ஞாயிறு, 28 நவம்பர், 2021

*சேரும் இடமறிந்து சேர்!!*

*மனைவியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணருவீர்கள்.*

*குடிகாரனுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதை உணர்வீர்கள்.*

 *சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் -  அனைத்தையும் தானமாக கொடுக்கவேண்டும் என்று  உணர்வீர்கள்.* 

*அரசியல்வாதி முன் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் படித்தவை அனைத்தும் பயனற்றவை என்று உணர்வீர்கள்.* 

*ஆயுள் காப்பீட்டு முகவர் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - இறப்பது நல்லது என உணர்வீர்கள்.*

 *வணிகர்களுக்கு முன் 10 நிமிடங்கள் உட்காருங்கள் - உங்கள் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.* 

*விஞ்ஞானிகளுக்கு முன்பாக 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் சொந்த அறியாமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள்.* 

*நல்ல ஆசிரியர்களுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் - மீண்டும் ஒரு மாணவனாக மாற வேண்டும் என்று நினைப்பீர்கள்.* 

*ஒரு விவசாயி அல்லது தொழிலாளியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் போதுமான அளவு உழைக்கவில்லை என்பதை உணர்வீர்கள்.* 

*ஒரு சிப்பாயின் முன் 10 நிமிடங்கள் உட்காருங்கள் - உங்கள் சொந்த சேவைகளும் தியாகங்களும் அற்பமானவை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.* 

*ஆனால், முடியும் போதெல்லாம்*  *நல்ல நண்பனின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக உணர்வீர்கள்!* 

*சேரும் இடமறிந்து சேர்!!*😊
நல்லதை நினையுங்கள்
நல்லதே நடக்கும்....

சனி, 27 நவம்பர், 2021

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை: அதிர்ந்து போன மருத்துவர்கள்.

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை: அதிர்ந்து போன மருத்துவர்கள்.

இன்றைக்குத் தான் சாதாரண தலைவலிக்கே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். நம்முன்னோர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில் மூலிகைகளே பிரதானமாக இருந்தது.

அவர்களின் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் பூர்வீகம் மேலை நாடு என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் நம்மூரு காடுகளிலும் திபு, திபுவென வளர்ந்து விடுகிறது. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச் செடி மூன்றடி உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும்.

இவை வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடவை. இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. இவை வீடு, வணிக நிறுவனங்களிலும் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது. இந்த செடி நாய், பூனைகளுக்கும் ஆகாது.

இந்த இலைக்கு எழும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு. முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும். முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது அவரும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி இரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்கள அழிக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை சுளுக்கெடுத்து விடும். அதாவது போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும்.சுவாச பாதிப்பை போக்கும்.

இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.

இதேபோல் இந்த இலையை நிழலில் உலர்த்து, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

 அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, இதையெல்லா பொடியாக்கி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு எடுத்து அத்துடன் பணங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

உங்களை மன அழுத்தம் வாட்டுகிறதா? அதற்கும் கூட சதாப்பு இலை மருந்து தான். இந்த இலைகளை சிறிதுஎடுத்து, நன்கு மையமாக அரைத்து அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும்.

 இந்த இலைச்சாறை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இந்த இலையை நன்றாக அரைத்து அந்த விழுதை மிளகுத்தூள் சேர்த்து, கொஞ்சம் எடுத்து தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் ஊட்டினால் குழந்தைகளின் மார்பு சளி மட்டுப்படும்.

பக்கவாத பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருப்பார்கள். இவர்கள் சதாப்பிலைகளை நன்றாக அரைத்து உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவினால் சிறிது, சிறிதாக பாதிப்புகள் அகலும். இதேபோல் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் இது குணமாக்கும். இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீர் வற்றியதும் ஆறவைத்து தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை பருகினால் மூட்டுவலி சரியாகும். குடல் புழு அழியும். இரத்த நாள அடைப்புகள் இருந்தால் அதையும் போக்கிவிடும்.

ஞாபசக்தியை அதிகரிப்பது, கண் வீக்கம், வலியை போக்குவது என இதன் பயன்கள் இன்னும் அதிகம். உங்க ஊர் நாட்டு மருந்து கடைகளில் இந்த இலை கிடைக்கிறதா என முயற்சித்து பாருங்களேன்.

வெள்ளி, 26 நவம்பர், 2021

சித்தப் புருஷர் அம்மணி அம்மாள் திருவண்ணாமலை

ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல*.

அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.

அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.

ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது. 
தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.

குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.

பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.

அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.

இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.


அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.

பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.

அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார். 

மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.

171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.

திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார்.  திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.

அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருபமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.

*தன் வினை தன்னைச் சுடும்* பட்டினத்தார்

*தன் வினை தன்னைச் சுடும்*

பட்டினத்தார் துறவியாக போனபோது அவருடைய தாய் அவர் வயிற்றில் ஒரு சீலைத் துண்டைக் கட்டுகிறார். இந்தச் சீலைத்துண்டு என்று அவிழ்கிறதோ அன்று நான் இறந்துவிட்டேன் என்று அர்த்தம் என்று கூறி அனுப்புகிறாள்.

பரதேசியாக அலைந்த பட்டினத்தாரின் வயிற்றில் இருந்த சீலை ஒரு நாள் அவிழ்கிறது. தன்னை வயிற்றில் கட்டி சுமந்தவள் இறந்துவிட்டாள் என்பது வயிற்றில் கட்டிய சீலை அவிழ்ந்தபோது தெரிகிறது.

காடு மலைகளை தாண்டி கதறியபடி ஓடி வருகிறார்.

தாயின் உடலில் இருந்த விறகையெல்லாம் எடுத்து வீசுகிறார். குளிர்ந்த வாழை மட்டையில் தாயின் உடலை கிடத்தி, முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே, அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே, நானுமிட்ட தீ மூள்க மூள்கவே என்று பாடுகிறார்.
அந்தத் தமிழ் கேட்டு, சுடலையில் கிடந்த வாழை மட்டை தீப்பிடித்து எரிகிறது. அன்பு பெருக்கெடுத்து கண்களில் ஆறாய் ஓடுகிறது.

மகன் சொன்ன காதற்ற ஊசியின் தத்துவத்தால் எல்லாவற்றையும் கழித்துவிட்டு கழித்தல் அடையாளத்தை துறவாக்கிய பட்டினத்தாரைப் பார்த்த தமக்கை கோபமடைகிறாள். தமது குடும்பம் சந்தி சிரிக்கிறது என்று தப்பாகக் கணக்கு போடுகிறாள்.

ஒரு நாள் அவள் மனம் மாறுகிறது. அப்பத்தில் நஞ்சைத் தடவி அவருக்கு பிச்சையாக கொடுக்கிறாள்.

தன் வினை தன்னைச் சுடும். ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்றபடி ஓட்டில் தூக்கி வீசுகிறார். வீடு தீப்பற்றி எரிகிறது.

காரும், வீடும் வாங்கி, காசும் பணமும் வங்கியில் போட்டு, சகோதரங்களை நஞ்சு மனத்துடன் கொல்ல வரும் சகோதரங்களை வீட்டோடு சேர்த்துக் கொளுத்துகிறது அவருடைய தமிழ். உடன் பிறப்பை வெறும் போலிக் கௌரவத்திற்காக உலகிலிருந்தே பிரிக்க முயலும் சுயநலமிக்க ஓர் அக்காளை பிரித்தல் அடையாளமாகக் காண்கிறார்.

ஊருஞ்சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல. தேசத்திலே யாரும் சதமல்ல என்று எல்லா செல்லாக்காசுகளையும் வீசியெறிந்த வீரத்தமிழனாக அவர் வீதியில் நின்றார்.

இப்படி நின்ற அவரை அரச அதிகாரம் மிரட்டுகிறது. மரண தண்டனை விதிப்போம் என்ற மிரட்டலில் மக்களை அஞ்ச வைத்து ஆட்சி நடத்தும் கூட்டம் விழித்துக் கொள்கிறது. அவரை திருடன் பட்டம் கட்டி கழு மரத்தில் ஏற்ற உத்தரவிடுகிறது.

கழு மரத்தின் முன் நின்று, அவர் பாடிய தமிழில் கழுமரமே பற்றி எரிந்து சாம்பலாகிறது.

கடற்கரையோரத்தில் உள்ள உப்புக் கரும்பில் ஒரு கரும்பு இனிப்பாக பிறக்கும் அதைக் கண்டு பிடித்தால் மோட்சமடையலாம் என்று அது கூறுகிறது.

சுடலைக் கரும்பு இனிக்குமா என்று தினசரி கடித்து வந்த பட்டினத்தார்.

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்.

பட்டினத்தார் ஞானம் பெறுகிறார்.

பின் ஒரு நாள் கரும்பு இனிக்கிறது ....

இறைவனுடன் இரண்டற கலக்கிறார் ...

அவர் உடல் திருவெற்றிஊரில் சிவலிங்கமாக மாறிவிட்டது.

புதன், 24 நவம்பர், 2021

முருங்கைக்கீரை

*_முருங்கை_* 

இதன் அனைத்து பாகங்களும் உபயோகம் ஆனது . 

இதன் விதை காய், இல்லை, இலையின் ஈர்க்கு, மரம், வேர், பூ அனைத்துமே பயனுள்ளவை.

முருங்கைக்கீரை
இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கைல போக்குவது. 

மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். 

வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். 
பிற மருந்துகளின் பக்க விளைவுகைள அகற்ற இதன் சாறு உதவும். 

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். 

சிறு நீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகைள நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். 

கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். 

கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். 

முருங்கைக்கீரையின் இலைச் சாற்றைப் பிழிந்து 10மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். 
சிறந்த ஊட்ட மருந்து இதுவே.

 உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல்வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. 

குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

அக்கினி மந்தம், உட்சூடு, கண்தோஷம் யாவும் நீங்கும். உடல் சூட்டை தணித்து சமப்படுத்தும். 

பித்த சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும். 

உடலுக்கு நல்ல பலம் தரும். தாய்ப்பாலை சுரப்பிக்கும். தாதுவை விருத்தி செய்யும்.
முருங்கைப் பூ
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது புஷ்டி உண்டாகும்
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். 

வெள்ளி, 29 அக்டோபர், 2021

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
     குகனுண்டு குறையில்லை மனமே
          கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
     நெருப்பு வடிவாகத் தோன்றி
          நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)

விழிகளொரு பன்னிரண்டு
     உடையவனே என்று சொல்லி
          விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)

உலகமென்னும் கடல் தனிலே
     உடல் என்னும் ஓடமது
          உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)

ஓயாது ஒழியாது
     உன் நாமம் சொல்பவர்க்கு
          உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)

கருணையே வடிவமான
     கந்தசாமித் தெய்வமே உன்
          கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)

நெற்றியிலே நீறணிந்து
     நெறியாக உனை நினைந்து
          பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)

நெஞ்ச மதில் வஞ்சமின்றி
     நிர் மலனே நின்னடியைத்
          தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)

ஆறுபடை வீட்டினிலே
     ஆறுமுக வேலவனே
          ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)

திருப்புகழைப் பாடி உந்தன்
     திருவடியைக் கைதொழுது
          திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

கந்தர நுபூதி பாடி
     கந்தனே உன் கழலடியைக்
          கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

வேலவனே என்றுபாடி
     வேண்டிடும் அடியவர்க்கு
          வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)

மந்திரமும் தந்திரமும்
     மருந்துமாக நின்ற உந்தன்
          மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

தெள்ளு தினை மாவும்
     தேனும் பரிந்தளித்த
          வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)

வடிவேலா என்று தினம்
     வாழ்த்துகின்ற அடியவர்க்கு
          கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)

பரங்குன்று செந்திலும்
     பழனி மலை ஏரகம்
          பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).

(vEluNdu vinaiyillai mayiluNdu bayamillai
     guhanuNdu kuRaiyillai manamE
          kandhanuNdu kavalaiyillai manamE) ...... (vEluNdu)

neelakaNdan netrik kaNNil
     neruppu vadivAgath thOndri
          nirudhar kulaththai azhiththa nirmalan ... murugan ...... (vEluNdu)

vizhigaLoru panniraNdu
     udaiyavanE endru solli
          vizhigaLilE neer perukki nindrEn ... murugA ...... (vEluNdu)

ulagamenum kadal thanilE
     udal ennum Odamadhu
          unnadik karai adaiya aruLuvAi ... murugA ...... (vEluNdu)

Oyadhu ozhiyAdhu
     un nAmam sobavarkku
          uyar gadhithAn thandhiduvAi ... murugA ...... (vEluNdu)

karuNaiyE vadiva

புதன், 27 அக்டோபர், 2021

நமது சர்க்கரை நோய்க்கும், இரத்தக் கொதிப்பு நோய்களுக்கும் மூல காரணம்

அரிசியை உலையில் கொதிக்க வைத்து வடித்துச் சோறாக்குவது தமிழர்களின் மரபாக இருந்துவந்தது. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில், அதற்கு நேரமில்லை. 

Pressure Cooker என்னும் உயர் அழுத்த கலனிலும், electric rice cooker எனப்படும் மின்-சமையற்கலனிலும் சோற்றை சமைத்து வேலையை முடிக்கிறோம்.

இதனால் விளைவது என்ன?

பிரஷர் குக்கர் எனப்படும் உயரழுத்த கலத்தில் சமைக்கும்போது அரிசி 15 பௌன்ட் அழுத்தத்தில் 121 °C (250 °F), வெப்பத்தில் சமைக்கப்படுகிறது.
ஆனால், எந்தப் பொருளும், 97 டிகிரிக்கு அதிகமான வெப்பத்தில் சமைக்கப்பட்டால், அதிலுள்ள உயிர் சத்துக்கள் அழியும் என்று அறிவியல் சொல்லுகிறது. 

அரிசியில் 90% உள்ள கார்போஹைட்ரேட் தவிர, 8 சதவீதம் புரோட்டீனும், 2 சதவீதம் கொழுப்புச்சத்தும் உள்ளன. இது தவிர, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலெனியம், இரும்பு, ஃபோலிக் ஆசிட் எனப்படும் B-9 வகை வைட்டமின் சத்தும், தியாமின், நியாசின் என்னும் சத்துக்களும் உள்ளன.தியாமின் என்னும் சத்துப்பொருள், நமது இதயத்தைப் பாதுகாக்கும் அரிய பொருளாகும். தியாமின் குறைபாடு உள்ளவர்களுக்கே, ஹார்ட் அட்டாக் எனப்படும் இதயத்தாக்குதல்  நிகழ்கிறது.

நியாசின் என்பது, B-3 வகை வைட்டமின் ஆகும். இது, ரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது. நீரழிவு நோயை ஏற்படுத்தும் திறனை உடலுக்கு அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், மூளை செயல்பாட்டுக்கு உறுதுணையாகவும், நமது தோலின் ஆரோக்கியத்தைக் காக்கவும் தேவைப்படும் பொருளாக விளங்குகிறது.

இந்த சத்துக்களில், வைட்டமின் சத்துக்களும், தியாமின் என்னும் சத்துப்பொருளும், 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அழிந்துவிடுகின்றன. நியாசினும் அப்படியே.

கார்போ ஹைட் ரேட் எனப்படும் ஸ்டார்ச், 120 டிகிரி செல்சியசுக்கு சூட்டாக்கப்படும்போது, ஜெலட்டினைசேசன் (Gelatinization)
என்னும் பக்குவத்துக்கு மாற்றப்படுகிறது.  இந்த ஜெலட்டின் என்பதன் பொருள் பசை என்பதே ஆகும். சோறு பசையாகிறது என்பதே இதன் பொருள்...

ஆகவே, 121 டிகிரி வெப்பத்தில் நாம் சமைக்கும் அரிசிச் சோறு, எந்த சத்துமில்லாத பசையே ஆகும். இந்த பசை, விரைவில் கரைந்து, ரத்தத்தில் சர்க்கரை உற்பத்திக்குத் துணை போகிறது.

நமது சர்க்கரை நோய்க்கும், இரத்தக் கொதிப்பு நோய்களுக்கும் மூல காரணம், பிரஷர் குக்கர்களே ஆகும்.

சோற்றினை உலையில் இட்டு வடிக்கும் முறையில் வெப்ப அளவு 97 டிகிரியிலிருந்து 99 டிகிரிவரைதான் இருக்கும். இதற்கு மேல் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இங்கே இல்லை. 

சோற்றினை குக்கர் என்னும் காலனிடம் கொடுத்து நஞ்சை சமைத்து உண்ணாதீர்....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...