ஞாயிறு, 31 ஜனவரி, 2021

தூபங்களின்_நன்மைகள்

 தூபங்களின்_நன்மைகள். 


#சந்தனம்-தெய்வ கடாட்சம் கிட்டும்.

#சாம்பிராணியில்-  தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

#ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.

#அகிலி  - தூபமிட குழந்தை பாக்கியம் கிட்டும்.

#துகிலி - தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.

#துளசி தூபமிட - காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.

#தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.

#வலம்புரிக்காய் -  தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.

#வெள்ளைகுங்கிலியம் -  தூபமிட துஷ்ட ஆவிகள் இருந்த இடம் தெரியாது நீங்கிவிடும்.

#வெண்கடுகு - பகைமை எதிர்ப்புகள் விலகும்.

#நாய்கடுகு - துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.

#மருதாணிவிதை- சூனிய கோளாறுகள் நீங்கும்.

#கரிசலாங்கன்னி - மகான்கள்அருள்கிட்டும்.

#வேப்பம்பட்டை - ஏவலும் பீடையும் நீங்கும்.

#நன்னாரிவேர் - இராஜவசியம் உண்டாக்கும்.

#வெட்டிவேர் - சகல காரியங்களும் சித்தியாகும் .

#வேப்பஇலைதூள்-சகல நோய்களும் குணமாகும்.

#மருதாணிஇலை - இலட்சுமி கடாட்சமுண்டாகும்.

#அருகம்புல்தூள்- சகல தோஷமும் நீங்கும். 

#குறிப்பு: மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும். நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்.

கருப்பு குதிரை லாடம் பயன்கள்

 கருப்பு குதிரை லாடம் பயன்கள் :


1.வலது காலில் ஒடி தேய்ந்த கருப்பு குதிரையின் லாடத்தை தலை வாசல் கதவு மேல் பகுதியில் மாட்டுவதின் மூலம் தீய சக்திகளை அகற்றி நல்ல அதிர்ஷடத்தை வரவழைத்து குடுக்க கூடியது .


2.இது விட்டிற்கு மிக பெரிய பாதுகாப்பு வளையம் போல் செயல் படும்.கண் திஷ்டி.மற்றும் மாந்திரிக செயல்பாடுகளில் இருந்து நம்மை பாதுகாகக்கும்.


3.வேலை இல்லாமல் இருப்போர் மற்றும் வேலையில் இருந்து கொன்டு உயர் பதவி எதிர் பார்த்து காத்து கொன்டு இருப்போர். இந்த கருப்பு குதிரை லாடத்தை விட்டின் வடக்கு திசையில் மாட்டி வைத்தால் வேலை கிடைக்கும் மற்றும் வேலையில் உயர் பதவி கிடைக்கும் நன்றி


திருஷ்டி தோஷங்கள் போக்க தாந்திரீக பரிகார


குதிரையின் கால் குளம்புகளில் அடிக்கப்பட்டு, கழன்று விழுந்த குதிரை லாடம் எங்கேனும் உங்களுக்கு கிடைத்தால் வீட்டிற்கு கொண்டு வந்து, உங்கள் பிறந்த நாளைக்கு முன்பாக இரவில் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி, மறுநாள் அந்த குதிரை லாடத்தை உங்கள் வீட்டில் எங்கேனும் பத்திரமாக வைத்து விடுவதால், உங்களின் திருஷ்டி தோஷங்கள் அனைத்தையும் போக்கி நன்மைகளை அருளச் செய்யும் ஒரு சிறந்த தாந்திரீக பரிகார முறையாக இருக்கிறது.

மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி?

 🌺 மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி?


🍃தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை?


‘சிரஞ்சீவி’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை ‘சிரஞ்சீவி’ என்பர்.


அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர்.


மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள்.


இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்?


எமனுக்கு பயந்து 16 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.


மார்கண்டேயனுக்கு 16 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும்.....


அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.


ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு சீக்கிரம் உபநயனம் செய்வித்ததார்.


பின்னர் பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக என்று பணித்தார்.


மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.


சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற.....


அவர்களும், தீர்க்கா யுஷ்மான் பவ என்று வாழ்த்திவிட்டார்கள்.


பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 16 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று.


என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா.

இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள்.


அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார்.


இப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.


பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா?


ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.


பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று.


எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும்.


அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல…

உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது...


எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும்.


நமக்கு வரும் துன்பத்தை காப்பாற்றகூடியது பெரியோர்களின் ஆசீர்வாதம் என உணர்ந்து நாம் பெரியோர்களை வணங்கி நலம் பெறுவோம்.

கருப்பு குதிரை லாடம் பயன்கள் :

கருப்பு குதிரை லாடம் பயன்கள் :

1.வலது காலில் ஒடி தேய்ந்த கருப்பு குதிரையின் லாடத்தை தலை வாசல் கதவு மேல் பகுதியில் மாட்டுவதின் மூலம் தீய சக்திகளை அகற்றி நல்ல அதிர்ஷடத்தை வரவழைத்து குடுக்க கூடியது .

2.இது விட்டிற்கு மிக பெரிய பாதுகாப்பு வளையம் போல் செயல் படும்.கண் திஷ்டி.மற்றும் மாந்திரிக செயல்பாடுகளில் இருந்து நம்மை பாதுகாகக்கும்.

3.வேலை இல்லாமல் இருப்போர் மற்றும் வேலையில் இருந்து கொன்டு உயர் பதவி எதிர் பார்த்து காத்து கொன்டு இருப்போர். இந்த கருப்பு குதிரை லாடத்தை விட்டின் வடக்கு திசையில் மாட்டி வைத்தால் வேலை கிடைக்கும் மற்றும் வேலையில் உயர் பதவி கிடைக்கும் நன்றி

திருஷ்டி தோஷங்கள் போக்க தாந்திரீக பரிகார

குதிரையின் கால் குளம்புகளில் அடிக்கப்பட்டு, கழன்று விழுந்த குதிரை லாடம் எங்கேனும் உங்களுக்கு கிடைத்தால் வீட்டிற்கு கொண்டு வந்து, உங்கள் பிறந்த நாளைக்கு முன்பாக இரவில் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி, மறுநாள் அந்த குதிரை லாடத்தை உங்கள் வீட்டில் எங்கேனும் பத்திரமாக வைத்து விடுவதால், உங்களின் திருஷ்டி தோஷங்கள் அனைத்தையும் போக்கி நன்மைகளை அருளச் செய்யும் ஒரு சிறந்த தாந்திரீக பரிகார முறையாக இருக்கிறது.

சனி, 30 ஜனவரி, 2021

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.

நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

தலைவலி :

நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.

படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :

ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.

மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:

ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.

படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் :

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.

காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. #🤔தெரிந்து கொள்வோம்

வியாழன், 28 ஜனவரி, 2021

*மாடுகள் எப்போது உறங்கும்?*

*மாடுகள்  எப்போது உறங்கும்?*


"பரபரப்பான வாழ்க்கையில் பல பிரச்சனைகள்...
வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது...
தூங்க முடியவில்லை...

எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி"
என்றவாறே அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.

அப்போது மாலை நேரம்.
முனிவர் அவனிடம்,  "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன? அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன?  என பார்த்துவிட்டு வா" என்றார்.

சென்றவன் திரும்பி வந்து... "100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்று கொண்டு இருக்கின்றன" என்றான்.

"நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். 

அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்.

100 மாடுகளும் படுத்து தூங்க வேண்டும்,அதுதான் முக்கியம். சரியா? 

இந்த வேலைய முடிச்சுட்டு காலையில் திரும்பி வா..." என்றார்.

"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்து விட்டு... கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை ..." என்றான்.

"ஏன்?என்ன ஆச்சு?" என்றார் முனிவர்.

"100 மாடுகளையும் படுக்க வைக்க படாத பாடுகள் பட்டும் முடியவில்லை.

சில மாடுகள் தானாகவே தரையில் படுத்து விட்டன.

சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்க வைத்தேன்...

ஆனால்,  அனைத்து மாட்டையும் என்னால் ஒரே நேரத்தில் என்னால் படுக்கவைக்க முடியவில்லை.

சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன.

அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை... சாமி!

அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை!" என்றான்.

முனிவர் சிரித்தபடியே...

*"இதுதான் வாழ்க்கை.!

வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...!*

சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.

சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்...

ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...

*அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது...*

பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே..

தீர்க்க முடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் அல்லது காலத்தின் ஓட்டத்தில் ஒப்படைத்து விட்டு  உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்!" என்றார்.

முனிவரை வணங்கி விட்டு சென்றவன் சிலநாள் கழித்து வந்து முனிவரிடம் என்னால் தீர்க்க முடிந்த "சில பிரச்சினைகளை தீர்த்து விட்டேன்,தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன்.

இப்போதும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்.


*வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு மாடுகள் போன்றது...*

அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே.

ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது.

அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது.

ஆகவே சிலவற்றை இறைவனை பிரார்த்தித்து... அவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்து விட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.

வாழ்வு , பிரச்சனையாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மனம் தான் காரணம்.

இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டால் சுகமாய் வாழலாம்.

அறிவோம்...தெளிவோம்...!

காலை வணக்கம்!

புதன், 27 ஜனவரி, 2021

இன்று தைப்பூச திருவிழா. முருகனை வழிபட தயாராகி விட்டீர்களா?

      தைப்பூசம்...

இன்று தைப்பூச திருவிழா. 

முருகனை வழிபட தயாராகி விட்டீர்களா?

தைப்பூச வரலாறு.!

அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுளான முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

தைப்பூச வரலாறு :

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. அதனால் பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

எங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒருவரை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

கருணைக் கடலான சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன் என்னும் முருகன் ஆவார். 

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தார்.

அன்னை பார்வதிதேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். 

அம்பாள் அளித்த வேல்-ஐ ஆயுதமாகக் கொண்டே முருகன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அசுரர்களை திருச்செந்தூரில் வதம் செய்து தேவர்களை பாதுகாத்தார். 

அதனால் முருகரைப் போலவே அவரது வேலுக்கும் தனி சக்தியுண்டு. அசுரர்களை வதம் செய்ய உதவிய முருகப்பெருமானின் வேல்-ஐ பூஜிப்பதாலேயே தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தில் முருகனுக்கு பலவித பூஜைகள், நிவேதனங்கள் என செய்து ஆராதிப்பதுடன் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாராயணம் செய்யலாம். தைப்பூச தினத்தில் முருகன் அருள்பாலிக்கும் தலத்திற்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

சிறப்புகள் :

தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவருக்கு செலுத்தி பூஜை செய்வதை தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும்.

வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும், பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும்.

முருகனின் அறுபடை வீடுகளில் பழனிக்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்ட வழக்கமாக இருக்கிறது.

தைப்பூசத்தில் கோவில்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக தெரு முழுவதும் அழைத்து வருவர். இந்த நன்னாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.

மிக சிறப்பு வாய்ந்த இந்நாளில் எல்லாம் வல்ல முருகப்பெருமானிடம் நம்முடைய அனைத்து துயரங்களும் நீங்க பிரார்த்திப்போம்...!

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...