புதன், 24 நவம்பர், 2021

முருங்கைக்கீரை

*_முருங்கை_* 

இதன் அனைத்து பாகங்களும் உபயோகம் ஆனது . 

இதன் விதை காய், இல்லை, இலையின் ஈர்க்கு, மரம், வேர், பூ அனைத்துமே பயனுள்ளவை.

முருங்கைக்கீரை
இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கைல போக்குவது. 

மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். 

வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். 
பிற மருந்துகளின் பக்க விளைவுகைள அகற்ற இதன் சாறு உதவும். 

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். 

சிறு நீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகைள நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். 

கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். 

கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். 

முருங்கைக்கீரையின் இலைச் சாற்றைப் பிழிந்து 10மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். 
சிறந்த ஊட்ட மருந்து இதுவே.

 உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல்வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. 

குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

அக்கினி மந்தம், உட்சூடு, கண்தோஷம் யாவும் நீங்கும். உடல் சூட்டை தணித்து சமப்படுத்தும். 

பித்த சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும். 

உடலுக்கு நல்ல பலம் தரும். தாய்ப்பாலை சுரப்பிக்கும். தாதுவை விருத்தி செய்யும்.
முருங்கைப் பூ
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது புஷ்டி உண்டாகும்
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். 

வெள்ளி, 29 அக்டோபர், 2021

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
     குகனுண்டு குறையில்லை மனமே
          கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
     நெருப்பு வடிவாகத் தோன்றி
          நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)

விழிகளொரு பன்னிரண்டு
     உடையவனே என்று சொல்லி
          விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)

உலகமென்னும் கடல் தனிலே
     உடல் என்னும் ஓடமது
          உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)

ஓயாது ஒழியாது
     உன் நாமம் சொல்பவர்க்கு
          உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)

கருணையே வடிவமான
     கந்தசாமித் தெய்வமே உன்
          கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)

நெற்றியிலே நீறணிந்து
     நெறியாக உனை நினைந்து
          பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)

நெஞ்ச மதில் வஞ்சமின்றி
     நிர் மலனே நின்னடியைத்
          தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)

ஆறுபடை வீட்டினிலே
     ஆறுமுக வேலவனே
          ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)

திருப்புகழைப் பாடி உந்தன்
     திருவடியைக் கைதொழுது
          திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

கந்தர நுபூதி பாடி
     கந்தனே உன் கழலடியைக்
          கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

வேலவனே என்றுபாடி
     வேண்டிடும் அடியவர்க்கு
          வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)

மந்திரமும் தந்திரமும்
     மருந்துமாக நின்ற உந்தன்
          மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

தெள்ளு தினை மாவும்
     தேனும் பரிந்தளித்த
          வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)

வடிவேலா என்று தினம்
     வாழ்த்துகின்ற அடியவர்க்கு
          கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)

பரங்குன்று செந்திலும்
     பழனி மலை ஏரகம்
          பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).

(vEluNdu vinaiyillai mayiluNdu bayamillai
     guhanuNdu kuRaiyillai manamE
          kandhanuNdu kavalaiyillai manamE) ...... (vEluNdu)

neelakaNdan netrik kaNNil
     neruppu vadivAgath thOndri
          nirudhar kulaththai azhiththa nirmalan ... murugan ...... (vEluNdu)

vizhigaLoru panniraNdu
     udaiyavanE endru solli
          vizhigaLilE neer perukki nindrEn ... murugA ...... (vEluNdu)

ulagamenum kadal thanilE
     udal ennum Odamadhu
          unnadik karai adaiya aruLuvAi ... murugA ...... (vEluNdu)

Oyadhu ozhiyAdhu
     un nAmam sobavarkku
          uyar gadhithAn thandhiduvAi ... murugA ...... (vEluNdu)

karuNaiyE vadiva

புதன், 27 அக்டோபர், 2021

நமது சர்க்கரை நோய்க்கும், இரத்தக் கொதிப்பு நோய்களுக்கும் மூல காரணம்

அரிசியை உலையில் கொதிக்க வைத்து வடித்துச் சோறாக்குவது தமிழர்களின் மரபாக இருந்துவந்தது. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில், அதற்கு நேரமில்லை. 

Pressure Cooker என்னும் உயர் அழுத்த கலனிலும், electric rice cooker எனப்படும் மின்-சமையற்கலனிலும் சோற்றை சமைத்து வேலையை முடிக்கிறோம்.

இதனால் விளைவது என்ன?

பிரஷர் குக்கர் எனப்படும் உயரழுத்த கலத்தில் சமைக்கும்போது அரிசி 15 பௌன்ட் அழுத்தத்தில் 121 °C (250 °F), வெப்பத்தில் சமைக்கப்படுகிறது.
ஆனால், எந்தப் பொருளும், 97 டிகிரிக்கு அதிகமான வெப்பத்தில் சமைக்கப்பட்டால், அதிலுள்ள உயிர் சத்துக்கள் அழியும் என்று அறிவியல் சொல்லுகிறது. 

அரிசியில் 90% உள்ள கார்போஹைட்ரேட் தவிர, 8 சதவீதம் புரோட்டீனும், 2 சதவீதம் கொழுப்புச்சத்தும் உள்ளன. இது தவிர, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலெனியம், இரும்பு, ஃபோலிக் ஆசிட் எனப்படும் B-9 வகை வைட்டமின் சத்தும், தியாமின், நியாசின் என்னும் சத்துக்களும் உள்ளன.தியாமின் என்னும் சத்துப்பொருள், நமது இதயத்தைப் பாதுகாக்கும் அரிய பொருளாகும். தியாமின் குறைபாடு உள்ளவர்களுக்கே, ஹார்ட் அட்டாக் எனப்படும் இதயத்தாக்குதல்  நிகழ்கிறது.

நியாசின் என்பது, B-3 வகை வைட்டமின் ஆகும். இது, ரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது. நீரழிவு நோயை ஏற்படுத்தும் திறனை உடலுக்கு அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், மூளை செயல்பாட்டுக்கு உறுதுணையாகவும், நமது தோலின் ஆரோக்கியத்தைக் காக்கவும் தேவைப்படும் பொருளாக விளங்குகிறது.

இந்த சத்துக்களில், வைட்டமின் சத்துக்களும், தியாமின் என்னும் சத்துப்பொருளும், 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அழிந்துவிடுகின்றன. நியாசினும் அப்படியே.

கார்போ ஹைட் ரேட் எனப்படும் ஸ்டார்ச், 120 டிகிரி செல்சியசுக்கு சூட்டாக்கப்படும்போது, ஜெலட்டினைசேசன் (Gelatinization)
என்னும் பக்குவத்துக்கு மாற்றப்படுகிறது.  இந்த ஜெலட்டின் என்பதன் பொருள் பசை என்பதே ஆகும். சோறு பசையாகிறது என்பதே இதன் பொருள்...

ஆகவே, 121 டிகிரி வெப்பத்தில் நாம் சமைக்கும் அரிசிச் சோறு, எந்த சத்துமில்லாத பசையே ஆகும். இந்த பசை, விரைவில் கரைந்து, ரத்தத்தில் சர்க்கரை உற்பத்திக்குத் துணை போகிறது.

நமது சர்க்கரை நோய்க்கும், இரத்தக் கொதிப்பு நோய்களுக்கும் மூல காரணம், பிரஷர் குக்கர்களே ஆகும்.

சோற்றினை உலையில் இட்டு வடிக்கும் முறையில் வெப்ப அளவு 97 டிகிரியிலிருந்து 99 டிகிரிவரைதான் இருக்கும். இதற்கு மேல் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இங்கே இல்லை. 

சோற்றினை குக்கர் என்னும் காலனிடம் கொடுத்து நஞ்சை சமைத்து உண்ணாதீர்....

அப்பா கடைசி வரை தனி மனிதன்தான்

*●அப்பா கடைசி வரை தனி மனிதன்தான்.●●*

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

♧‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,

♧ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,

♧பேனாவை

ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.

இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது.

இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.

வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும்.

அப்பாவின் நச்சரிப்பு குறையும், என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்கு கிளம்பினான்....

கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.

நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.

கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.

அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.

தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்க்காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான்.

தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது.

குழாயை கையில்
எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள்.

மெதுவாக மாடிப்படியில் ஏறினான்.

நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.

விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?”

என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு. “நமக்கு இங்கு வேலை
கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.

பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.

அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.

”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?”

என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்....

இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை...

கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.

சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே

“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்....

“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.

”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.

கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம்.

அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை.

நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.

அதனால் நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.

அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும்.

அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.

வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான் மகன்.

○அப்பா நமக்காக எது செய்தாலும்
சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும் !!!

○உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவ தில்லை,
வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.

○நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால்,
கட்டுப்படுத்துவதால் தான்,

□நாம் காலரை தூக்கிக்கொண்டு கண்ணாடி முன் நின்று, அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே.

தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.

" ஆனால் தந்தை அப்படி அல்ல "

தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமர வைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.

●ஒரு சொல் கவிதை அம்மா !

●அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா !!..

●தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம்.

●தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்.

□○நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்.

□தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்.

அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.

*🙏🙏🙏எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை●*

புதன், 13 அக்டோபர், 2021

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

*சோற்றுக் கற்றாழை பயன்கள்..!*

*சோற்றுக் கற்றாழை பயன்கள்..!*

 தினமும் காலை வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெரும்.

 கற்றாழையில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேய்த்து வந்தால் கூந்தலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

 இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலின் இரத்த அழுத்தம் சீராக வைத்துக் கொள்ளலாம்.

 கற்றாழை ஜெல்லியை மோரில் கலந்து குடித்தால் உடல் வெப்பம் குறையும். அலர்ஜி மற்றும் கருத்திட்டுகள் மறையும்.

 கண்களில் அடிப்பட்டால் அல்லது இரத்தம் காரணமாக கண் சிவந்து வீங்கிவிடும் எனவே கற்றாழை ஜெல்லியை ஒரு துணியால் கட்டி இரவு தூங்கும் போது கண்களில் கட்டினால் வலி குறையும், மூன்று நாட்களில் நோய் குணமாகும்.

சரும நோய் உள்ளவர்கள் தினமும் கற்றாழை சாறை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். இரவு தூங்கும் போது கற்றாழையை முகத்தில் தடவி காலை வெண்ணீரால் முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.

சனி, 9 அக்டோபர், 2021

*காலங்கள் திரும்ப கிடைக்காது*

 *காலங்கள் திரும்ப கிடைக்காது*


🕸 *_இந்த உறவுகள் அற்புதமானவை. மனைவி என்ற ஒருத்தியோடு பேசிக் கொண்டே இருங்கள்; இல்லாவிட்டால் ஏதாவது சண்டையாவது போடுங்கள். பின்பு சமாதானம் ஆகி உறவாடுங்கள். எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும். ஒருவேளை அவள் முந்தி மரணமடைந்தால் அப்போது தெரியும், பிரிவு என்றால் என்னவென்று. ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை; வீணாக்க வேண்டாம். அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்._*


🕸 *_அடுத்து, பிள்ளைகள்; பள்ளி படிப்பு முடியும் வரைதான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள். அதன் பின் அவர்கள் உலகம் வேறு; அதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கவே மாட்டீர்கள். அப்போது நீங்கள் அவர்களோடு தொலைபேசி மூலமாக பேசக்கூடநேரம் பார்க்க வேண்டும்._*


🕸 *_இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள். இப்படி இல்லாமல், உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம். ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம். சும்மா அவர்களை பார்த்துக் கொண்டாவது இருங்கள்._*


🕸 *_அடுத்து உறவுகளும், உடன் பணி செய்யும் தோழர்களும்._*


🕸 *_இதைப்பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள் அடுத்த மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ இருந்தால், இது புரியும்._*


🕸 *_வட நாட்டில் இருந்தால் அங்கு உள்ள சர்மாவும், பாண்டேயும், தூபேயும், நம்மோடு நட்பாக இருப்பார்கள். ஆனால் தோள் மேல் கைபோட்டு "வாடா மாப்பிளே" என்று கூற முடியாது. ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கும்._*


🕸 *_எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! வாழ்கையை ருசியுங்கள்; அனுபவியுங்கள். காலமே ஒரு நாள் நம்மை தனிமைப்படுத்த போகிறது. அன்று யாரும் நம்மை வந்து பார்க்கப்போவது இல்லை. நாம் நினைத்தால் கூட வெளியே போக முடியாது._*


🕸 *_தனிமையே நம்மை கொல்லப்போகிறது._*


🕸 *_அதுவரை, கடவுள் நமக்கு தந்த சினேகங்களோடு பேசுவோம்; சண்டையிடுவோம்; கொஞ்சி குலாவுவோம்; ஏதாவது செய்வோம். ஆனால் தனிமை வேண்டாம்; அது மோசமானது. தற்கொலைக்குச் சமமானது._*


*காலங்கள் திரும்ப கிடைக்காது..*

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...