக் கொண்டு, காய்ச்சும் நீரை பருகி வரும்போது, உடல் சூடு நீங்கி, தொண்டை வரட்சியைப் போக்கி, உடலின் பித்த பாதிப்புகளை சரி செய்து, நாவின் சுவையின்மையை நீக்கி, உணவுகளின் சுவை அறிய, வைக்கும். இரவில் மலரும் இயல்புடைய பன்னீர் மலர்களை நாடி, பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும், இரவில் இந்த மரத்தைச் சுற்றி வந்து, பன்னீர் மலர்களின் தேனை உண்ணுமாம்.

*சுவாச பாதிப்புகள் நீங்கும் :*
காய்ந்த பன்னீர் மலர்களை சிலர், சாம்பிராணி புகையில், இட்டு அந்த வாசனை மூலம், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர். பன்னீர் மரத்தின் கிளைகள் கொண்ட மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால், மருந்துகள் சேமிக்கப்படும் புட்டிகளில், காற்றை புக விடாமல் தடுத்து காக்க, புட்டிகளின் வாய்ப் பகுதியில் வைக்கப்படும் கார்க் எனும் தக்கை தயாரிக்க பயனாகிறது.

*வயிற்றுப் போக்கு குணமாகும் :*
பன்னீர் மரப் பட்டைகளை நீரிலிட்டு, மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் சுண்டியதும் பருகி வர, பேதி எனும் வயிற்றுக் கழிச்சல் பாதிப்பு குணமாகும். பன்னீர் மரத்தின் வேர்கள், உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது, ஜுரத்தை போக்கி, மனிதர்களின் நுரையீரலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கதாக, பன்னீர் மரத்தின் வேரை, நீரிலிட்டு காய்ச்சி பருகும் குடி நீர், விளங்குகிறது. கும்பகோணம், திருவையாறு, சீர்காழி போன்ற ஆன்மீக இடங்களின் அருகே உள்ள பல கோவில்களில் தல மரமாக, பன்னீர் மரங்கள் திகழ்கின்றன.

*கட்டி வீக்கம் :*
பன்னீர் இலை காண்பதற்கு, முருகனின் வேல் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும், பன்னீர் இலை மருத்துவ வகையிலும், உடலுக்கு நன்மைகள் அளிக்கக்கூடியது. உடல் வியாதிகள் தீர, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்றை உட்கொண்டு, பன்னீர் இலைகளையும் உட்கொள்வர். ஆன்மீகத்தில் சிறந்த இலையாக விளங்கும் பன்னீர் இலைகள், சித்த மருத்துவத்தில், உடலில் உள்ள வீக்கங்களை போக்கக் கூடியவையாக, அறியப்படுகின்றன. வீக்கங்களின் மேல் பன்னீர் இலைகளை வைத்து கட்டி வர, வீக்கங்கள் அகலும்.

பன்னீர் திரவியம் எதிலிருந்து கிடைக்கிறது? கடைகளில் கிடைக்கும் பன்னீர் எனும் வாசனை திரவியம், நறுமணத்திற்காக சந்தனத்தோடு கலந்து பயன்படுத்தப்படுகிறது. கோவில்களில், சமய சடங்குகளில், அபிசேகங்களுக்கு பயன்படுகிறது. அந்த பன்னீர், இந்த பன்னீர் மரத்திலிருந்தோ அல்லது பன்னீர் பூக்களிலிருந்தோ எடுக்கப்படுவதில்லை, மாறாக, அவை ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்படுபவை ஆகும்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

நிலங்கள்_பற்றி_சில_தகவல்கள்

#நிலங்கள்_பற்றி_சில_தகவல்கள்
♦♦வகைகள்
**நஞ்சை
**புஞ்சை
**கிராம நத்தம்
**நத்தம் புறம்போக்கு
**நீர்நிலை புறம்போக்கு
**மேய்ச்சல் புறம்போக்கு
**அனாதீனம்
**மயானம் புறம்போக்கு
**வண்டிப்பாதை புறம்போக்கு
**களத்துமேடு
**கோவில் நிலம் 

♦பசலி :-
கிராமக் கணக்குகள் பராமரிக்கப்படும் முறை பசலி ஆண்டு என அழைக்கப்படுகிறது. 

♦ஜமாபந்தி / வருவாய் தீர்ப்பாயம் :-
அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய 
வரி வசூல், நிலுவை, 
வசூலான தொகைகள் சரியான கணக்குகளில் வரவு வைக்கப்படும் விபரம் 
போன்ற சகல விசயங்களையும் தெரிந்து கொள்ளவும், சரி பார்க்கவும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஜமாபந்தி அதிகாரி / வருவாய் தீர்ப்பாய அதிகாரி கிராமக் கணக்குப் பதிவேடுகள் அனைத்தையும் தணிக்கை செய்வதே ஜமாபந்தி ஆகும். 

♦வஜா / ரத்து :-
பருவநிலை மாறுபாடுகள் / கனமழை / வெள்ளம் / மழையின்மை / வறட்சி போன்ற காரணிகளால் பயிர்கள் சேதமாகும் போது அரசாங்கம் அந்த ஆண்டிற்கான நிலத்தீர்வையை வஜா/ ரத்து செய்து உத்தரவிடலாம்.
நிலஉரிமையாளர்களின் கவனக்குறைவினால் ஏற்படும் சேதாரங்களுக்கு இது பொருந்தாது. 

♦ஜமீன் முறை :-
மன்னர் காலத்தில் நிலவரி போன்றவற்றை வசூல் செய்ய இடைத்தரகர்கள் ஏற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜமீன்தாரர் என்று பெயர். 

♦ஆயக்கட்டு:-
ஒரு பாசன ஆதாரத்திலிருந்து ( ஆறு/குளம்/கால்வாய்)
நீர் பெற பதிவு செய்யப்படும் நிலம். 

♦மகசூல்-விளைச்சல்

♦நன்செய்/நஞ்சை:-
         பாசன வசதி கொண்ட நிலம்

♦புன்செய்/புஞ்சை :-
          பாசன வசதி குறைந்த நிலம்/
          மழையை நம்பி விவசாயம்      
          நடைபெறும் நிலம் 

♦கிராம தானம் :-
          ஒரு கிராமத்தில் பொது பயன்பாட்டுக்காக (சத்திரங்கள்/சுகாதார மையம் போன்றவற்றிற்கு)
நிலத்தை ஒதுக்குவது கிராம தானமாகும். 

♦பட்டா:-
           குறிப்பிட்ட ஒரு நிலமோ அல்லது காலிமனையோ யாருடைய பெயரில் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த் துறையால் வழங்கப்படும் ஆவணம். 

♦சிட்டா:-
            ஒரு கிராமத்தில் ஒரு உரிமையாளரின் பயன்பாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய ஆவணம். 

♦அடங்கல்:-
             ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பு/சர்வே எண்/பயன்பாடு/இடத்தின் அமைவிடம் போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணம். 

♦புல எண் :-
              சர்வே எண்/நில அளவை எண் 

♦விஸ்தீரணம் :- பரப்பளவு 

♦சுவாதீனம் :- 
             நிலத்தின் மீதான உரிமை 

♦நத்தம் புறம்போக்கு :-
              அரசுக்குச் சொந்தமான இடம் (தனிநபர் பயன்பாட்டில் இருந்த நிலம், குறிப்பிட்ட ஆண்டுகளாக வரி செலுத்தாவிடில் அந்த நிலம் புறம்போக்கு என அறிவிக்கப்பட்டு அரசு நிலமாகப் பதிவு செய்யப்படுவது. 

♦கிராம நத்தம் :-
                 ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புப் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம். 

♦அனுபோகம் :-
             பாத்தியதை/உரிமை

வியாழன், 8 ஜூலை, 2021

வேப்பம் பூ

SIDDHA HEALTH CARE:9047225560....
இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம். வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும். இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்...

பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்...

இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே...

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் அனைத்தும் ஓடிப்போகும் தானே...?
பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு...சார்.. இருக்கு.

வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...

கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி... என்பதெல்லாம் தாண்டி "சுகரு" க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..

இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம்..

எப்படி சாப்பிட..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..

இல்லைன்னா பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு "நெட்"டுல இருக்கு.. படிங்க.... எப்படியாச்சும் சாப்பிடுங்க...

நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும்.. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..

இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்கள்....

சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் ...என்ன ..? லேசா மெனக்கெடனும்.. அம்புட்டு தான்....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...