எதற்காக ஒருவன் கடவுளைத் தேட வேண்டும் ?
இந்த வாழ்க்கையே போதாதா ?
ஒரு அழகான கதை,
ஒருசமயம் பாக்தாத்தின் காலிப் ( அரசன் ) சுல்தான் - அல் - ரஸீத்து ( Al - Rashid ) , ஒரு சிறந்த ஏற்பாடு செய்தான் .
அதாவது தன்னிடம் உள்ள கலைப்பொருள்களையும் நகைகள் மற்றும் விலையுயர்ந்த உடைகள் போன்றவற்றை ஒரு கண்காட்சி போல நடத்தினான் .
மக்கள் திரண்டு ரசித்தார்கள் .
அப்பொழுது அந்த சுல்தான் திடீரென்று ஒரு வித்தியாசமான அறிவிப்பை செய்தான் .
அதாவது யார் யார் தான் விரும்பிய பொருள்களைத் தொடுகிறார்களோ , அது அவர்களுக்குச் சொந்தமாகும் என்பது தான் !
மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தொட்டு எடுத்துக் கொண்டார்கள் .
அப்பொழுது அரச பீடத்துக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு அடிமைப்பெண் சிறிது சிந்தித்தவாறு நின்றிருந்தாள் .
அப்பொழுது அந்த சுல்தான் தன் அரச பீடத்தில் வந்து உட்கார்ந்தான் .
உடனே அந்த அடிமைப்பெண் அந்த சுல்தானைத் தொட்டு விட்டாள் !
அந்தப் பெண்ணின் அறிவுக்கூர்மையைக் கண்டு வியந்த அந்த அரசன் , " நீ இந்த நாட்டுக்கு அரசனான என்னையே தொட்டு விட்டாய் . இனிமேல் இந்த நாடே உனக்குச் சொந்தம் ! என்றான் .
இந்தக் கதையை மீண்டும் ஒரு தடவை படியுங்கள் !
அப்பொழுது ஒரு மாபெரும் உண்மை உங்களுக்குப் புரியும் !
வாழ்வு என்பது மிகப்பெரியது அதன் வெளிச்சுற்று மிக ஆடம்பரமானது .
நீங்கள் இந்த வெளிச்சுற்றில் உள்ள ஒவ்வொரு ஆடம்பரப் பொருள்களையும் தொட்டு அடையப் போகிறீர்களா?
அல்லது அந்த வாழ்வுக்கு ஆதாரமான அதன் மையத்தில் இயங்கும் கடவுளைத் தொட விரும்புகிறீர்களா ?
என்னைப் பொறுத்தவரையில் , வாழ்வே தான் கடவுள் .
ஆனால் அந்த வாழ்வில் ஜோர்பாவும் இருக்கிறார் , ( கிரேக்க தேசத்து மிகுந்த உல்லாசி ) புத்தரும் இருக்கிறார் .
பெரும்பாலோர் வாழ்வு என்றால் வியாபாரம் , பணம் , அதிகாரம் , கௌரவம் , அரசியல் , குடும்பம் , பெண் இன்பம் என்று தான் நினைக்கிறார்கள் .
இவையெல்லாம் வாழ்வின் மிக மேலோட்டமான அம்சங்கள் .
இவைகளெல்லாம் கடவுள் என்ற அரண்மனையின் வாசல்கள் .
இவைகள் எல்லாம் சலிப்பை உண்டு பண்ணக் கூடியவை . சிற்றின்பத்தில் சேர்ந்தவை .
மாறாகப் பேரின்பம் என்பது அந்த அரண்மனைக்குள் இருக்கிறது . அங்கு உண்மையான வாழ்வு இருக்கிறது .
நீங்கள் வெறுமனே சாப்பிட்டுக் கொண்டும் , குடித்துக் கொண்டும் , திருமணம் செய்து கொண்டும் , பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும் , இருப்பது மிகவும் மேலோட்டமான வாழ்வு .
இவர்கள் தங்கள் ஆன்மாவைப் பற்றி கவலைப்படுவது இல்லை . மாறாக இன்னொரு சாரார் , கடவுளைப் பற்றியும் , அடுத்த உலகத்தைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டு , சாப்பிடுவது , குடிப்பது மற்றும் சந்தோஷமாக இருப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர் .
நீங்கள் எல்லா செயல்களிலும் உங்களுடைய பிரக்ஞைத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் .
எதையும் தேர்ந்தெடுக்காதீர்கள் .
ஒருசமயம் வாழ்வின் வெளிச்சுற்றில் இருக்கவும் . மறுசமயம் வாழ்வின் உள்மையத்தில் இருக்கவும் .
"உலகத்திலும் வாழ்விலும் ஒருங்கே இருக்க முயற்சி செய்யுங்கள் "
ஓஷோ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக